இஸ்ரேலில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அறிவிப்பு
இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 16 வயதிற்கு மேற்பட்ட 81 சதவீத பேருக்கு இரண்டு தவணை கொரோனா கடந்த தடுப்பூசி ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில் பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Read More









