2 நாள் பயணமாக ராஜ்நாத் சிங் அந்தமான் சென்றார்

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக நேற்று அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு புறப்பட்டுச்சென்றார். இந்த பயணத்தில் அவர், பாதுகாப்பு தயார்நிலை செயல்பாடுகள் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார். அந்தமானில் அவர் கேம்பெல் வளைகுடா, கார்னிக், திக்லிபூர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவப்பிரிவுகளுக்கும் சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொள்ளையன் தப்பியோட்டம்: 6 போலீசார் பணியிடை நீக்கம்