24 வருட உறைநிலை கருவை கொண்டு பெண் குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க இளம்பெண்

24 வருட உறைநிலை கருவை கொண்டு பெண் குழந்தை பெற்றெடுத்த அமெரிக்க இளம்பெண்

அமெரிக்காவின் டென்னசி பகுதியில் வசித்து வருபவர் டினா கிப்சன் (வயது 26).  இவரது கணவர் பெஞ்சமின் கிப்சன்.  இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் 25ந்தேதி எம்மா ரென் என்ற பெண் குழந்தை பிறந்தது.  எம்மா ரென் பிறந்த பின் 6 பவுண்டுகள் எடையுடன் 20 இஞ்ச் நீளமுடன் இருந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், எம்மா ரென் பிறப்பதற்கு 24 வருடங்களுக்கு முன் அதன் கரு உருவாகியுள்ளது. அதன்பின்னர் அது நீண்ட காலம் உறை நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி தேசிய கரு தான மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 1992ம் ஆண்டு முதல் எம்மாவின் கரு பாதுகாக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், உறை நிலையிலான கரு இந்த வருட…

Read More

‘எனது கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா பேட்டி

‘எனது கணவரின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ காவல் ஆய்வாளர்  பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா பேட்டி

ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர்  பெரிய பாண்டியன் சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது மனைவி பானுரேகா கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர்  பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சாலைபுதூரில் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் எனது கணவர் பெரியபாண்டியனும் இருந்தார். கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் எனது கணவர் மற்றும் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 3…

Read More

இன்று பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்; லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்

இன்று பெயர்ச்சியடைந்தார் சனிபகவான்; லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம்

திருநள்ளாறில் புகழ்பெற்ற சனிபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சனி தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இந்த கோவிலில் சனி பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது. சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடை வதையொட்டி  இங்கு சனிப் பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி விழா நேற்று இரவு முதல் தொடங்கியது. சூரிய மண்டலத்தை சுற்றிவர அதிக நாட்கள் எடுக்கும் கிரகம் சனி. ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் வரை இருப்பார். 12 ராசிகளையும் வலம் வர 30 ஆண்டுகள் ஆகும். எனவே சனிப்பெயர்ச்சி முக்கியத்துவம்…

Read More

திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி: நடை அடைப்பு

திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து பெண் பலி: நடை அடைப்பு

திருச்செந்தூர் வள்ளிக் குகை அருகில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள பிராகார மண்டபம், திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இன்னும் எத்தனை பேர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி கோயிலின் நடை சார்த்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில், திருச்செந்தூர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் பிரசித்தி பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. முருகன் கோயிலுக்கு அருகில் வள்ளிக்குகை உள்ளது. இதனை புராணத் தொடர்பு கொண்ட குகை என்பார்கள். இந்த வள்ளி குகைக்கு அருகில், பிரகாரத்தை…

Read More

8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம்

8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம்

தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள். இதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி இன்று (சனிக்கிழமை) 8-வது நாளாக நீடிக்கிறது. கடலோர காவல்படை, கடற்படையைச் சேர்ந்த 33 கப்பல்கள், 12 விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விமானங்கள் தரும் தகவல்களின்…

Read More

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்

ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீட்டிற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு…

Read More

நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

நடுரோட்டில் நடனம்: முஸ்லிம் பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்கு

திருவனந்தபுரம்: எய்ட்ஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில், ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடிய மூன்று முஸ்லிம் பெண்கள் குறித்து, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தவர்கள் மீது, கேரள மகளிர் கமிஷன் வழக்கு பதிவு செய்துள்ளது. நடுரோட்டில் திடீர் நடனம் கேரள மாநிலம், மலப்புரம் நகரின் முக்கியமான சாலை சந்திப்பில் கடந்த டிச., 1ம் தேதி மூன்று முஸ்லிம் பெண்கள் திடீரென, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவர்கள் பல் மருத்து கல்லூரி மாணவிகள். உலக எய்ட்ஸ் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடுரோட்டில் நடமாடினர் என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால், மூன்று பெண்களும் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து தலையை துணியால் மூடிக்…

Read More

‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்

‘ஒக்கி’ புயல் தாண்டவம்: 4 நாட்களாகியும் கரை திரும்பாத குமரி மீனவர்கள்; கண்ணீருடன் சாலை மறியல் செய்த உறவினர்கள்

கடலுக்குச் சென்ற மீனவர்கள் நான்கு நாட்களாகியும் இன்னும் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை விரைவில் கண்டுபிடித்துத் தரக்கோரியும் குமரி, சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் மீனவர் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள மீனவர் கிராமம் சின்னத்துறை. அங்குள்ள மீனவர் குடும்பங்கள், ”கடலில் மாயமான நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் வீடு வந்து சேரவில்லை, காணாமல் போனவர்கள் குறித்த முறையான தகவல் கிடைக்கவில்லை, கடலோர காவல்படையின் தேடுதலில் தங்களுக்குத் திருப்தி இல்லை. மீனவர்களுக்குத் தரப்பட்டுள்ள பிரத்யேக எண் அடிப்படையில் தேடுவது குறித்து கடலோர காவல்படையினர் பரிசீலிக்கவில்லை” உள்ளிட்ட புகார்களை முன்வைத்து சின்னத்துறை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ்…

Read More

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹாரி – மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது. விளம்பரம் இசை, பூக்கள், வரவேற்பறை உள்ளிட்ட அனைத்து சேவைகளின் செலவுகளையும் அரச குடும்பம் ஏற்கிறது. திருமண தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் .இங்கிலாந்து திருச்சபையில் செல்வி மார்கெலுக்கு திருமணத்துக்கு முன்பு ஞானஸ்நானம் செய்யப்படுகிறது. திருமணத்தின் அனைத்து அம்சங்களுக்குமான செயல்முறை குறித்து முப்பத்து மூன்று வயதான இளவரசர் ஹேரியும், செல்வி மார்கெலும் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாகவும். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொது மக்கள் உணரத் தேவையான திட்டங்கள் குறித்து தீவிரமாக வேலை செய்து வருவதாகவும் இளவரசர் ஹேரியின் செய்திதொடர்பாளர் ஜேசன் நாஃப் தெரிவித்துள்ளார்….

Read More

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 155 ஆக உயர்வு

வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. அல்-ரவுடாக் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தாக்குதலில் 155 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும் அந்நாட்டு மீடியா தகவல்கள் தெரிவிக்கிறது. மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. வடக்கு செனாயில் ஐ.எஸ். ஊடுருவல்காரர்களுடன்…

Read More
1 68 69 70 71 72 77