கொரோனாவை தடுக்க டெட்டாலை குடிக்க வைத்த கிறுஸ்தவ மதபோதகர் – 59 பேர் உயிரிழந்த பரிதாபம்!
தென் ஆப்பிரிக்க பாதிரியார் ரூபஸ் பாலா தன் மத போதனைக்கு பிறகு கொரோனா தாக்காமல் இருக்க டெட்டாலை கொடுத்து குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. டெட்டாலை குடித்த 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் கவலைக்கு இடம். போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத போதனைக்கு வந்தவர்களிடம் இந்த பாதிரியார் டெட்டாலை குடிப்பதால் கொரோனா மட்டுமின்றி வேறு எந்த நோய் இருந்தாலும் ஏசுவின் கிருபையால் குணமடைந்துவிடும் என வாக்குறுதி அளித்ததாகவும், அதை நம்பி அம்மக்கள் டெட்டாலை பருகியதாகவும் கென்யா டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பாதிரியார் கூறுகையில் “டெட்டால் உடம்புக்கி கெடுதல் என எனக்கு தெரியும், இருப்பினும் ஏசு என்னை பருகுமாறு உத்தரவிட்டார், நான் தான் முதலில் பருகினேன்” அது மட்டுமின்றி வாட்சப்பில் டெட்டால் குடித்து பலர் கொரோனாவில் இருந்து தப்பித்ததாக வீடியோக்களை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
