திருப்பத்தூரில் ரயில் சிக்னல்களை சேதப்படுத்த முயன்றதாக ஒருவர் கைது – நடந்தது என்ன?
ஓடிஷா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு, தொழில்நுட்ப கோளாறுகள் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் திருப்பத்தூரில் ரயில் நிலையத்தின் இருப்புப்பாதையில் உள்ள சிக்னலை உடைக்க முயன்றதாக வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சிக்னல் அமைந்துள்ளது. ரயில் நிலைய மேலாளர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பரிசோதிக்கையில் இருப்புப்பாதையில் உள்ள சிக்னலில் திடீரென அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு சில இளைஞர்கள் கூடியிருந்தது தெரிந்துள்ளது.
திருப்பத்தூர் நகர் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். குடிபோதையில் ரயில்வே சிக்னலை உடைக்க முற்பட்டதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
