இலங்கையில் கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் (மார்ச் 12) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக இன்று மாலை அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இவராவார். உலகம் முழுவதும் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கோவிட் – 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையை தாக்கியுள்ளதையடுத்து, இலங்கை…
Read More








