இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்

இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் திடீரென காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும், பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் ஆறுமுகன் தொண்டைமான் .இவரது வயது 55. சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த போது தவறி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக தாலங்காமா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Read More

இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை

இந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை

‘கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில், 8,360 கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும்’ என, இந்தியாவுக்கு நம் அண்டை நாடான இலங்கை கோரிக்கை வைத்து உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு பிரச்னைகளை சமாளிப்பது தொடர்பாக, இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சேவுடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், தொலைபேசியில் பேசினார். அப்போது, பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். ஊரடங்கால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலை சமாளிக்க தேவையான உதவிகளை செய்வதாக, மோடி அப்போது உறுதி அளித்தார். இந்த பேச்சின் போது, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ‘கரன்சி ஸ்வாப் எனப்படும் செலாவணி பரிமாற்ற முறையின் கீழ்,…

Read More

CESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை !!

CESB மாதத்திற்கு 2 1,250 பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை  !!

மாணவர் கனேடிய குடிமகனாகவோ அல்லது கனடாவில் நிரந்தரமாக வசிப்பவராகவோ இருந்தால், வெளிநாட்டில் படிப்பவர்கள் உட்பட எந்த வயதினரும் மாணவர்கள் CESB க்கு தகுதியுடையவராவர். நீங்கள் குளிர்கால செமஸ்டர் முடித்த ஒரு இரண்டாம் நிலை மாணவராக இருந்தால், நீங்கள் இப்போது கனடா அவசர மாணவருக்கு விண்ணப்பிக்கலாம். மே 15, வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட CESB, COVID-19 தொடர்பான காரணங்களுக்காக வேலை தேட முடியாத மாணவர்களுக்கும், சமீபத்திய உயர்நிலைப் பள்ளி மற்றும் பிந்தைய இரண்டாம் நிலை பட்டதாரிகளுக்கும் அவசர நிதி நிவாரணத்தை வழங்குகிறது. இது மே முதல் ஆகஸ்ட் 2020 வரை நான்கு மாதங்கள் வரை, மாதத்திற்கு $ 1,000 க்கு கீழ் பணிபுரியும் தகுதிவாய்ந்த மாணவர்கள் மற்றும் சமீபத்திய…

Read More

நள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் !!

நள தமயந்தி கதையைக் கேளுங்கள் & சனி தோஷத்திலிருந்து விடுபடுங்கள் !!

சனி பகவானே நள மகாராஜாவுக்கு உறுதியளித்தார், நள தமயந்தியின் கதையை யார் கேட்டாலும் சனி தோஷத்திலிருந்து விடுபடுவர் என்கிறார். எல்லா நல்லதும் உங்களுக்கு நடக்கும் … நீங்கள் நள தமயந்தியின் கதையை கேட்கும்போது பணப் பிரச்சினை, வேலை பிரச்சினை, உடல்நலம் மற்றும் உறவு பிரச்சினை ஆகியவற்றை வெல்வீர்கள் !! சனியின் தோஷத்துக்கான நிவாரணைக்கான காரணமும் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. பரத்வாஜ முனி சொன்ன இந்தக் கதையைக் கேட்டு திரபதியுடன் பாண்டவர்கள் இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றனர். எனவே இந்த விடியோவை கிளிக் செய்து உங்கள் குடும்பத்தினருடன் பார்த்து… உங்கள் குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் …நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், ஆரோக்கியம், செல்வம், செழிப்பு மற்றும் அமைதி ஆகியவற்றால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்…

Read More

பாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்

பாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்

பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்து புறப்பட்ட விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 107 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் எனவும்,வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளதாவது: விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

Read More

அமெரிக்காவிலுருந்து அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான்

அமெரிக்காவிலுருந்து  அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான்

அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் ஜூபைர், 41, அமெரிக்காவில் இல்லினியோஸ் பல்கலை.யில் பொறியியல் படித்துள்ளான். 2006-ம் அமெரிக்காவின் ஒஹிகோ மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டதன் மூலம் அந்நாட்டு நிரந்தர குடிமகன் உரிமை பெற்றான். இந்நிலையில் அரேபிய நாடுகளில் செயல்பட்டு வரும் அல்கொய்தா பிரிவு முக்கிய தலைவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியாக இவன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான். கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு முகமது இப்ராஹிம் ஜூபைர் நாடு கடத்தப்பட்டான்….

Read More

கனடாவில் கொரோனாவால் பலி 6000த்தை தாண்டியது

கனடாவில் கொரோனாவால்  பலி 6000த்தை தாண்டியது

கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து பலியானவர்களின் எண்ணிக்கை 6000 ஐ தாண்டியதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா நோய் அதிகரித்த நாடுகளில் அதிகபட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையிலும், ரஷ்யா அதற்கு அடுத்ததாகவும் இருந்து வருகிறது. பல ஐரோப்பியநாடுகளில் தற்போது நோய் தொற்று குறைந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கனடாவிலும் தற்போது கொரோனா பாதிப்புகள் சற்று கூடிக்கொண்டே செல்கிறது. கனடாவை பொறுத்தவரை, நாட்டில் பல மாகாணங்கள் இருப்பினும், கியூபெக்கில் தான் அதிகபட்ச ( நாட்டின் பாதியளவு பாதிப்பு ) உறுதிசெய்யப்படுவதாக அதிகாரிகளின் தரப்பில் தெளிவாகிறது. இந்நிலையில் கனடாவில், கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக…

Read More

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததா? சீனாவில் மீண்டும் கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததா? சீனாவில் மீண்டும் கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வைரஸ் தலைகாட்ட துவங்கி உள்ளது. கடந்த ஆண்டு, சீனாவில் முதன் முதலாக, வூஹான் நகரில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், கடந்த மாதம், இந்நகரில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு விலக்கப்பட்டு, மக்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் நேற்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர், வூஹான் நகரைச் சேர்ந்தவர். நோய் அறிகுறி இல்லாமல், 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 285 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக,…

Read More

கனடாவில் வீட்டு விலைகள் ஒரு வருடத்தில் 18% வீழ்ச்சியடையக்கூடும்

கனடாவில் வீட்டு விலைகள் ஒரு வருடத்தில் 18% வீழ்ச்சியடையக்கூடும்

கனடாவின் பாதுகாப்பான வீடுகள் சொத்து சந்தையில் விரிசல்கள் தோன்றும். அடுத்த 12 மாதங்களில் நாட்டின் சராசரி வீட்டு விலைகள் 18 சதவீதமாக குறையும் என்று கனடா அடமான மற்றும் வீட்டுவசதி கழகம் ((கனடா மார்ட்கேஜ் & ஹௌசிங் கார்பொரேஷன்) எதிர்பார்க்கிறது. “செலவழிப்பு வருமானத்தின் கடன் பெருக்கங்களைப் பார்க்கும்போது, ​​அந்த நடவடிக்கை 2019 இன் பிற்பகுதியில் 176 சதவீதத்திலிருந்து 2021 ஆம் ஆண்டில் 200 சதவீதத்திற்கும் உயரும்” என்று தலைமை நிர்வாக அதிகாரி இவான் சித்தால் நேற்று நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார். வரவிருக்கும் 12 மாதங்களில் சராசரி வீட்டு விலைகள் 9 – 18 சதவீதம் குறையும் என்று சி.எம்.எச்.சி இப்போது கணித்துள்ளது. இதன் விளைவாக அதிக…

Read More

தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

மலேரியாவிற்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தடுப்பாக தினமும் உட்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேரியாவிற்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம் என கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்பின்னர், அது குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. இதற்கிடையே இந்தியாவில் இருந்து பெருமளவு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா இறக்குமதியும் செய்தது. ஆனால், இந்த மருந்து குறித்த ஆராய்ச்சியில், உண்மையில் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் என்பது இதுவரையில் நிரூபணம் ஆகவில்லை. மேலும், இதை முறையின்றி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என உலக நாடுகளும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்று…

Read More
1 134 135 136 137 138 425