எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே – புத்தாண்டு வாழ்த்துக்கள்

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே – புத்தாண்டு வாழ்த்துக்கள்

எத்திசையில் பார்த்தாலும் சித்திரைத் திருநாளே !! எங்குமே அழகு. எங்குமே மகிழ்வு. எங்குமே எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் திரு நாள் இன்று. ஏறாத மலைகள் எல்லாம் ஏறுவோம் ஏற்றம் பல கொள்வோம். தமிழ் புத்தாண்டு !! தமிழர் புத்தாண்டு !! திரு முருகன் அருள் பெற்று தீங்கின்றி வாழ்க !! தமிழன்னை ஆசியுடன் ஆண்டு பல வாழ்க !! செல்வா செழிப்போடு நீடுழி வாழ்க !! குன்ற உடல் நலத்துடன் என்றென்றும் வாழ்க !! வாழ்க வளமுடன் !! வாழ்க வையகம் !!

Read More

நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி – கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்

நரேந்திர மோதிக்கு டிரம்ப், பிரேசில் அதிபர் நன்றி – கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தடை நீக்கம்

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீதான தடையை விலக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இந்தியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைப்பதற்கு இதுவரை மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் அதை கட்டுப்படுத்துவதற்கு மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு வகை மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை பயன்படுத்தலாம் என்று கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடாக விளங்கி வரும் அமெரிக்கா இந்த வகை மருந்துகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கு திட்டமிட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு…

Read More

சவுதி அரேபியா தாக்குப்பிடிக்குமா? மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா

சவுதி அரேபியா தாக்குப்பிடிக்குமா? மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா

சவுதி மன்னர் குடும்பத்தி்ல், உயர் பதவியில் உள்ள 12 பேர் உள்பட அரண்மணையில் 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 91 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் கொரோனாவுக்க 2,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுதி மன்னர் குடும்பத்தில் உயர் பதவியில் உள்ள 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ரியாத் மாகாண கவர்னராக உள்ள பைசல் பின் பந்தர் அப்துல்லஜீஸ் அல் சவுத், என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து…

Read More

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மெக்சிகோவில் ஊரடங்கு பிறப்பித்த மேயர் சுட்டுக்கொலை

மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 141 பேர் உயிரிழந்துள்ளனர். ‘கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் இருந்து யாரும் தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது. அவர்களை அனுமதித்தால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும்’ என, மெக்சிகோ மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், நாட்டின் எல்லைகளை மெக்சிகோ அரசு மூடியுள்ளது. இந்நிலையில், தெற்கு மெக்சிகன் பகுதியில் உள்ள மகஹூல் நகர மேயர் ஓபிட் துரோன் கோமிஸ், தனது நகரில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிற்பித்தார். அந்த நகரில் வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.இதனால், போதைப் பொருட்களை கடத்த முடியாமல் தவித்த ஒரு கும்பல், மேயரைக் கொல்ல…

Read More

5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் – கொரோனா வைரஸ்

5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் – கொரோனா வைரஸ்

இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இளவரசர் சார்லஸ் நோயின் பிடியில் சிக்கி குணமடைந்துள்ளார். நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சஸ் நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நோய் இங்கிலாந்து மக்களை பெரிதும் பாதித்துள்ளது. செல் போன் வளர்ச்சியின் தற்போதைய கட்டமான 5 ஜி தொழில்நுப்டத்தை பல்வேறு நிறுவவனங்கள் இங்கிலாந்தில் வழங்கி வருகின்றன. இந்நிலையில் கொகேரானா வைரசை 5 ஜி-யை இணைத்து ஒரு செய்திபரவியது. அதாவது 5 ஜி செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சு நுரையீரலில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி விடுவதாக செய்தி பரவியது. ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருந்த இங்கிலாந்து மக்கள் 5 ஜி…

Read More

ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா

ஒரு நாட்டிடம் முன்பணம் பெற்றுவிட்டு கூடுதல் விலை கிடைத்ததும் வேறு ஒரு நாட்டிற்கு முகக்கவசங்களை விற்றிருக்கும் சீனா

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதல் இடத்திலும் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் போதுமான அளவில் இல்லை. 3.4 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்ட, வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்து, பாதுகாப்புக் கவசங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டுள்ள சீனா, தற்போது அதிகளவில் ‘என்95’ ரக முகக்கவசம், வென்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு உடைகளைத் தயாரித்து, பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.சீனாவிடம் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள், தலா 200 கோடி முகக் கவசங்களை கேட்டு…

Read More

பாதிரியார் கைது – 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்

பாதிரியார் கைது – 150 பேருடன் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம்

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் 150 பேரை ஒன்றிணைத்து சர்ச்சில் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் நடத்திய பாதிரியார் கைது செய்யப்பட்டார். உயிர் கொல்லி நோயான கொரோனா, உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில், சர்ச், மசூதிகளில் கூட்டமாக பிராத்தனை நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் காக்கிநாடா பகுதியிலுள்ள சர்ச் ஒன்றில், ஞாயிறு பிராத்தனைக்காக 150க்கும் அதிகமான கிறிஸ்தவர்களை, பாதிரியார் ஒருவர் ஒன்றிணைத்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்தவ சபையில் ஆய்வு செய்த போலீசார், சமூக விலகலை கடைபிடிக்காமல்…

Read More

ஏப்.,5 இரவில் மின்விளக்கை ‘ஆப்’ செய்து அகல்விளக்கு ஏற்றுவோம் !!

ஏப்.,5 இரவில் மின்விளக்கை ‘ஆப்’ செய்து அகல்விளக்கு ஏற்றுவோம் !!

ப்., 5 ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு தீப விளக்குகளை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வீடியோ மூலம் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். ஊரடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மதித்து நடப்பவர்களுக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றிணைந்து போராடும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்தியாவின் ஊரடங்கு உலகிற்கு முன்னுதாரணமாக திகழந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக…

Read More

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன் – போரிஸ் ஜான்சன்

கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன் – போரிஸ் ஜான்சன்

‘கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்’ என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலக்கத்துடன் தெரிவித்துள்ளார். Boris Johnson #StayHomeSaveLives ✔ @BorisJohnson Another quick update from me on our campaign against #coronavirus. You are saving lives by staying at home, so I urge you to stick with it this weekend, even if we do have some fine weather.#StayHomeSaveLives போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (3ம் தேதி) மாலை வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கடந்த ஏழு நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனாலும்…

Read More

இடைவெளியை பின்பற்றாவிட்டால் $5000 CAD அபராதம் – டொராண்டா நகர மேயர் ஜான் டோரி

இடைவெளியை பின்பற்றாவிட்டால் $5000 CAD அபராதம் – டொராண்டா நகர மேயர் ஜான் டோரி

கனடாவின் டொராண்டோ நகரில் ஒரே வீட்டில் வசிக்கும் இரண்டு நபர்கள், 6 அடி இடைவெளியை கடைபிடிக்க தவறினால் $5K CAD மேல் அபராதமாக விதிக்கப்படுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒரே வீட்டில் வசிக்காத இரண்டு நபர்கள் பூங்கா அல்லது பொது இடங்களில் சந்திக்கும் போது 2 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவோர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை மற்றும் 5000 CAD அபராதமாக விதிக்கப்படுமென டொராண்டா நகர மேயர் ஜான் டோரி அறிவித்துள்ளார். கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கனடாவில் அவசரநிலை நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இருந்தும் பெரும்பாலான கனடா மக்கள் பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களான சமூக விலகல் அல்லது இடைவெளியை…

Read More
1 141 142 143 144 145 425