கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நோக்கி இந்தியா

கோஹ்லி இரட்டை சதம்: வெற்றியை நோக்கி இந்தியா

மும்பை டெஸ்டில் ‘புயல்’ வேகத்தில் ரன் சேர்த்தகேப்டன் கோஹ்லி இரட்டை சதம் கடந்தார். இவரதுஅபார ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி வெற்றியின்விளிம்பில் உள்ளது. இங்கிலாந்து அணி மீண்டும்ஏமாற்றம் அளித்தது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல்மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2–0 எனமுன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட்,மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில்,முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 451 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி அபாரம்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி,ஜெயந்த் யாதவ்…

Read More

தென் கொரியாவை தாக்க வடகொரியாவின் போர் ஒத்திகை! உஷார் நிலையில் ராணுவம்

தென் கொரியாவை தாக்க வடகொரியாவின் போர் ஒத்திகை! உஷார் நிலையில் ராணுவம்

இதுவரையில் வடகொரியா நான்கு முறை அணுகுண்டுசோதனைகளை நடத்தியுள்ளது. அதில் குறிப்பாக கடந்தஜனவரி மாதம் 6 ஆம் திகதி திடீரென அணுகுண்டை விடபல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துவருகின்ற இந்த நாடு இவ்வாறான அணுகுண்டுசோதனைகளை நடத்தி வருகின்றமை பல நாடுகளின்மத்தியிலும் சந்தேகக்கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை காரணமாக வடகொரியா மீது அமெரிக்காவும், பாதுகாப்பு கவுன்சிலும்கடுமையான பொருளதார தடைகளை விதித்துள்ள பட்சத்திலும் அந்த நாடு, தற்காப்புஎன்ற போர்வையில் தொடர்ந்து இவ்வாறான சோதனைகளை நடத்தி வருகிறது. இதேவேளை தென்கொரிய அதிபரின் மாளிகையை அழிக்க வடகொரியா திட்டமிட்டுவருவதாகவும் அதற்காக பெரிய போர் ஒத்திகை ஒன்றினை நடத்தி வருவதாகவும்தகவல் கசிந்துள்ளன. இந்த ஒத்திகையை தொலைநோக்கி வழியாக…

Read More

இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

இலங்கை அணியில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர்

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26-ந் திகதி தொடங்குகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் விகும் சஞ்ஜெய இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக விளையாடாமல் இருந்த தலைவர் மெத்யூஸ், விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சந்திமால் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். சிம்பாப்வே தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய உபுல் தரங்கவிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்னவிற்கு இடம்…

Read More

தென்கொரிய அதிபருக்கு எதிராக குற்ற விசாரணை தீர்மானம்

தென்கொரிய அதிபருக்கு எதிராக குற்ற விசாரணை தீர்மானம்

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் செனூரி கட்சி சார்பில் பார்க் ஜியுன் ஹை அதிபராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொரிய அரசியல் ஊழலில் ஈடுபட்ட சொய் சூன்-சில்லுடன், பார்க் ஜியுன் ஹை நெருங்கி பழகி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே பார்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்தன. இதை வலியுறுத்தி தலைநகர் சியோல் மற்றும் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக மறுத்தால் அவரை…

Read More

தலாக் முறை குரான் போதனைகளுக்கு எதிராக உள்ளது: உயர் நீதிமன்றம்

தலாக் முறை குரான் போதனைகளுக்கு எதிராக உள்ளது: உயர் நீதிமன்றம்

மும்முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முஸ்லிம் சட்டம் குரான் போதனைகளுக்கு எதிரானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி சுனீத் குமார் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை அல்லது உடனடி விவாகரத்து முறை மிகவும் கொடூரமானது, இத்தகைய நடைமுறை இந்தியாவை ஒரு தேசமாக பின்னடைவு காணச் செய்துள்ளது என்றார். “இந்தியாவில் பயன்படுத்தப்படும் முஸ்லிம் சட்டம் இறைத்தூதர் அல்லது குரான் புனித போதனைகளின் உணர்வுகளுக்கு எதிரான திசையில் செல்கிறது. இதே போன்ற தவறான கருத்தாக்கம்தான் மனைவியின் விவாகரத்து செய்யும் உரிமையையும் சீர்குலைத்து வருகிறது. மேலும், இஸ்லாத்தில்…

Read More

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை

சென்னை, கவிஞர் வைரமுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனைக்காக இன்று சென்றார். இதையடுத்து அவர் பற்றிய வதந்தி பரவியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் நான் முழு மருத்துவ பரிசோத னைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அதுபோன்று இப்பொழுதும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். நான் முழுமை யாக நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவ குறிப்பு- தெரிவிக்கிறது. எனவே பரபரப்பான செய்தி வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். என்மீது அன்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதிக் கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அவரது…

Read More

சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

சென்னை மெரினா கடற்கரையில்  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்    முதல்வர் புரட்சித்தலைவி அம்மா உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

சென்னை, டிச. 6 தமிழக மக்களை மட்டுமல்ல, உலகத் தமிழினத்தை கண்ணீரில் தவிக்கவிட்டு, அமரரான வரலாற்று சகாப்தம், இரும்புப் பெண்மணி, அன்னை தெரசாவின் அன்பை பெற்றவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., அன்னை இந்திரா உள்ளிட்ட தலைவர்களின் நன்மதிப்பை பெற்று, புரட்சித்தலைவரின் அரசியல் வாரிசாக திகழ்ந்து தமிழக மக்களின் தாயாக விளங்கி ‘அம்மா’ என எல்லோராலும் அன்போடு அழைக்கவிட்டு, கண்ணீரில் கதறவிட்ட முதலமைச்சர் அம்மா அவர்களின் உடல், சென்னை மெரினா கடற்கரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை நல்லடக்கம். இறுதிச்சடங்கில், கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக…

Read More

ஜெயலலிதா காலமானார் தொண்டர்கள் கதறல் சோகத்தில் ஆழ்ந்த தமிழகம்

ஜெயலலிதா காலமானார் தொண்டர்கள் கதறல் சோகத்தில் ஆழ்ந்த தமிழகம்

நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். •அதிகாலை 4 மணி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அதிமுகவினர் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். •அதிகாலை 4.30 மணி – முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதய ரத்த நாள அடைப்பை போக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது •காலை 7 மணி – தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. – அப்பல்லோ வளாகத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டது . •காலை 7.30 மணியளவில் அதிமுக அமைச்சர்கள் அப்பல்லோவிற்கு விரைந்தனர் •காலை 8 மணி அஞ்சியோ சிகிச்சைக்குப் பின்னர் முதல்வர்…

Read More

ஒபாமாவை தோற்கடிக்க டிரம்ப்பின் புதிய யுக்தி!

ஒபாமாவை தோற்கடிக்க டிரம்ப்பின் புதிய யுக்தி!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்புடன் இரவு விருந்து சாப்பிட வேண்டுமென்றால் 7 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். அது தொடர்பாக புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அவர் ஈடுபட்டு வருகிறார். தன் அரசில் புதிய நிதியமைச்சராக, பிரபல வங்கி அதிகாரி ஸ்டீவ் முனிச்சினை நியமிக்கபோவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதிக்கான பதவியேற்பு விழா ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் ஜனாதிபதி பதவியேற்பு விழா, அரசு செலவில் நடப்பது இல்லை. அதற்கு பதிலாக,…

Read More

கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன.

கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் இரவீந்திரநாத் கடத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கொக்குவில் கிழக்குப் பகுதியில் திருவாளர் சிவசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த புதல்வர்தான்   இரவீந்திரநாத் ஆவார். இவருடைய தந்தையார் ஓய்வுபெற்ற புகையிரத தலைமைப் பாதுகாவலராவார். இவர் தனது  கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பின் கொழும்பு அக்குனைஸ் கல்லூரியிலும் கற்று,1973ம் ஆண்டு பேராதனைக் பல்கலைக் கழகத்திற்கு விவசாயவிஞ்ஞான பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். எல்லாரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகுவதுடன் இனிமையாகவும் மென்மையாகவும் பேசும் சுபாவம் கொண்டவர். பெருமையற்றவர். எல்லாரையும் சமமாக மதிப்பவர். எவருக்கும் உதவிசெய்வதில் பின்நிற்கமாட்டார். மிகுந்த இரக்கம்கொண்டவர். 1978ம் ஆண்டு கரடியனாறு விவசாய ஆராச்சி நிலையத்தில் ஆராச்சியாளராக சேர்ந்து (Research officer) பணிபுரிந்தார். அங்கு இவரது ஆராச்சியின் பயனாக சிறந்த இன மிளகாய் கண்டுபிடிக்கப்பட்டதுடன்…

Read More
1 250 251 252 253 254 256