வாமன் பகவான் மகாராஜா பலியிடம் கேட்ட மூன்றடி நிலம்- ஓணம் பண்டிகை!! கதையும் விளக்கமும்

வாமன் பகவான் மகாராஜா பலியிடம் கேட்ட மூன்றடி நிலம்- ஓணம் பண்டிகை!! கதையும் விளக்கமும்

ஓணம் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது ? மகாராஜா பலி முற்பிறவியில் எலியாக இருந்தாரா ? வீட்டிலும்…கோவிலிலும் விளக்கேறுவதால் வரும் நன்மை என்ன ? மஹாலட்சுமி பக்தனான பலி சக்ரவர்த்தியின் கர்வத்தை சிதைத்து எப்படி மஹாவிஷ்ணு நள்வழி படுத்தினார் ? வீடியோவில் கதையும் விளக்கமும் கேட்டு மகிழ்ந்து அனைவரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஓணம் திருவிழா வாழ்த்துக்கள் !! வாமன் ஜெயந்திக்கு வாழ்த்துக்கள் !! தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் , செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத்…

Read More

உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா

உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே  ராஜினாமா

உடல் நலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, 65, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். கிழக்காசிய நாடான ஜப்பானில், நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் பெருமை உடையவர் ஷின்சோ அபே, 65. அபே, இளம் வயதிலிருந்தே வயிறு தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக, அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும், இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெறும் அளவுக்கு, அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற சூழலில், பிரதமர் பொறுப்பை கவனமாக கையாள முடியாது என்பதால், பதவியை ராஜினாமா செய்ய, அபே முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம்…

Read More

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார்

கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்தார். நாளை இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த வசந்தகுமார் பாரம்பரிய காங். குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் சிறுவயது முதலே காங். கட்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தமிழ்நாடு காங். கமிட்டி செயல் தலைவராகவும் இருந்தார்.இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங். எம்.பி.யாகவும் உள்ளார். இவரது அண்ணன், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா, வசந்தகுமார்….

Read More

மதுரை 2ம் தலைநகர் ஆகிறதா ? தமிழகத்தில் அமோக ஆதரவு !!

மதுரை 2ம் தலைநகர் ஆகிறதா ? தமிழகத்தில் அமோக ஆதரவு !!

தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக மதுரையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, ஆகஸ்ட், 15ல், நம் நாளிதழில், முழு பக்க கட்டுரை வெளியானது. இந்த ஆலோசனையை பல்துறை நிபுணர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என, பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தமிழ் வளர்த்த வரலாற்று பெருமைக்குரிய மதுரையை, தமிழகத்தின் இரண்டாம் தலைநகர் அமைக்க, எங்களின் முழு ஆதரவு உண்டு. உலகின் எட்டாவது அதிசயமாக மீனாட்சி அம்மன் கோவில் மதுரையில் உள்ளது. மதுரையை சுற்றி பசுமை சூழ்ந்த ஏராளமான கிராமங்கள் உள்ளன. தொழில் வளர்ச்சிக்குரிய நிறைய நிலப்பரப்புகள், நான்கு வழிச்சாலை போக்குவரத்து என, அனைத்து வசதிகளும் உள்ளன.தென் மாவட்டங்களில் தொழில்…

Read More

லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை புரட்டிப் போட்ட ‘லாரா’ புயல்

லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை புரட்டிப் போட்ட ‘லாரா’ புயல்

அமெரிக்காவின் லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களை தாக்கிய ‘லாரா’ புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. லூசியானா மாகாணத்தில் வியாழன் (ஆக.,27) அதிகாலை கேம்ரான் மற்றும் போல்க் துறைமுகம் இடையே புயல் கரை கடந்த போது மணிக்கு 280 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. கடலில் பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்தன. கடற்கரை பகுதிகளில் 25 செ.மீ., அளவிற்கு கனமழை பதிவாகி உள்ளது. கடந்த 160 ஆண்டுகளில் இப்படி ஒரு புயல் தாக்கியதில்லை என்று மாகாணவாசிகள் கூறுகின்றனர். பலத்த காற்று காரணமாக மரம் விழுந்து 14 வயது சிறுமி பலியானார். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்….

Read More

2020 ” நான் – கிருஷ்ணா ” மாறுவேட போட்டியில் வெற்றியாளர்கள் திறன் காட்டி போட்டியில் வென்றனர் !!

2020  ” நான் – கிருஷ்ணா ” மாறுவேட போட்டியில் வெற்றியாளர்கள் திறன் காட்டி போட்டியில் வென்றனர்  !!

கிருஷ்ணா ஜென்மாஷ்டமி கொண்டாடும் வகையில் நடந்த ” நான் – கிருஷ்ணா ” மாறுவேட போட்டியில் கிருஷ்ணனாகவும் , ராதாவாகவும், கோகுலத்தின் கோபால் மற்றும் கோபிகா போலவும் தங்களை அலங்கரித்து அனைவரின் மனம் கவர்ந்து போட்டியில் வென்ற இந்த குழந்தைகளையும், சிறுவர், சிறுமியரியும், இளம் ரதங்களும் உங்களின் தரிமையும், புகழும், கிருஷ்ணா பக்தியும் வாழட்டும் …. தினம் தினம் வளர்ந்து மேலும் பல பதக்கங்களையும்… போட்டிகளிலும் வெல்லட்டும் என்று வாழ்த்துகிறோம் … உங்களின் திறமையை வணங்குகிறோம் !! இந்த லிங்கை கிளிக் செய்து இந்த அற்புதமான வீடியோ பார்த்து… அனைவரோடும் பகிர்ந்து மகிழவும் தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1…

Read More

பசுமை விநாயகர்” போட்டி வெற்றியாளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட “கணேஷா ஷில்பி” மோகனா சாந்தி மொல்லெட்டி

பசுமை விநாயகர்” போட்டி வெற்றியாளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட “கணேஷா ஷில்பி” மோகனா சாந்தி மொல்லெட்டி

பசுமை விநாயகர்” போட்டி வெற்றியாளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட “கணேஷா ஷில்பி” மோகனா சாந்தி மொல்லெட்டி உங்கள் சொந்த சுற்றுச்சூழல் நட்பு கணேஷாவை உருவாக்குவதற்கான முறையை படிப்படியாக செய்து காட்டுகிறார். பசுமை விநாயகர் போட்டியில் வெற்றிபெற சொந்த விநாயகரை உருவாக்கும் வீடியோவைக் கிளிக் செய்க…பார்க்க… வெல்க …பகிர்க இந்த வீடியோக்களைப் பார்த்த பிறகு நீங்கள் இன்னும் உங்கள் சொந்த விநாயகரைச் செய்து எளிதாக போட்டியில் பங்கேற்கலாம். இந்த கணேஷ் சதுர்த்தியில் நீங்கள் உங்களின் சிறந்த குடும்ப நேரத்தை உங்களின் குழந்தைகளுடன் பகிர்ந்து போட்டியில் பங்கேற்கலாம். இந்த லிங்கை https://bharatmarg.com/green-ganesha-competition-for-ganesh-chaturthi/ கிளிக் செய்து கட் ஆப் நாள் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு முன் நீங்கள் செய்த விநாயகரின்…

Read More

இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம் பெண்ணின் சடலம் தகனம் !!

இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம் பெண்ணின் சடலம் தகனம் !!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையில் மரணமடைந்த முஸ்லிம் பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டது. மரணமடைந்த மேற்படி பெண் புற்றுநோய் மற்றும் இதயக்கோளாறு ஆகியவற்றினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கடந்த 09 மாதங்களாக இந்தியா – வேலூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் உறவினர் றம்ஸான் என்பவர் பிபிசி தமிழிடம் கூறினார். இதனையடுத்து கடந்த 20ஆம் திகதி இவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது, கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க…

Read More

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்சார்பு விவசாயியுமான கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தற்சார்பு விவசாயியுமான கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்

டெல்லியில் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி. முரளிதர் ராவ், பா.ஜ.கவின் தமிழ் மாநிலத் தலைவர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் கே. அண்ணாமலை அக்கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன் என்று கூறினார். “தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த என்னால் இயன்ற முயற்சியை செய்வேன். உண்மையான வீரான எல். முருகன் தலைமையில் மாநிலத்தில் தேசிய உணர்வையூட்டும் வகையில் எனது பணிகளையும் முழு நேரத்தையும் செலவிடுவேன்” என்றும் அண்ணாமலை தெரிவித்தார். “நான் நரேந்திர மோதியின் மிகப்பெரிய ரசிகர். தேசிய பாதுகாப்பிலோ, ஊழலிலோ சமரசத்துக்கு இடமின்றி வலுவுடன் நாட்டை வழிநடத்தியவர் பிரதமர் மோதி….

Read More

தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது !!

தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது !!

தமிழக அரசியல் களம் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதையொட்டி, நேற்று நடந்த பா.ஜ., மாநில செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, தி.மு.க.,வை கிழித்தெடுத்தார். இதைக் கருத்தில் கொள்கையில், தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது என்பது தெளிவாகிறது. அதே நேரம், காங்கிரஸ் மேலிடத்தில் நிலவும் குழப்பத்தால், தமிழக காங்., தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி குழப்பம் நீடித்தால், தி.மு.க.,விடம் அதிரடியாக பேரம் பேசி, ‘சீட்’ வாங்குவது கடினம் என்றும் வருத்தப்படுகின்றனர். நேற்றைய சம்பவங்கள், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தரப்பில், கூட்டணி வியூகம் வகுக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளதைக் காட்டுகின்றன. தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, எட்டு மாதங்களே உள்ளதால், கொரோனா பரவலுக்கு மத்தியிலும்,…

Read More
1 122 123 124 125 126 425