நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது ஏற்புடையதல்ல என்கின்றார் மாவை சேனாதிராசா
நினைவேந்தல் நிகழ்வுகளை மாநகர சபை உட்பட உள்ராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொரத்தமானது அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் (காக்கா அண்ணா) கடந்த ஞாயிறு அன்று மாவை சேனாதிராஜா அவர்களது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலை மையை சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தினார் என அறியவந்தது. சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இந்த விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் விடுத்த வேண்டுகோளையும் அவர் ஏற்றுக்கொண்டார். திலீபன் நினைவு நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருப்…
Read More








