பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்னும் கைது செய்யப்படாதது ஏன்? விசாரணைக் குழு கண்டறிந்தது என்ன?
பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவரும், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பு காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தபோது அவர் கைது செய்வது உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது.
ஏனென்றால் போலீஸுக்கு அளிக்கப்பட்ட புகாரில் பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததான குற்றச்சாட்டுடன் கூடவே ஒரு பதின்பருவ மல்யுத்த வீரருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் அடங்கும்.
பிரிஜ் பூஷன் சிங் எல்லா குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை விட சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மிகவும் தீவிரமானது என்று இந்திய சட்டம் கருதுகிறது.
அதனால்தான் இதுபோன்ற வழக்குகளுக்காக 2012-ம் ஆண்டு பிரத்யேகமான POCSO சட்டம் இயற்றப்பட்டது.
இச்சட்டத்தில் மைனருக்கு பாதுகாப்பு அளிப்பது, குறிப்பிட்ட கால கெடுவுக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரிப்பது போன்ற விதிகள் உள்ளன.
2019 ஆம் ஆண்டில் இதன் கீழ் தண்டனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டன மற்றும் அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டனையிலிருந்து மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டது.
பிரிஜ் பூஷன் சிங் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
