உலகில் அணு ஆயுதத் தாக்குதல் ஆபத்து: யுக்ரேன் போர் அதற்குக் காரணமாக அமைந்துவிடுமா?

யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக மிரட்டி வருகிறார். ஆனால் பெலாரஸ் நாட்டுக்கு அவற்றை அனுப்பிவைத்தது முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த அணு ஆயுதங்கள் யுக்ரேன் நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அங்கு இருந்து போலந்து மற்றும் லிதுவேனியா போன்ற நேட்டோ நாடுகளையும் குறிவைக்க முடியும்.

இத்துடன், 500 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தக் கூடிய ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு பொறுப்பற்ற செயல் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். யுக்ரேனின் ஜபோரிஷியா அணுமின் நிலையத்தையும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது.

ஆனால் தற்போதைய உலகில் ரஷ்ய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் மட்டும் கவலைக்குரியவை என்பதை விட, அணு ஆயுத தயாரிப்பில் அமெரிக்காவையும் ரஷ்யாவையும் சமன் செய்ய சீனாவும் விரும்புகிறது என்பது கவனிக்கத்தக்கது.
அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் எல்லா இடங்களிலும் காலாவதியாகின்றன என்ற போதிலும், புதிய ஒப்பந்தங்கள் எதுவும் இயற்றப்படவில்லை.

இந்த கட்டுரை மூலம் உலகில் அணுகுண்டு தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதா என்பதை அறிய முயற்சிப்போம்.