சசிகலாவின் முதலமைச்சர் கனவு தகர்ந்தது: 10 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது
ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் கடந்த 5-ந் தேதி ராஜினாமா செய்தார். அதேசமயம் பொதுச்செயலாளரான சசிகலா, முதல்வர் பதவிக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதற்கேற்ப, அவர் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சசிகலா புதிய முதல்-அமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்பட்டது. பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவை சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். சசிகலா தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார். தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதால் தனது…
Read More









