பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த கேரள பாதிரியார் மர்மச்சாவு
கேரளாவில் பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த பாதிரியார் ஒருவர் மர்ம முறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு மிஷனரியில் தங்கிய கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் முல்லக்கல் பிரான்கோ மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிஷப்பை கைது செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தததால் அவர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த குரியகோஷ் என்ற பாதிரியார் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு…
Read More









