பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா சென் , கிம் கர்தாஷியனுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா சென் , கிம் கர்தாஷியனுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா சென் தனது புகைப்படத்தை வெளியிட்டவுடன் கிம் கர்தாஷியனுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சனம் செய்து உள்ளனர். சுஷ்மிதா சென் 1994ல் பெமினா மிஸ்.இந்தியா டைட்டில் வென்றார்.   இரண்டாம் இடத்தில் வந்தார் ஐஸ்வர்யா ராய். அதே வருடத்தில் பிரபஞ்ச அழகி பட்டத்தையும் சுஷ்மிதா வெல்ல, ஏகப்பட்ட பாராட்டு. சுஷ்மிதா சென் 18 வயதிலேயே பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர்.  காரணம் இந்தப் படத்தை வென்ற முதல் இந்திய பெண் இவர்தான். தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்துவர் சுஷ்மிதாசென். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.  இவருக்கு 42 வயது ஆகிறது. 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். 41 வயதிலும்…

Read More

இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க ராணுவத்திற்கு அதிபர் சிறிசேன உத்தரவு

இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க ராணுவத்திற்கு அதிபர் சிறிசேன உத்தரவு

இலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என அதிபர் சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார். இலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அக்டோபர்.31ஆம் தேதிக்குள் அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.

Read More

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஐ நெருங்கியது

இந்தோனீசியா நிலநடுக்கம், சுனாமி: பலி எண்ணிக்கை 1350ஐ நெருங்கியது

இந்தோனீசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,347 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவிக்கிறது. முன்பு இந்த எண்ணிக்கை 844 ஆக இருந்தது. முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அந்த முகமை தெரிவித்துள்ளது. வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தோனீசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியவர்களை மீட்புப்…

Read More

அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை

அமெரிக்காவின் உயரிய விருதுக்கு காந்தி பெயர் பரிந்துரை

அமெரிக்க பார்லி.,யால் வழங்கப்படும் மிக உயரிய ‘தங்கப்பதக்கம்’ விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பார்லி.,யின் சார்பில் சிறப்பாக சமூக தொண்டாற்றிய அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரப்படுத்தப்படும். இவ்விருது அரிதாக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க பார்லி., உறுப்பினர் கரோலின் மலோனே, அஹிம்சைக்காக போராடிய காந்தியடிகளுக்கு அமெரிக்காவின் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு பரிந்துரை செய்து தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். கடந்த 23ம் தேதி(செப்.,23) தாக்கல் செய்த இத்தீர்மானத்தை ஆதரித்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த பார்லி., உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் துல்சி கபார்ட் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். முன்னதாக இவ்விருது அமெரிக்கர் அல்லாத…

Read More

ரன்விர்ஷா பண்ணை வீட்டில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல்

ரன்விர்ஷா பண்ணை வீட்டில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல்

காஞ்சிபுரம்: தொழிலதிபர் ரன்ஷிர்ஷா பண்ணை வீட்டில், ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தலைமையில் நடந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்விர்ஷா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி குவியல் குவியலாக தொன்மையான சிலைகளை பறிமுதல் செய்தனர்.  இதனை தொடர்ந்து, ரன்விர் ஷாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. திருவையாறில், அவருக்கு சொந்தமான அரண்மனையில் சோதனை நடந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மொகல்வாடி என்ற கிராமத்தில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 50க்கும் மேற்பட்ட பழங்கால…

Read More

ஓட்டாவா மாநகரில் கல்விச் சபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அலெக்ஸ் உதயன் சிவசம்பு

ஓட்டாவா மாநகரில் கல்விச் சபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அலெக்ஸ் உதயன் சிவசம்பு

ஓட்டாவா வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நேரடியாகச் சென்று தங்கள் ஆதரவை வழங்கவும்1 613 276 7253 என்னும் இலக்கத்தை அழைக்கவும்

Read More

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் இன்று கையளிக்கப்படவுள்ளது

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கவுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளான, சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தில்லைராஜ் உள்ளிட்ட 10 அரசியல் கைதிகளையும் பார்வையிட்டனர். இதன்போதே, 10 அரசியல் கைதிகளும் கையெழுத்திட்ட, ஜனாதிபதிக்கான கடிதம், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சேனக பெரேராவிடம் கையளிக்கப்பட்டது….

Read More

தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்

தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்

உலகில் வர்க்க வேறுபாடுகள் தொடர்பாக இடதுசாரி கருத்துகளை விதைத்த அரசியல் ஞானிகள் எழுதிவைத்த பல விடயங்கள் இன்னும் எரிந்து கொண்டே இருக்கின்றன. கொம்யூனிசத்தை அழித்து விட்டோம் என்று அமெரிக்க அரசியல் பீடம் உரத்துச் சத்தமிட்டாலும் இடதுசாரிச் சிந்தனைகள் இன்னும் அழிந்து போகாமலே இருக்கின்றன. இந்த உண்மை தற்போது இலங்கையில் நிதர்சனமாகவே தெரிகின்றது. நாம் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிவைத்த ஒரு விடயத்தை மீண்டும் ஒரு தடைவ இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம் “ஆள்பவர்களும் ஆள நினைப்பவர்களும் என்னும் ஆளும் வர்க்கத்தோடு இணைந்து செயற்படவே எண்ணுவார்கள்” என்பதே எமது கருத்தாக முன்னர் எழுதினோம். தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்…

Read More

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக் கியுடன் சென்று இரத்த தானம் செய்து விட்டு சென்ற அடையாளம் தெரியாத நபர் தொடர்பில் பல கோணங்களில் விசா ரணை இடம்பெற்று வருகிறது. தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் இந்து கல்லூரியில் அன்றைய தினம் இரத்தான முகாம் இடம்பெற்றது. அப்போது அங்கு இரத்தம் வழங்குவதற்கு இரு நபர்கள் சென்றுள்ளார்கள். அவர்களில் ஒருவர் உடற் பரிசோதனை மேற்கொண்டுவிட்டு நிறை அளப்பதற்கு சென்றுள்ளார். அப்போது இடுப்பில் இருந்த தனது கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடன் வந்தவரிடம் ஒப்படைத்து விட்டு நிறையை சரிபார்த்துள்ளார். பின்னர் இரத்தம் வழங்கி விட்டு சென்றுள்ளார். இது…

Read More
1 232 233 234 235 236 425