நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் பலி

நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் பலி

நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக பெய்து வரும் பருவமழை அந்த பகுதியை முற்றிலுமாக வெள்ளமயமாக்கியது. ராணுவ வீர்ர்கள் மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் காணாமல் போனதாகவும் பல மக்கள் காயமடைந்தாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிறைய வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடந்துள்ளன. 1500க்கும் மேற்பட்ட பேர் மீட்கப்பட்டுள்ளனர். 16,000 பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் பெய்த மழை மாதாந்திர சராசரி மழையை விட அதிகமானது. இதனால் மலைப் பிரதேசங்கள் பலவற்றில் நிலச்சரிவு…

Read More

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எடுத்த தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை: சிறிசேன

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எடுத்த தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை: சிறிசேன

இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்துமாறு, நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, அவர் இதனை தெரிவித்தார். மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஆதரவான மனநிலையை, மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரி கேட்டுக்கொண்டார். மரண தண்டனையை நீக்கும் சட்டம் வரைவு நாடாளுமன்றுக்குக் கொண்டு வரப்படுவது, போதைப்பொருள் கடத்தல்காரர்கள், நிழலுலகத்தினர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதாக அமைந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “மரண தண்டனையை நீக்கும் சட்ட வரைவு நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டால், அன்றைய தினத்தை நாட்டின் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவேன்” என்றும்…

Read More

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட்டு நாளை தீர்ப்பு

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட்டு நாளை தீர்ப்பு

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவர், கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் ‘ரா’ அமைப்பிற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும், பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அவர் மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்திய அரசு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் ஐ.நா. அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நிறைவேற்றி விட்டதோ என்ற…

Read More

பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் – என்ன நடந்தது?

பிரிட்டன் எண்ணெய் கப்பலை இடைமறிக்க முயற்சித்த இரான் – என்ன நடந்தது?

வளைகுடா நாடுகளின் கடற்பரப்பில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை தடுக்க இரானிய படகுகள் மேற்கொண்ட முயற்சி, ராயல் கடற்படை கப்பலால் முறியடிக்கப்பட்டது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ் எண்ணெய் கப்பலை தொடர்ந்து சென்ற பிரிட்டனின் போர்க்கப்பலான ஹெச்எம்எஸ் மெண்ட்ரோஸ் மூன்று படகுகளுக்கும், எண்ணெய் கப்பலுக்கும் இடையில் பயணிக்க கட்டாயப்படுத்தப்பட்டது என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரானின் இந்த நடவடிக்கைகள் “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” என்று அவர் கூறியுள்ளார். தனது எண்ணெய் கப்பலை பிரிட்டன் தடுத்து வைத்திருப்பதற்கு பதிலடி வழங்கப்படும் என்று இரான் முன்னதாக மிரட்டல் விடுத்திருந்தது. ஆனால், அத்தகைய முயற்சி எதையும் எடுக்கவில்லை என்று இரான் தெரிவித்திருக்கிறது. இரானின் இஸ்லாமிய புரட்சி…

Read More

சர்ச்சைக்குரிய இ-மெயில் கசிந்த விவகாரத்தில் திருப்பம் அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதர் ராஜினாமா

சர்ச்சைக்குரிய இ-மெயில் கசிந்த விவகாரத்தில் திருப்பம் அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதர் ராஜினாமா

அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக பதவி வகித்து வந்தவர் சர் கிம் டரோச். இவர் அமெரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்த நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் தகுதியில்லாதவர்; பாதுகாப்பற்ற நிலையில் அவர் இருக்கிறார். வெள்ளை மாளிகையில் உட்பூசல், குழப்பம் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை டிரம்ப் ஏற்க மறுக்கிறார் என கடுமையாக விமர்சித்து இங்கிலாந்து அரசுக்கு இ-மெயில் அனுப்பினார். அது எப்படியோ கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சர் கிம் டரோச்சை டிரம்ப், மிகப்பெரிய முட்டாள் என சாடினார். சர் கிம் டரோச்சுக்கு பதவி விலக உள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே முழு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அவரது இடத்துக்கு போட்டியில் உள்ள முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ்…

Read More

உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இங்கிலாந்து- நியூசி., மோதல்; அரையிறுதியில் வீழ்ந்தது ஆஸி.,

உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இங்கிலாந்து- நியூசி., மோதல்; அரையிறுதியில் வீழ்ந்தது ஆஸி.,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இங்கிலாந்து அணி ஜோராக முன்னேறியது. அரையிறுதியில் ஐந்து முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிவிட்டது. பர்மிங்காமில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் பின்ச் டக் அவுட்டானார். வோக்ஸ் ‘வேகத்தில்’ ஆபத்தான வார்னர் (9) சிக்க, ஆஸ்திரேலிய அணி ஆட்டங்கண்டது. கவாஜாவுக்குப்பதில் வந்த…

Read More

சிரியாவில் நில கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் பலி

சிரியாவில் நில கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் பலி

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 9வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரும் அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிரிய நாட்டில் டெய்ர் அல் ஜாவ்ர் நகரில் தப்லான் பகுதியில் நில கண்ணிவெடிகள் ஐ.எஸ். அமைப்பினரால் புதைக்கப்பட்டு உள்ளன. அவர்களை விரட்டிவிட்டு அப்பகுதியை அரசு கைப்பற்றியது. இதன்பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அவற்றை நீக்கும் பணியில் அரசு தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் விட்டு சென்ற…

Read More

பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள் : யுனெஸ்கோ

பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள் : யுனெஸ்கோ

யுனெஸ்கோவின் புதிய கணக்கெடுப்புப்படி உலகின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையில் (எஸ்.டி.ஜி) 2030 காலக்கெடுவிற்குள் நான்கு பாகிஸ்தான் குழந்தைகளில் ஒருவர் ஆரம்பக் கல்வியை முடிக்க மாட்டார் என தெரிவித்து உள்ளது. யுனெஸ்கோவின் புதிய கணிப்புகள் படி அனைவருக்கும் 12 ஆண்டு கல்வி என்ற இலக்கை நோக்கிய திட்டத்தில் பாகிஸ்தான் இலக்கை பாதிதான் அடையும் என்பதைக் காட்டுகிறது, 50 சதவீத இளைஞர்கள் தற்போதைய விகிதத்தில் உயர்நிலைக் கல்வியை இன்னும் முடிக்கவில்லை. 2030-க்குள் 6-17 வயதுடைய ஆறில் ஒருவர் கலவி பெறுவதில் இருந்து வெளியேறுகிறார்கள் என்று டான் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. 40 சதவீதம் பேர் தற்போதைய விகிதத்தில் இடைநிலைக் கல்வியை முடிக்க மாட்டார்கள் என்று ஊடக அறிக்கை…

Read More

அரையிறுதியில் இந்தியா தோல்வி; பைனல் வாய்ப்பை இழந்தது

அரையிறுதியில் இந்தியா தோல்வி; பைனல் வாய்ப்பை இழந்தது

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 28, வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து உதவினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. புதியதாக கொண்டு வரப்பட்ட ‘ரிசர்வ் டே’…

Read More

இலங்கையில் இஸ்லாமியச் சட்டப் படி 20 பேர் கொலை? பெளத்த பிக்கு குற்றச்சாட்டு – விசாரணை ஆரம்பம்

இலங்கையில் இஸ்லாமியச் சட்டப் படி 20 பேர் கொலை? பெளத்த பிக்கு குற்றச்சாட்டு – விசாரணை ஆரம்பம்

இலங்கையில் ஷரியா சட்டத்துக்கு (இஸ்லாமிய சட்டம்) அமைவாக 20 பேர் கொல்லப்பட்டனர் என்று, மெதகொட அபயதிஸ்ஸ எனும் பௌத்த பிக்கு வெளியிட்ட தகவல் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் தேதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தேரர் இந்த தகவலை வெளியிட்டிருந்தார். காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இந்தத் தகவலை தெரிவித்திருந்ததாகவும் அந்த பிக்கு கூறினார். வட்டிக்கு பணம் கொடுத்தமை, பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டமை, அரசுக்கு உளவாளியாகச் செயற்பட்டமை, சூது விளையாடியமை உள்ளிட்ட செயல்களை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட 20 பேர் இஸ்லாமிய சட்டப்படி கொல்லப்பட்டதாக…

Read More
1 182 183 184 185 186 425