இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்திலும் தேவை இல்லாமல் மூக்கை நீட்டி, கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதீர், அந்நாட்டில் கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத், உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். கடந்த, 2018ல் மலேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகமே இவரை பாராட்டியது. மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீருக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்கவில்லை. பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் இணைந்து வெற்றி பெற்றார்.’இந்த ஆண்டு ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டை, மலேசியா ஏற்று நடத்துகிறது. நவ., மாதத்தில் நடைபெறும்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு !

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு !

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வந்தார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இன்று வந்தார். அவருடைய மனைவி மெலீனா டிரம்ப், மகள் இவாங்கா உள்ளிட்டோரும் உடன் வந்தனர். உயர்நிலை குழுவும் வந்தது. பயணத்தின் முதல் நாளான இன்று,குஜராத்தின் ஆமதாபாதுக்கு டிரம்ப் வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் ரூபானி ஆகியோர் டிரம்ப் குடும்பத்தினரை வரவேற்றனர். பிரதமர்…

Read More

பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை – அமெரிக்காவில் புதிய சட்டம்

பலரை திருமணம் செய்துகொண்டால் தண்டனை இல்லை – அமெரிக்காவில் புதிய சட்டம்

அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும். எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது. தமது கணவர் அல்லது…

Read More

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக லைகா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள இவிபி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர். இந்நிலையில் படத்தின் இணை இயக்குனர் குமார் நசரேத் பேட்டை காவல் நிலையத்தில் லைகா நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: லைகா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துதரப்படவில்லை, கிரேன் உரிமையாளர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார். என புகாரில் தெரிவித்துள்ளார்.   இதனிடையே கிரேன் உரிமையாளர், புரொடொக்சன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Read More

வீடியோ : தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது

வீடியோ : தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது

தைபுசம் குமரன் குன்றம் முருகன் கோயிலின் மிகவும் கோலாஹலமாக கொண்டாடப்பட்டது. குமாரன் குந்தரம் சென்னை (குரோம்பேட்டை) மலைகளில் சுப்பிரமணிய சுவாமியின் கோவில் மிக அழகாக அமைந்துள்ளது. கண்கவரும் கவாடி நடனம் மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கே உரித்தான கலாச்சார நடனங்களும் நடைபெற்றன. <center><iframe width=”700″ height=”400″ src=”https://www.youtube.com/embed/4_Y5-lQjWWA?autoplay=1″ frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe></center> மகாதேவ் & பார்வதி மாதாவின் மகன் கார்த்திகேயனும் அவரது பக்தர்களும் தமிழில் பக்தி பாடல்களைப் பரப்பியதால் தமிழ் கடவுளாகக் கருதப்படுகிறார்கள். தமிழ் என்பது முதலில் மகாதேவால் அகஸ்திய மகாமுனிக்கு கற்பிக்கப்பட்ட ஒரு மொழி, பின்னர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் பக்தர்களால் பரப்பப்பட்டது. இந்த லிங்கை கிளிக் செய்து குமரன்…

Read More

இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார்

இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார்

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் அதன் பட்ஜெட்டை மார்ச் 11ல் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனாக்(39) தாக்கல் செய்கிறார்.  இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் அமைச்சரவையில், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். நாராயணமூர்த்தியின் மகளான, அக் ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி, முதல் முறையாக, 2015ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரிட்டன் பார்லிமென்டிற்குள் நுழைந்தார். ‘கன்சர்வேடிவ்’ கட்சியின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்தார். இந்நிலையில், மார்ச் 11ல், பிரிட்டன் பட்ஜெட்டை ரிஷி…

Read More

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பம் –

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பம் –

இலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்திற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா விதித்த தடையுத்தரவிற்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை வெளி விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவு பெற்றத் தருணத்தில், இலங்கை இராணுவத்தின் 58ஆவது பிரிவினரால் மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. குறித்த காலப் பகுதியில் மனித உரிமை மீறல்கள், சட்டவிரோத கொலைகள் இடம்பெற்றுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்திருப்பதனால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக…

Read More

இந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு

இந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்முகாஷ்மீர் , லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மேலும் ஜம்முவின் நிலவரத்தை நேரில் கண்டறிய வெளி நாட்டு எம்பிக்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் இங்கிலாந்து நாட்டின் லேபர் கட்சியை சேர்ந்த எம்.பி., டெபி ஆப்ரகாமும் ஒருவர் இவர் தற்போது இ -விசா முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளார். இருப்பினும் அவரது விசாவை இந்திய அதிகாரிகள் எவ்வித காரணமும் இன்றி விசாவை மறுத்துள்ளனர். இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில் இங்கிலாந்து நாட்டினருக்கு விசா ஆன் அரைவல் முறை வழங்கப்படவில்லை அதன் அடிப்படையில் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என கூறினர். அதே…

Read More

இலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது – இரா.சம்பந்தன்

இலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது – இரா.சம்பந்தன்

இலங்கையின் 72ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார் இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்லை. தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அவர்களின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது. இதன் காரணமாக தேசிய சுதந்திர தின நிகழ்வில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்கேற்குமாறு ஜனாதிபதி அலுவலகம் அழைப்பு விடுத்திருந்தது. இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம். 2015ஆம் ஆண்டிலிருந்து சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இம்முறை சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்படும் என்று…

Read More

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி:   பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியா வர உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச்சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளேன் எனக்கூறினார். இந்நிலையில், டிரம்ப் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலினாவும் வரும் 24 மற்றும் 25 ல் இந்தியா…

Read More
1 147 148 149 150 151 425