‘கொரோனா’ பயம் பரோலில் செல்ல மாட்டேன் – சின்னம்மா சசிகலா
‘கொரோனா வைரஸ்’ பரவல் காரணமாக, பரோலில் செல்ல, சசிகலா மறுத்து விட்டதாக, அ.ம.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும், சிறை கைதிகள், சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடமும், ‘பரோல்’ விடுப்பில் செல்லுமாறு, சிறை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு, 100 நாட்கள் வரை, பரோலில் செல்வதற்கு அனுமதி உள்ளது.சசிகலா பரோலில் செல்லலாம் என, சிறை நிர்வாகம் கூறியும், அவர் விரும்பவில்லை. தன் வழக்கறிஞர்களிடம், ‘பரோல் கேட்டு, எந்த மனுவும் தாக்கல் செய்ய வேண்டாம்’ என, சசிகலா கூறி விட்டார்.இதுகுறித்து, அ.ம.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலா, நேற்று முதல் ஒரு மாத பரோலில் வெளியே வருவதாக…
Read More








