சிங்கப்பூரில் 164 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்பு
சிங்கப்பூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் சீரமைப்புப் பணிகள் முடிந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் லீ சீன் லூங் பங்கேற்றார். சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ பகுதியில் 164 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. கடந்த 1978-ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு இக்கோயிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தது. இதையடுத்து, 1979, 1992, 2005 என 3 முறை சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ரூ.29 கோடி செலவில் 4-வது முறையாக இக்கோயிலை சீரமைக்கும் பணி கடந்த 2016-ல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்து அறநிலைய வாரியம் சார்பில் இப்பணி நடந்தது. இப்பணியில் உள்ளூர்…
Read More








