5 ஆண்டுகளில் 600 பேருக்கு இதய துடிப்பை நிறுத்தாமல் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் சாதனை
சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பா.மாரியப்பன், கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 600 பேருக்கு இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறையில் பணியாற்றி வருபவர் பேராசிரியர் டாக்டர் பா.மாரியப்பன். விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 17 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தனியார் மருத்துவமனைகளில் இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை (Beating Heart CABG) அரசு பொது மருத்துவமனையில் செய்ய இவர் திட்டமிட்டார். இதற்காக பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு டாக்டர்கள்…
Read More









