ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வுகள் கோரி மும்பை ஐகோர்ட்டில் ஆர்யன் கான் முறையீடு

ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வுகள் கோரி மும்பை ஐகோர்ட்டில் ஆர்யன் கான் முறையீடு

பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி, கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில்,  25 நாட்களுக்குப் பிறகு  ஆர்யன் கானுக்கு  மும்பை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வாரந்தோறும் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது மும்பை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும். இந்த நிலையில்,  வாரந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, போதைப்பொருள் வழக்கு விசாரணை, டெல்லி…

Read More

அமெரிக்கா-சீனா இடையே பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது – இம்ரான்கான்

அமெரிக்கா-சீனா இடையே பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது – இம்ரான்கான்

’அமைதி மற்றும் வளர்ச்சிநிறைந்த தெற்கு ஆசியா’ என்ற தலைப்பில் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார். கருத்தரங்கள் அமெரிக்கா – சீனா இடையேயான உறவு குறித்து அவர் பேசினார். இம்ரான்கான் பேசுகையில், பனிப்போர் நோக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி வருகிறது. நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றன. இந்த குழுக்கள் உருவாகுவதை தடுக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும். எனென்றால், எந்த குழுக்களுடனும் நாம் இணையக்கூடாது. அமெரிக்கா மற்றும் சீனாவுடன் பாகிஸ்தான் சிறந்த உறவு கொண்டுள்ளது. அந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் அதிகரித்து வரும் விரிசலை நிறுத்த பாகிஸ்தான் பாலமாக செயல்பட விரும்புகிறது’ என்றார்.

Read More

இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 14 பேர் உயிரிழப்பு

இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, மனைவி உள்பட 14 பேர் உயிரிழப்பு

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று(டிச., 8) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் உள்ள சூழ்நிலையில், ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம்…

Read More

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் – விவசாய அமைப்பினர் அறிவிப்பு

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் – விவசாய அமைப்பினர் அறிவிப்பு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்பின் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக்கு பின் விவசாய அமைப்பின் தலைவர் குர்நாம் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- , அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கும் வரை டெல்லியில் போராட்டம் தொடரும். விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். வழக்குகளை வாபஸ் பெறும் முன் போராட்டத்தை கைவிட்டால் அது எங்களுக்கு சிக்கலாகும். இவ்வாறு அவர் கூறினார். வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு கடிதம் எழுதிய நிலையில் வேளாண் சங்கம் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Read More

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

ஏற்கெனவே, உலகின் பல பகுதிகளில் பொது வாழ்க்கைக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக உள்ளது. ஒரு பிரெஞ்சு மருத்துவராகவோ, நியூசிலாந்து ஆசிரியராகவோ அல்லது கனடாவின் அரசு ஊழியராகவோ இருந்தால், பணிக்குச் செல்ல கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசியை மறுக்கும் மக்களுக்கு இந்தோனீசியா, அரசு பலன்களை மறுக்கலாம். க்ரீஸ் நாடு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்குகிறது. பிப்ரவரி மாதத்திற்குள் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரியா தயாராக உள்ளது. ஆஸ்திரியர்களுக்கு தடுப்பூசி வலுக்கட்டாயமாகப் போடப்படும் என்று இதற்கு அர்த்தமில்லை. மருத்துவ மற்றும் மத விதிவிலக்குகள் இருக்கும். இருப்பினும், தடுப்பூசி போடாத பெரும்பகுதி மக்கள், அதை செலுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அபராதத்தை எதிர்கொள்கிறார்கள்….

Read More

புயல் எதிரொலி; மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடி உத்தரவு

புயல் எதிரொலி; மக்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடி உத்தரவு

நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது.  இதனால், மழை, வெள்ளம் என மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாக வலுப்பெற்று மத்திய வங்க கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாக உள்ள இந்த புயலுக்கு ‘ஜாவத்’ என்று பெயர் சூட்டப்பட உள்ளது.  இது சவுதி அரேபியா வழங்கிய பெயராகும்.  புயலுக்கான பட்டியலில் இந்த பெயர் தான் இடம் பெற்றுள்ளது. ‘ஜாவத்’ என்றால் அரபு மொழியில் கருணை என்று அர்த்தம். …

Read More

குருத்வாராவில் மரபு மீறல்; மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் அழகி

குருத்வாராவில் மரபு மீறல்; மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் அழகி

பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவில் மரபுகளை மீறி புகைப்படம் எடுத்து அவமதித்ததாக குற்றச்சாட்டிற்கு உள்ளான மாடல் அழகி சவுலேஹா, தன் நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சீக்கிய புனித தலமான கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது. நம் நாட்டில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான சீக்கியர்கள் இங்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் பாக்., மாடல் அழகி சவுலேஹா, உடைகளை விளம்பரம் செய்ய குருத்வாரா முன் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், டில்லியின் சீக்கிய குருத்வாரா நிர்வாகக்குழு தலைவருமான மன்ஜிந்தர் சிங் சிர்சா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைஅடுத்து…

Read More

“விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க” – ப.சிதம்பரம் விமர்சனம்

“விவாதம் இல்லாத நாடாளுமன்ற ஜனநாயகம் வாழ்க” – ப.சிதம்பரம் விமர்சனம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே இந்த விவசாய சட்டம் மூன்றும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரண்டு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் கூட்டத்தொடரின் எஞ்சிய அமா்வுகளில்…

Read More

3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!

3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!

வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது. இதனைத்தொடர்ந்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். ஓராண்டுக்கு மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள்.

Read More

கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

கனமழை; எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. சென்னை உள்பட இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி  ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More
1 69 70 71 72 73 425