சிறுவாணி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசு விதிகளை மீறுகிறதா?
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் நடவடிக்கை விதிகளை மீறி நடப்பதாக எழுந்துள்ள சர்ச்சை, மீண்டும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி மற்றும் பில்லூர் திட்டம். கோவை மாவட்டத்திற்கு பில்லூர், சிறுவாணி திட்டங்களிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது. சிறுவாணி திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணிர் குடிநீர் தேவைக்காக பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதே போல் பில்லூர் திட்டத்திலிருந்து பெறப்படும் தண்ணீர் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. பின்னர் அங்கிருந்து பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. அங்கிருந்து அத்திக்கடவு மற்றும்…
Read More









