கறிக் கடை பாயுக்கு கொரோனா வைரஸ் தொற்று: கறி வாங்கியோர் பரிதவிப்பு

கறிக் கடை பாயுக்கு  கொரோனா வைரஸ் தொற்று: கறி வாங்கியோர் பரிதவிப்பு

டில்லியில் சட்ட விரோதமாக நடத்தப்பட்ட இஸ்லாமிய மாநாட்டில் சென்று திரும்பிய புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார் புதுச்சேரியில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள 4 நபர்களில், 3 பேர் புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சார்ந்தவர்கள், ஒருவர் திருவண்டார்கோவில் பகுதியைச் சார்ந்தவர். இந்தநோய்த் தொற்றால் தற்போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இறைச்சிக் கடை நடத்தி வந்திருக்கிறார். கடந்த 22ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அத்தியாவசிய மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும்…

Read More

புதிய ஊதிய மானியம் – கனடா நிதியமைச்சர் பில் மோரியோ பேச்சு

புதிய ஊதிய மானியம் – கனடா நிதியமைச்சர் பில் மோரியோ பேச்சு

கனடாவில் ஊழியர்களுக்கு புதிய ஊதிய மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் பில் மோரியோ நேற்று தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு முன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கொரோனாவால் எந்த ஒரு தொழில் நிறுவனமும், பணியாளர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்கு ஊதியத்திற்கான, மானியத்தை அரசு வழங்கும். தற்போது கொரோனாவால் அனைத்து வணிக…

Read More

ராமா மந்திரத்தின் மஹிமை – கதையுடன் பரமசிவன் சொன்ன ஸ்லோகம் !!

ராமா மந்திரத்தின் மஹிமை – கதையுடன் பரமசிவன் சொன்ன ஸ்லோகம் !!

ராம நாமாவின் சக்தி என்ன… ஒருவர் ராம என்று சொன்னால் எதை இழக்கிறார்… எதை பெறுகிறார்? ராம நாமாவின் சக்தியை விளக்கும் கதையையும், சிவன், பார்வதி மாதாவிடம் என்ன சொன்னார் என்பதையும் அறிய வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும். தாபம்… தியானதைவிட  சக்தி வாய்ந்தும்… பக்தி பரவசம் செய்வதும் எது? இந்த அழகான ஸ்லோகத்தை வைஷான்வி திலிபனால் உச்சரிக்க கேட்டு மகிழுங்கள். நீங்களும் . பக்தி மற்றும் விளைவு குறித்து பரமசிவன் கூறிய இந்த ஸ்லோகத்தை சேர்ந்து கூறி புண்ணியம் பெறுங்கள். இந்த சுலோகத்தை உங்களின் வசதிக்காக எழுத்து வடிவத்திலும் தரப்பட்டுள்ளது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நல்லவையே நடக்கட்டும், வீடியோவைப் பார்த்த பிறகு… நீங்களும் மற்றவர்களுடன்…

Read More

COVID-19 நெருக்கடியில் நன்கொடை செய்யப்பட்ட முகமூடிகளை எடுக்க பிரிமியர் டக் ஃபோர்டு நேரில் சென்றார் !!

COVID-19 நெருக்கடியில் நன்கொடை செய்யப்பட்ட முகமூடிகளை எடுக்க பிரிமியர் டக் ஃபோர்டு நேரில் சென்றார் !!

டென்டல் பிராண்ட்ஸ் 100,000 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை முகமூடிகளை நன்கொடையாக வழங்க முன்வந்தபோது, ஒன்ராறியோ பிரீமியர் டக் ஃபோர்டு தனது சொந்த டிரக் மூலம் நேரில் சென்று பொருட்களை சேகரித்தார். தலைமை நிர்வாக அதிகாரி மோதி பெட்டேஷ் மற்றும் மார்க்கத்தை தளமாகக் கொண்ட டென்டல் பிராண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டுத் துணைத் தலைவர் மைக் லாட்டர்பாட்ச் சொல்கையில், பிற்பகல் 2 மணியளவில் பிரீமியரிடமிருந்து அழைப்பு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அவர் அவர்களின் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் இருந்தார் என்றும் சிறிது நேரத்தில் இங்கு வரப்போவதாகவும் கூறினார். டென்டல் பிராண்ட்ஸ் நிறுவனத்தையும் 4,600 கை சுத்திகரிப்பு பாட்டில்களையும்   நன்கொடையாக வழங்கியது. பிரீமியர் டக் ஃபோர்டு நிறுவனம் தனது பிக்கப்…

Read More

டில்லிஇஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற…தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’

டில்லிஇஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற…தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’

டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1, 500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’ வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.   கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ‘தப்லீக் ஜமாத்’ என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில்,…

Read More

பிபரே ராம ரசம் – படுபவர்: வைஷ்ணவி திலீபன்

பிபரே ராம ரசம் – படுபவர்: வைஷ்ணவி திலீபன்

ராம நவமி திகதி : ஏப்ரல் 2, 2020 !! ராம நாம மந்திரம் ஜெபம் செய்வோம் !! ராமர் என்ற பெயரின் சாரத்தை குடிக்கவும், இது பாவங்களை நீக்குவதற்கும், உங்களை பாவங்களைச் செய்ய வைப்பவர்களுடன் கூட்டுறவு கொள்வதிலிருந்து தூரத்தைத் தடுப்பதற்கும் உதவும். நீங்கள் எல்லா வகையான வெகுமதிகளையும் … ஆதாயங்களையும் பெறுவீர்கள் !!  பிபரே ராம ராசம் கீர்த்தனையை , வைஷன்வி திலிபன் அழகாக பாட … கேட்டு ரசிக்கவும் பகிர்ந்து கொண்டு மற்றவர்கர்னின் வாழ்விலும் விளக்கேத்துங்கள் !! ஜெய் ஸ்ரீ ராம் !!

Read More

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாகுபாடு இன்றி தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா தொற்றால் சீனா, அமெரிக்கா, ஐரோப்பியா, பிரிட்டன், இந்தியா, இத்தாலி என பல நாடுகள் பெரும் சவால்களை சந்தித்து உள்ளது. பிரிட்டனில் இதுவரை 11 ஆயிரத்து 600 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நாட்டில் 578 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு இந்த தொற்று உறுதியானது. இவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (27 ம் தேதி) பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக…

Read More

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

மக்களின் கோரிக்கையை ஏற்று, 1980களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடரான ராமாயணம் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1987 – 1988ம் ஆண்டுகளில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பாயின. அந்த காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த தொடர் ஒளிபரப்பாகும்நாட்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். சில வீடுகளில் மட்டுமே அப்போது டிவி இருந்ததால், அங்கு கூட்டம் நிரம்பி வழியும். 55 நாடுகளில் 65 கோடி பேர் அந்த நேரத்தில் அந்த தொடர்களை பார்த்தனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

Read More

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் !!

வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமணம் !!

கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும், மக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக உ.பி., மாநிலம் ஹார்டாய் பகுதியில் ஒரு ஜோடி வினோதமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடைபெற இருந்த மணப்பெண் மெஹபீன் வீட்டிற்கும், மணமகன் ஹமீத் வீட்டிற்கும் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி இருந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு…

Read More

பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி

பொருளாதாரத்தை விட மனிதர்களே முக்கியம்: ‘ஜி – 20’ யில் இந்திய பிரதமர் மோடி

”பொருளாதார இலக்குகளை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்,” என, ‘ஜி – 20’ நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் தலைமையில், ஜி – 20 நாடுகளின் அவசரக் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நேற்று(மார்ச் 26) நடந்தது. இதில், துவக்க உரையாற்றிய, முகமது பின் சல்மான், கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கொரோனாவால், வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்னைகள், பொருளாதார பாதிப்புகளுக்கு உதவ, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது:…

Read More
1 142 143 144 145 146 425