கொரோனா பாதிப்புக்குள்ளான 50% பேர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – மலேசியா
மலேசியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளதாவது:மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை, 6,978 ஆக அதிகரித்துள்ளது; 114 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில், 48 சதவீதத்தினர், கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அம்மாநாட்டில் பங்கேற்றவர்களில், 3,347 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூலம் ஐந்து தலைமுறைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. எனவே, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவப்…
Read More









