பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த கேரள பாதிரியார் மர்மச்சாவு

பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த கேரள பாதிரியார் மர்மச்சாவு

கேரளாவில் பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த பாதிரியார் ஒருவர் மர்ம முறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு மிஷனரியில் தங்கிய கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் முல்லக்கல் பிரான்கோ மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிஷப்பை கைது செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தததால் அவர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த குரியகோஷ் என்ற பாதிரியார் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு…

Read More

தமிழக பா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்?

தமிழக பா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்?

தமிழக பா.ஜ.,வின் தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து, அடுத்த தலைவராக யார் வரப் போகிறார் என்ற பரபரப்பு, தமிழக பா.ஜ., வட்டாரங்களில் துவங்கி இருக்கிறது. இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது : இரு முறை, தமிழக பா.ஜ., தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் இருந்து விட்டதால், அவரையே தொடர்ந்து தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் நீடிக்க வைக்க முடியாது. அதனால், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில், அகில இந்திய பா.ஜ., தலைமை தீவிரமாகி இருக்கிறது. கட்சியின் மாநில பொது செயலர்களாக இருக்கும் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள், அடுத்த தலைவருக்கான பட்டியலில்…

Read More

பிரமோஸ்க்கு போட்டியாக அதிவேக ஏவுகணை

பிரமோஸ்க்கு போட்டியாக அதிவேக ஏவுகணை

பிரமோஸ்க்கு போட்டியாக சீனா தயாரித்துள்ள அதிவேக ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது. அண்டை நாடான சீனாவில் உள்ள, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள,”ஹோங்க்டா’ என்ற நிறுவனம், அதிக வேகமாக பயணிக்கக் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சுரங்க வெடி பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், முதல் முறையாக, ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைக்கு இணையானதாகக் கூறப்படும் இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தானுக்கு விற்க, சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மன்னார் வளைகுடாவில் தங்கள் எளிமையான வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த 21-ந் தேதி இலங்கை கடற்படையால் அவர்கள் படகுகளோடு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க செல்பவர்களுக்காக…

Read More

கேரளவில் 12 மணி நேர பந்த் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

கேரளவில் 12 மணி நேர பந்த் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து கேரளாவில் இன்று 12 மணிநேரம் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்  கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கலில் குவிந்த போராட்டக்காரர்கள் கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தினார்கள். இதை பார்த்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். 5 10 முதல் 10 வயது வரை…

Read More

‛ரா’ மீது புகார்: இலங்கை மறுப்பு

‛ரா’ மீது புகார்: இலங்கை மறுப்பு

இந்திய உளவு அமைப்பான, ‘ரா’ என்னை கொல்ல சதி செய்கிறது என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக வந்த தகவலை, அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று, வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பேசிய அதிபர் சிறிசேனா, ‘ இந்திய உளவு அமைப்பான ரா என்னை கொல்ல சதி செய்கிறது. ஆனால், இந்த விஷயம் பிரதமர் மோடிக்கு தெரியாது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் செயல்பாடுகள் அந்நாட்டு அதிபர் டிரம்புக்கு முழுமையாக தெரியாது. அது போல தான் இது’ என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்….

Read More

பக்தர்கள் போராட்டம் : 144 தடை உத்தரவு

பக்தர்கள் போராட்டம் : 144 தடை உத்தரவு

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக புதனன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, சபரிமலை பகுதியில் போராட்டக்களத்தைச் சேர்ந்த பெண்கள், சபரிமலைக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இளம் வயது பெண்களை தடுத்து நிறுத்துவதற்காக நிலக்கல், பம்பை, எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்கார்கள் குவிந்துள்ளனர். பெண் பக்தர்கள் யாரும் தடுத்து நிறுத்தப் படமாட்டார்கள் என போலீசார் கூறி இருந்தனர். பம்பை அருகே மகளிர் காவல்நிலையம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலைக்கு வந்த 45 வயது பெண் பக்தர்கள் தடுத்து…

Read More

அமைச்சர் அக்பர் ராஜினாமா

அமைச்சர் அக்பர் ராஜினாமா

பெண் பத்திரிக்கையாளர்களின் தொடர் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜெ.அக்பர் ராஜினாமா செய்தார். அக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அவர் மீது அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பிரியா ரமணிக்கு ஆதரவாக மேலும் 19 பெண் பத்திரிக்கையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். தி ஏசியன் ஏஜ் பத்திரிக்கையில் பணியாற்றிய போது அக்பர் தங்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். அக்பர் தொடர்பான வழக்கில் கோர்ட் தங்களின் சாட்சியங்களையும் கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். பிரியா ரமணி தனி ஆள் இல்லை எனவும், தங்களுக்கு அக்பர் அளித்த பாலியல்…

Read More

செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்

செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். கடல், ஓ.. காதல் கண்மணி, காற்று வெளியிடை படங்களால் சோர்ந்து போயிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் சற்று உற்சாகமளிக்கக்கூடும். தாதாவான சேனாதிபதிக்கு (பிரகாஷ் ராஜ்) மூன்று மகன்கள். சேனாதிபதியும் அவரது மனைவியும் (ஜெயசுதா) காரில் போய்க்கொண்டிருக்கும்போது அவரைக் கொல்ல சிலர் முயல்கிறார்கள். சேனாதிபதியின் மகன்களான வரதன் (அரவிந்த் சாமி), எத்தி (சிம்பு), தியாகு (அருண் விஜய்) ஆகிய மூவரும் தந்தையைக் குறிவைத்தவனைப் பழிவாங்க விரும்புகிறார்கள். போட்டி தாதாவான சின்னப்பதாஸ் (தியாகராஜன்), மனைவியின் தம்பியான செழியன் (சிவா ஆனந்த்), மருமகள் (ஜோதிகா), மகன்கள் என பலர் மீதும் கோபம் திரும்புகிறது. படத்தின் காப்புரிமைTWITTER இதற்கு…

Read More

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுதினம் நடை திறக்கப்படும் நிலையில், கேரளா, தமிழகத்தை தொடர்ந்து இலங்கையிலும் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கி உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு கேரளா வில் உள்ள பந்தளம் அரச குடும் பத்தினர், தந்திரி குடும்பத்தினர் மற்றும் பெண்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி, மாநிலம் முழுவதும் தொடர்…

Read More
1 229 230 231 232 233 425