கொரோனா தடுப்பு மாத்திரைகள் இங்கிலாந்து அரசு ஒப்புதல்

கொரோனா தடுப்பு மாத்திரைகள் இங்கிலாந்து அரசு ஒப்புதல்

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.  தடுப்பூசியை விட மாத்திரை தயாரிப்பது எளிது என்பதால், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என நிபுணர்கள் தகவல்…

Read More

டெல்லியில் ஒரே மாதத்தில் 1,200 பேருக்கு டெங்கு பாதிப்பு

டெல்லியில் ஒரே மாதத்தில் 1,200 பேருக்கு டெங்கு பாதிப்பு

தலைநகர் டெல்லியை டெங்கு காய்ச்சல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. அங்கு இந்த ஆண்டு இதுவரை ஆயிரத்து 530 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆயிரத்து 200 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது 4 ஆண்டுகளில் அதிகபட்ச பாதிப்பு ஆகும். டெல்லியில் டெங்குவால் நேற்று முன்தினம் 5 பேர் இறந்திருக்கின்றனர். இதனால் இக்காய்ச்சலால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவும் 4 ஆண்டுகளில் அதிகம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளியன்று எப்போதெல்லாம் பட்டாசு வெடிக்கலாம் என்ற நேரக்கட்டுப்பாட்டை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணிவரை பசுமை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், நீதிமன்றங்கள், மத வழிபாட்டுத்தளங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவர்க்க வேண்டும். தீப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். காற்று மாசை ஏற்படுத்தாத வகையில் மக்கள் பொறுப்புடன் பண்டிகையை கொண்டாட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் – மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் – மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் மருத்துவமனைக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர். தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையின் 5-வது மாடியில் உள்ள சாதாரண அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்திற்கு ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்….

Read More

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – மத்திய ஆய்வுக் குழுநடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – மத்திய ஆய்வுக் குழுநடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – மத்திய ஆய்வுக் குழு

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – மத்திய ஆய்வுக் குழுநடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – மத்திய ஆய்வுக் குழுநடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல – மத்திய ஆய்வுக் குழு

வெளியிட்டுள்ளது. அதில்,  நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17-ல் விவேக் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை. ஏப்ரல் 15-ல் கொரோனா தடுப்பூசிபோட்டுக்கொண்ட நடிகர் விவேக் மாரடைப்பால் ஏப்ரல் 17-ல் உயிரிழந்தார். உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஆர்யன் கான் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஆர்யன் கான் நீதிமன்றக் காவல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 3-ந்தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சாதாரண பயணிகள் போல சென்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, போதை விருந்து நடத்தியதாக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் அர்பாஸ் மெர்சந்த், மாடல் அழகி முன்முன் தமேச்சா உள்ளிட்டவர்களும் சிக்கினர். இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைதாகி உள்ளனர். இதில் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சந்த், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு…

Read More

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரஷ்யாவில் ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரஷ்யாவில் ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு

ரஷியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ரஷியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையிலும் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாததே ரஷியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் என மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர். ரஷியாவில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்ததாத 60 வயதிற்கு மேற்பட்டோர்…

Read More

தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26,90,633 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,948 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,418 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,40,627 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை…

Read More

பல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் – அரசு தரப்பு

பல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் – அரசு தரப்பு

மும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு போதை விருந்து நடந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து கப்பலில் இருந்த பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். தற்போது அவர் ஆர்தர் ரோடு சிறைச்சாறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஆர்யன்கான் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு…

Read More

சென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

சென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் சங்கர் ஜிவால்.  இவர் பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More
1 30 31 32 33 34 77