தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் கணேசன்

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள். அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது…

Read More

ஓபிஎஸ்-ஆ? ஈபிஎஸ்-ஆ? : அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

ஓபிஎஸ்-ஆ? ஈபிஎஸ்-ஆ? : அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த முடிவுகளும் எடுக்கப்படாமல் பொதுக்குழு நிறைவடைந்தது. பின்னர், ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி…

Read More

இந்தியா – சிங்கப்பூர் இடையே யுபிஐ பண பரிவர்த்தனை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

இந்தியா – சிங்கப்பூர் இடையே யுபிஐ பண பரிவர்த்தனை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே யுபிஐ-பேநவ் (UPI-PayNow) இணையவழி பண பரிவர்த்தனை இணைப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குனர் ரவி மேனன் ஆகியோர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தனர். பின்னர் யுபிஐ-பேநவ் இணைப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- இணைய வழி பண பறிமாற்றமான யுபிஐ-பேநவ் இணைப்பு நமது புலம்பெயர்ந்தோர், தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பயனளிக்கும். இன்றைய காலகட்டத்தில்,…

Read More

மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் – நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும் – நிர்மலா சீதாராமன்

பிஎச்டிசிசிஐ என்ற தொழில் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: 2023 – 24 பட்ஜெட்டில் பொது மூலதன செலவு 33 சதவீதம் அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.தொடர்ச்சியாக 3 – 4 ஆண்டுகளாக, பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பட்ஜெட் தாக்கலின் போதும் அதனை மனதில் வைத்துள்ளோம். பொது மூலதன செலவுக்கு இந்த பட்ஜெட்டில் உண்மையான கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மாநில அரசுகள் ஒப்பு கொண்டால், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்படும். எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று மாநில அரசுகளை அறிவுறுத்துகிறோம். ஒரே நாடு…

Read More

தமிழ்நாட்டில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

அமெரிக்காவில் இருந்த வந்த ஒருவர் உள்பட தமிழ்நாட்டில் 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 7 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 35 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read More

ஈரோடு தேர்தலை இந்தியாவே கவனித்து கொண்டிருக்கிறது..! அதிமுக அமோக வெற்றி பெறும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோடு தேர்தலை இந்தியாவே கவனித்து கொண்டிருக்கிறது..! அதிமுக அமோக வெற்றி பெறும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிரொலிக்கும். இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை கவனித்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை திமுகவின் மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றனர். காட்சியும், ஆட்சியும் மாறும். அதன் எதிர்வினை சந்திப்பீர்கள் என்று கூறினார். எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி செலவு செய்வது நியாயம் தானா ? ரூ.80 கோடிக்கு பேனா சின்னம் வைப்பதற்கு பதில் ரூ. 2 கோடிக்கு வைக்கலாமே…

Read More

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணம் ; கணவர்களை விட்டுவிட்டு காதலர்களுடன் சென்ற மனைவிகள் – திடுக்கிடும் சம்பவம்…!

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணம் ; கணவர்களை விட்டுவிட்டு காதலர்களுடன் சென்ற மனைவிகள் – திடுக்கிடும் சம்பவம்…!

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) கிராமப்புறங்களில் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொண்டுக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின்படி வீடு கட்ட 2 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்படும். கட்டப்படும் வீட்டின் ஒவ்வொரு நிலையிலும் 2 லட்ச ரூபாய் மொத்தம் 4 தவணையாக தலா 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, மானியமாக குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் வீடு கட்ட 2 லட்ச ரூபாய் தலா 50 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 4 தவணையாக மத்திய அரசு செலுத்தும். இந்நிலையில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வந்த பணத்தை எடுத்துக்கொண்டு கணவர்களை…

Read More

ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? – எதுவும் நடக்கலாம் – கு.ப.கிருஷ்ணன் பதில்

ஈபிஎஸ் உடன் ஓபிஎஸ் சந்திப்பா? – எதுவும் நடக்கலாம் – கு.ப.கிருஷ்ணன் பதில்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பிலும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டதால் தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்தது. இந்த போட்டா போட்டி அறிவிப்பால் ‘இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவானது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய 2 பேரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே சமாதான தூதுவர்கள் போன்று செயல்பட்டனர். அவர்கள், அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க வேண்டும். ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்று தங்களது விருப்பத்தை 2 பேரிடம் தெரிவித்தனர். இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கு மத்தியில், ‘இரட்டை இலை’ சின்னம் கேட்டு…

Read More

விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்க்கும் மனு மீது இன்று விசாரணை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்க்கும் மனு மீது இன்று விசாரணை – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வக்கீல் விக்டோரியா கவுரியை சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதற்கு எதிராக சென்னையைச் சேர்ந்த வக்கீல் அன்னா மேத்யூ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி மூத்த வக்கீல் ராஜீவ் ராமச்சந்திரன், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று காலை ஆஜராகி முறையிட்டார். அந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பான மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது. இதனிடையே சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் பிற்பகலில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி, உரிய அமர்வு முன் நாளை…

Read More

ஒரு குழந்தைக்கு 100 மரங்கள் சிக்கிம் அரசு முடிவு

ஒரு குழந்தைக்கு 100 மரங்கள் சிக்கிம் அரசு முடிவு

சிக்கிம் மாநிலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 மரக்கன்றுகள் நட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மரம் ஒன்றை நடுங்கள், பாரம்பரியம் ஒன்றை விட்டுச் செல்லுங்கள் என்ற இத்திட்டத்தை முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார். குழந்தைப் பிறப்பை நினைவுகூரும்விதமாக இவ்வாறு மரக்கன்றுகள் நடுவது, குழந்தை, பெற்றோர் மற்றும் இயற்கைக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் என்று சிக்கிம் அதிகாரிகள் கூறுகின்றனர். திட்டத்தை தொடங்கிவைத்த முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் கூறுகையில், ‘ஒரு குழந்தை வளர வளர, அதற்காக நடப்பட்ட மரங்களும் வளர்வதைக் கவனிப்பது, பூமிக்கு ஒரு குழந்தையின் வருகையை வரவேற்கும், அதை கொண்டாடும் நல்லதொரு அடையாளம் ஆகும். இது போன்ற ஒரு பசுமை…

Read More
1 44 45 46 47 48 256