எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை புதிய அமைச்சர் செங்கோட்டையன் சேர்ப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை புதிய அமைச்சர் செங்கோட்டையன் சேர்ப்பு

இன்று மாலை பதவி ஏற்க போகும் புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது. புதிதாக செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சரவை பட்டியல் விவரம் வருமாறு:- எடப்பாடி பழனிச்சாமி- முதல்-அமைச்சர் * செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், * திண்டுக்கல் சீனிவாசன் – வனம், * செல்லூர் ராஜூ – கூட்டுறவு, * தங்கமணி – மின்சாரம், * எஸ்.பி.வேலுமணி – நகராட்சி, * ஜெயக்குமார் – மீன்வளம், * சி.வி.சண்முகம் – சட்டம், * அன்பழகன் – உயர்கல்வி, * சரோஜா – சமூகநலம், * எம்.சி.சம்பத் – தொழில், * கருப்பண்ணன் – சுற்றுசூழல், * காமராஜ் – உணவு, * ஓ.எஸ்.மணியன் –…

Read More

அரசியல் சூழல்: ட்விட்டரில் அரவிந்த்சாமி – மாதவன் அலசல்

அரசியல் சூழல்: ட்விட்டரில் அரவிந்த்சாமி – மாதவன் அலசல்

தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து ட்விட்டர் தளத்தில் அரவிந்த்சாமி மற்றும் மாதவன் அலசி விவாதித்து வருகிறார்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் அரவிந்த்சாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு “நமது காபந்து முதல்வர் இன்று அலுவலகம் சென்று மற்ற எம்.எல்.ஏக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என விரும்புகிறேன். முதலில் மக்கள், பிறகுதான் அரசியல்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அரவிந்த்சாமியின் ட்வீட்டை மேற்கோளிட்டு மாதவன், “நம்பிக்கையையும், இயல்பு வாழ்க்கையும் பழைய மாதிரி…

Read More

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்

`யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். இப்படம் குறித்த முழு தகவலை கீழே பார்க்கலாம். பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ்  சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார்.  எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது `யாதுமாகி நின்றால்’ என்ற படத்தின் மூலம்  இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையகதையாக கொண்ட படம் தான் `யாதுமாகி நின்றால்’.   பின்னனி…

Read More

சசிகலா சபதம்: கமல்ஹாசன் கிண்டல்?

சசிகலா சபதம்: கமல்ஹாசன் கிண்டல்?

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை முன் னிட்டு சசிகலா நேற்று பெங்களூரு கோர்ட் டில் சரண் அடைந் தார். பெங்களூரு செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், சமாதியின் மீது கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார். இந்நிலையில் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார் இப்படி: “திருடனு கூவிகினு ஜனம் தெர்திச்சுன்னா அவன் எஸ்கேப் ஆயிடணுமா வேணாவா? நின்னு நிதானமா …….. கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ ஜனமா, நாயகமா?” என்று குறிப்பிட்டிருந்தார். பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் சசிகலா சபதம் செய்ததை கிண்டல் செய்தே அவர் இந்த கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் – சசிகலா ஆகியோரிடையே நடந்துவரும்…

Read More

தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்

தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்

தெலுங்கில் அறிமுகம் செய்த தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக இருக்கிறது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். அது ஏன் என்று கீழே பார்க்கலாம்.   தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் தற்போது அஜித், விஜய் படங்களில் நடித்து  வருகிறார்.  காஜல் அகர்வால் 2007-ல் வெளியான தெலுங்கு ‘லட்சுமி கல்யாணம்’ படம் மூலம் தெலுங்கு பட உலகில் காலடி வைத்தார். இந்த  படத்தில் இவரை அறிமுகம் செய்து வைத்தவர் தெலுங்கு இயக்குனர் தேஜா.  காஜல் அடுத்து, ‘நேனே ராஜு நேனே மந்திரி’ படத்தில் ராணா ஜோடியாக நடிக்கிறார். இதை இயக்குபவர் தேஜா. 10  வருடங்களுக்குப் பிறகு இவருடைய இயக்கத்தில் காஜல்அகர்வால்…

Read More

சசிகலா போயஸ் கார்டன் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை: கவுதமி

சசிகலா போயஸ் கார்டன் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை: கவுதமி

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். தீர்ப்புக்குப் பிறகு அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். ஜெயலலிதா மறைவிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் கவுதமி, தற்போது “சசிகலாவுக்கு, கூவத்தூரிலிருந்து பரப்பன அக்ரஹாரத்துக்கு நேரடியாக வழி இருக்கிறது. அவர் வேதா நிலையம் திரும்ப எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஜெயலலிதாவுக்கான நியாயம் வேண்டும்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Read More

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்கள் சந்திப்பு

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பிக்கள் சந்திப்பு

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்தது. இத்தகவல் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை அங்கீகரிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதில் சில விளக்கம் கேட்டதுடன், அதிமுக அதிருப்தி எம்.பி. சசிகலா புஷ்பா அளித்த புகார் மீதும் தேர்தல் ஆணையம் அதிமுகவிடம் விளக்கம் கேட்டுள்ளது. சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ள நிலையில், கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியது. சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது சட்டவிரோதமானது…

Read More

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைப்பு

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைப்பு

இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார். அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வான எடப்பாடி பழனிச்சாமி தமக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தார். இடைக்கால முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் தமக்கு பெரும்பான்மை இருக்கிறது; சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இச்சந்திப்பின் முடிவில்…

Read More

ஆட்சி அமைக்க யாரை ஆளுநர் அழைப்பார்? இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு

ஆட்சி அமைக்க யாரை ஆளுநர் அழைப்பார்? இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு

யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதில் இன்று முக்கிய முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசியலில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பரபரப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து முதல் – அமைச்சர் பதவியை ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் 2 மாதம் மிகத்திறமையான, சீரான, அமைதியான ஆட்சியைத் தந்தார். இந்த நிலையில் முதல் – அமைச்சர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டதால் கடந்த 5-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகினார். 7-ந்தேதி அவர் சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார். அவரை தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆதரித்தனர். என்றாலும் 120-க்கும் மேற்பட்ட…

Read More

சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்? – சிறைத்துறை நிர்வாகம் விளக்கம்

சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும்? – சிறைத்துறை நிர்வாகம் விளக்கம்

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படும் என சிறைத் துறை நிர்வாகத்திடம் விசாரித்த போது, “கடந்த முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்த வி.வி.ஐ.பி. என்பதால் வெளியில் இருந்து உணவு, மருந்துகள், உடை,ஏ.சி.வசதி, உதவியாளர்கள் உள்ளிட்ட பல வசதிகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் மட்டுமே. முதல்வர் இல்லை என்பதால் அவருக்கு அத்தகைய வசதிகள் வழங்கப்படாது. சசிகலா தரப்பில் தங்களுக்கு நீரிழிவு உள்ளிட்ட…

Read More
1 385 386 387 388 389 425