இந்தியா-கனடா மோதலால் பிரதமர் மோதிக்கு என்ன சிக்கல்?

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதிலும், அதற்கான ஆதாரங்களை கனடா இந்தியாவுடன் பகிரவில்லை, அல்லது பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

இந்த விவகாரம் தொடங்கியதில் இருந்தே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

கனடாவில் மக்கள் செல்வாக்கு மதிப்பீடுகளில் பின்தங்கியிருக்கும் ட்ரூடோ, அவரது உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக நிஜ்ஜார் கொலைப் பிரச்னையை எழுப்புவதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதலின் ஒரு பகுதியாக, இந்தியாவில் தேடப்படும் நபர்கள் கனடாவில் தஞ்சம் புகுவதாகவும், இவர்களுக்கெதிராக கனடா எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், அவர்களை நாடு கடத்துவதில் எந்த உதவியும் செய்வதில்லை எனவும் இந்தியா குற்றம் சாட்டியிருக்கிறது.

அனைவரும் ட்ரூடோவின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான இந்த சர்ச்சையால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு என்ன சிக்கல் ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம்.