ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ், இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இவர் கடந்த ஒரு மாத காலம் அதிபர் விளாடிமிர்புடினை நேரில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளும் ‘கொரோனா’ வைரஸ் புகுந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த…

Read More

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை இன்று (மே 11) முதல் வழங்கவுள்ளதாக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.இதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களை வெளியில் செல்ல அனுமதிக்க புதிய நடைமுறை ஒன்றை இன்று முதல் அமல்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலுள்ள இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியில் செல்ல…

Read More

சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தியது

சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தியது

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும் அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை குறைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு முக்கிய பொருளாதார வளமான கச்சா எண்ணெய், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் முக்கிய வருவாய் தரும் மெக்கா, மெதினா புனிததலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் செல்வம் கொழிக்கும் சவுதி, சிக்கன நடவடிக்கையில் இறங்கிவிட்டது. அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை(ரூ.19.68 லட்சம் கோடி) குறைத்துக்கொள்ள சவுதி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அடிப்படை பொருட்களுக்கான வரியையும் 15 சதவீதமாக (3 மடங்கு) உயர்த்தி…

Read More

இந்தியா மானேசரோவர் யாத்திரைக்கான சாலைப்பணியை துவைக்கியது

இந்தியா மானேசரோவர் யாத்திரைக்கான சாலைப்பணியை துவைக்கியது

கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக தங்கள் நாட்டு எல்லையில் சாலைப்பணி மேற்கொண்ட இந்தியாவிற்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியா சீனா எல்லைப்பகுதியான உத்தர்கண்ட் மாநிலம் தர்ச்சூலா என்ற பகுதியிலிருந்து கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக 80 கி.மீ. தொலைவிற்கு சாலைப்பணியை இந்திய அரசு கடந்த வெள்ளியன்று துவக்கியுள்ளது. இப்பணிகள் நேபாளம் நாட்டின் லைப்பூலோக் கணவாய் வழியாக சாலை போடப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், நேபாளத்திற்கு சொந்தமான பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொண்டு வருவதற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவிற்கான நேபாளம் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. நேபாளம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டுவிட்டரில் வெளியிட்டிருப்பதாவது: இந்தியாவின் இந்த…

Read More

கனடாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 69 ஆயிரம் பேர் பாதிப்பு

கனடாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 69 ஆயிரம் பேர் பாதிப்பு

கனடாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,148 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 68,839 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல மாகாணங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தவும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். நோய் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) புதிதாக 1,148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 178 பேர் பலியாகினர்….

Read More

மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று

மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று

மேற்கு முனை லோப்லாசில் பல ஊழியர்கள் கொரோனா தோற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது என நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. மே 9 ஆம் தேதி வெளியிடப்ப அறிவிப்பு பிரசுரத்தில் ‘லோப்லாஸ்’  தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக “எங்கள் கிருமிநாசினி நெறிமுறைகள் மற்றும் சமூக தொலைதூர நடைமுறைகளுக்கு மேல்” மேலதிக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் நிர்வாகம் கூறியுள்ளது. டுபோன்ட் மற்றும் கிறிஸ்டி கடைகல் சனிக்கிழமை காலை மேற்கொண்டும் “முழுமையான (ஒரே இரவில்) சுத்தம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

Read More

அமேரிக்காவில் காரோண : அதிபர் ட்ரம்ப் மீது முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தாக்கு

அமேரிக்காவில் காரோண :  அதிபர் ட்ரம்ப் மீது முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தாக்கு

அதிபர் டிரம்ப்பின் நிர்வாக குளறுபடியால், அமெரிக்க கொரானாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தற்போது வரை 13 லட்சத்து 47 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தான் அதிபராக இருந்த போது நிர்வாகத்தில் இருந்த 3 ஆயிரம் பேருடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கலந்துரையாடினார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த ஆலோசனை இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், இந்த அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமானது. நான் என்னுடைய முழு ஆதரவை ஜோ பிடனுக்கு அளிக்கிறேன்….

Read More

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும் 3 பேர் உயிரிழப்பு !!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுமேலும்  3 பேர் உயிரிழப்பு !!

ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,204 ஆகவும், பலி எண்ணிக்கை 47 ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 412 ஆண்கள், 257 பெண்கள் ஆவர். இன்று மட்டும் 13,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டில் 74 வயது முதியவரும், சென்னையில் 59 வயது நபரும், திருவள்ளூர் 55 வயது நபரும் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 135 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த…

Read More

நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொல்லப்படுகிறார்களா ?

நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொல்லப்படுகிறார்களா ?

‘நியூயார்க்கில் நோயாளிகள் கொரோனா தொற்றால் இறக்கவில்லை. முழு அலட்சியம் மற்றும் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் கொலை செய்யப்படுகின்றனர்’ என கொரோனா நோயாளிகள் வார்டில் பணிபுரியும் நெவாடாவை சேர்ந்த நர்ஸ் கண்ணீர் மல்க கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் நிக்கோல் சிரோடேக் பேஸ்புக் நேரலை வீடியோவில் கூறியதாவது,ஒவ்வொரு முறையும் நோயாளியின் சார்பாக நான் வாதிட முயற்சிக்கும்போது, மருத்துவமனை நிர்வாகம் வேறு ஒரு பிரிவுக்கு மாற்றி விடுகின்றனர். நான் பணியாற்றிய இரண்டு மருத்துவமனைகளிலும் இதே போன்று நிகழ்ந்தது. இனி என்ன செய்வது என்று கூட எனக்கு தெரியாது. வக்கீல் குழுக்கள் கூட இவர்களை பற்றி ஒரு…

Read More

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை

பாகிஸ்தானில், ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை நிகழ்த்தப்படுவதாக, அந்நாட்டின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ‘சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில், ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது தொடர்கிறது. பஞ்சாபில், 14 வயது பெண்களை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, திருமணம் செய்விக்கப்படுகிறது. அஹமதியா சிறுபான்மை சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் மீது, மத துவேஷ வழக்கு தொடரப்படுகிறது’ என, மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More
1 136 137 138 139 140 425