இந்திய தடுப்பூசி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு கம்பனிகள் படையெடுப்பு !!

இந்திய தடுப்பூசி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு கம்பனிகள் படையெடுப்பு !!

ஐதராபாதில் கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை வெளிநாடுகளின் துாதுக்குழுவினர் நேற்று பார்வையிட்டனர். கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியில் நம் நாட்டின் சில நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இவற்றில் சிலவற்றின் தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்யும் நிலையில் உள்ளன.இந்த நிறுவனங்களின் பணிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பல்வேறு நாடுகளின் துாதர்கள் குழுவின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் விளக்கப்பட்டது.இதையடுத்து பல்வேறு நாடுகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட துாதர்கள் குழுவினர் நேற்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வந்தனர். அங்கு கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்னணி உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களான ‘பாரத் பயோடெக்’ மற்றும் ‘பயாலஜிகல் இ’ ஆகியவற்றை…

Read More

இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது

இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையில் புரெவி புயல் கரையை கடந்தது

வங்காள விரிகுடாவில் உருவான புரெவி புயல், இலங்கையின் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு இடையிலான கடற்பரப்பின் ஊடாக சில நிமிடங்களுக்கு முன்பாக கரையை கடந்துள்ளது. இது இலங்கையை கடக்கும்வரை புயலாகவே காணப்படும் என வளி மண்டலவியல் திணைக்களம் கூறுகிறது. வங்காள விரிகுடாவில் உருவாகும் பெருமளவிலான புயல்கள், இலங்கைக்கு அருகே மையம் கொண்டவாறு இந்தியாவை நோக்கி நகரும். ஆனால், புரெவி புயல், இலங்கைக்குள் 20 வருடங்களுக்குப் பிறகே ஊடுருவி தமிழகம் நோக்கி நகருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார். இதற்கு முன்பு 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இலங்கைக்குள் புயல் ஒன்று ஊடுருவிச் சென்றது. தற்போதைய புரெவி புயலும் அதை ஒத்ததாகவே…

Read More

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல் 120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல்  120 முதல், 145 கி.மீ. வேகத்தில் இரவு புதுச்சேரியில் கரையை கடக்கும்

வங்கக் கடலில் உருவாகிய, ‘நிவர்’ புயல், அதி தீவிரமாக உருவெடுத்து வருகிறது. மணிக்கு, 120 முதல், 145 கி.மீ., வேகத்தில், இன்று(நவ.,25) இரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயலால், தமிழகம், புதுச்சேரியில், நேற்று முன்தினம் இரவு முதல், கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பஸ், ரயில்கள் போக்குவரத்து முடங்கின. மக்கள் நடமாட்டத்தை தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுதும், இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நிவர்’ புயல் காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், சென்னை உட்பட பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. புயல் மற்றும் மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, மக்களை காக்க, தமிழக…

Read More

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் முன்னதாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று மாபெரும் தனிப்பெரும்பான்மை பெற்றது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். பதவியேற்றவுடன் தாங்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து அவர்கள் இப்போதே ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். ஜனநாயகக் கட்சி எப்போதும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவின்…

Read More

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை கிடையாது – தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை கிடையாது – தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் பங்கேற்று, ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி நடைபெறும். சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து இந்த விழாவிற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தேசிய…

Read More

‘லவ் ஜிகாத்’ – கல்லுாரி மாணவி ஹரியானாவில் படுகொலை

‘லவ் ஜிகாத்’ – கல்லுாரி மாணவி ஹரியானாவில் படுகொலை

ஹரியானாவில், 21 வயது கல்லுாரி மாணவி, சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; இது, ‘லவ் ஜிகாத்’ என, பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், நகரின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரிதாபாத் மாவட்டத்தின், பல்லப்கர் என்ற இடத்தில், 21 வயது கல்லுாரி மாணவி, தேர்வு எழுதிவிட்டு, கல்லுாரியை விட்டு வெளியே வந்தார்.அப்போது, அங்கு வந்த இருவர், மாணவியை தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றனர். மாணவி மறுத்தார். இதையடுத்து, அவரை துப்பாக்கியால் சுட்டு, இருவரும் தப்பினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும்…

Read More

கொரோனா சூழலில் சபரிமலை கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டும் அனுமதி

கொரோனா சூழலில் சபரிமலை கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டும் அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நிபுணர் குழு கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் சபரிமலை கோவிலில் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக நிபுணர் குழு ஒன்றை கேரள அரசு அமைத்துள்ளது. அதன்படி சபரிமலை கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படலாம். பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் நிலக்கல்லில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பக்தர்கள் தாங்கள் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கு சான்றிதழ் வைத்திருக்க…

Read More

2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் கிட்: ரிலையன்ஸ் அறிமுகம்

2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் கிட்: ரிலையன்ஸ் அறிமுகம்

2 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிய உதவும் ‛கிட்’ டினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் கொரோனா பரவும் சூழலில் பரவலை கட்டுப்படுத்த கொரோனா பரிசோதனைகள் அவசியமாகிறது. மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றன. தற்போது COVID-19 RT-PCR கி்ட்டுகள் வாயிலாக நடத்தப்படும் இத்தகைய பரிசோதனைகளின் முடிவுகளை அறிய 24 மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், ரிலையன்ஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் லைப் சயன்ஸ் நிறுவனம் புது வகையான கிட் ஒன்றினை வடிவமைத்துள்ளது. கொரோனா வைரஸின் 100க்கும் மேற்பட்ட மரபுக் கூறுகளை ஆராய்ந்து தனித்துவம் வாய்ந்த தொழில் நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே இந்த…

Read More

இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்

இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் முக்தியடைந்தார்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி நிறுவன தலைவரும் வீரத்துறவியுமான ராமகோபாலன் இன்று (செப்.,30) முக்தியடைந்தார். அவருக்கு வயது 94. இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் வீரத்துறவி ராமகோபாலன் (94). கடந்த 27 ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவர் விரைவில் குணம்பெற வேண்டி, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளட்ட பலர் வேண்டி கொண்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் முக்தியடைந்தார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள்…

Read More

இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் சங்கராச்சாரியார் அருளாசி வழங்கினார்

இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.ஆதிமூலத்திற்கு விஜயேந்திரர் சங்கராச்சாரியார் அருளாசி வழங்கினார்

ஐ.என்.எஸ்., எனப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள, ‘தினமலர்’ நாளிதழின், கோவை பதிப்பு வெளியீட்டாளர், இல.ஆதிமூலத்திற்கு, காஞ்சி சங்கராச்சாரியார், ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் அருளாசி. சனாதன தர்மத்தில், ‘உண்மை’ மிகச் சிறந்த நல்லொழுக்கமாக பார்க்கப்படுகிறது. சிந்தனை, வாக்கு, செயல்களில் உண்மையை கடைப்பிடிப்பது தர்மமாகும்.நம் பாரம்பரியத்தில், பேசப்பட்ட வார்த்தைகள், பல்வேறு வகைகளில் எழுத்து வடிவில் துல்லியமாக பதிவிடப்பட்டுஉள்ளன. அது கற்களில், தாமிர பத்திரத்தில், கையெழுத்து பிரதிகள் என, பல ரூபங்களில் உள்ளது. பேசப்பட்ட வார்த்தைகள் மற்றும் எழுதப்பட்ட வார்த்தைகள் மூலம், உண்மை பாதுகாக்கப்பட்டு, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நம் சாஸ்திரத்தில், எழுத்துக்கள் கடவுள்களாக கருதப்பட்டு, அக் ஷர…

Read More
1 13 14 15 16 17 35