இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு. மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்

இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு. மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார்

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், தர்மராஜா தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 45). இவரது மகள் சீதா(18). இவர் குன்றத்தூர், சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (19), என்பவரை காதலித்து வந்துள்ளார். தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக கடந்த 2 மாதங்களாக காதலன் வீட்டிலேயே சீதா தங்கி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சீதா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காதலன் வீட்டார் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read More

காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு

காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு

லோக்சபாவில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் பேசுகையில், ”இந்திராவுக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண்மணியாக மீண்டும் வரலாறு படைத்து விட்டார், நிர்மலா சீதாராமன். இதற்காக எனது கட்சி சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். சபைக்கு தமிழ் பாடலை கொண்டு வந்து அற்புதமான பிணைப்பை உண்டாக்கி விட்டார். அதே சமயத்தில், இந்த பட்ஜெட் அங்கும் இல்லாமல், இங்கும் இல்லாமல் ஒரு ‘திரிசங்கு’ பட்ஜெட்டாக உள்ளது,” என்றார்.

Read More

எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு; பதிலடியை கொடுப்போம் – இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை

எண்ணெய் கப்பல் சிறைப்பிடிப்பு; பதிலடியை கொடுப்போம் – இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் எண்ணெய் கப்பலான சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் வைத்து சிறைபிடிக்கப்பட்டதாக இங்கிலாந்து தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை கப்பல் சர்வதேச கடல்பகுதியில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது என ஈரான் கூறுகிறது. கப்பலை விடுவிக்குமாறு ஈரான் கேட்டு வருகிறது. இந்நிலையில் கப்பல் சிறைபிடிக்கப்பட்ட விவகாரத்தில் சரியான பதிலடியை கொடுக்காமல் விடப்போவது கிடையாது என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளார் என உள்ளூர் மீடியாவில் செய்திகள் வெளியாகியுள்ளன. “இங்கிலாந்து நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளை மீறும் செயலாகும், ஒருவகையான கொள்ளையாகும்” என ஈரான் கூறியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பொருளாதார…

Read More

அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்

அமெரிக்க பயணத்தில் தூதர் இல்லத்திலேயே தங்க இம்ரான் கான் திட்டம்

வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா செல்கிறார். பாகிஸ்தான் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், தேவையற்ற செலவினங்களை அவர் குறைத்து வரும் நிலையில், அமெரிக்க பயணத்தின் போதும் ஆடம்பர ஹோட்டலில் தங்குவதில்லை என திட்டமிட்டுள்ளார். மாறாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே 3 நாட்கள் தங்குவதற்கு இம்ரான் கான் முடிவெடுத்துள்ளார்.

Read More

மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்களை வழிபட அனுமதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து அமைப்பு ஒன்று தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்பட்டது. கேரளாவைச் சேர்ந்த, அகில பாரத ஹிந்து மஹாசபா என்ற அமைப்பின் சார்பில், அதன் தலைவர், சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் நாத் என்பவர், மாநில உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மசூதிகளில், முஸ்லிம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என, கோரியிருந்தார். அந்த மனு, உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா,…

Read More

ஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு

ஹேமசிறி பெர்ணான்டோ மீது மனித படுகொலை குற்றச்சாட்டு

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு வரும் 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பிணை மீதான கோரிக்கையும் அன்றைய தினத்தில் நீதவானினால் ஆராயப்படவுள்ளது. இந்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் எதிராக தண்டனை சட்ட கோவையில் வழக்கு தொடரப்பட்டுள்ள சட்ட சரத்துக்கள் தொடர்பான விளக்கத்தை சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே தெளிவூட்டினார். அப்போது, இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான சட்ட…

Read More

ஸ்டாலின் வாரிசு: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் வாரிசு: திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொது செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார். அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக இளைஞரணி செயலாளராக பணியாற்றி வந்த சாமிநாதனை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து , அவருக்கு பதிலாக கட்சி சட்டதிட்ட விதி18, 19 பிரிவுகளின் படி இளைஞர் அணிய செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தலைமை கழகத்தின் மூலம் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கருணாநிதியின் பேரனும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதிதியை பொறுத்தவரை அவர் முதலில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பொறுப்பேற்ற தகவல் அறிந்ததும்,சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். திமுக அறிவாலயத்தில் தொண்டர்கள் மேள, தாளம்…

Read More

இந்திராணிக்கு அனுமதி: சிதம்பரம், கார்த்திக்கு நெருக்கடி

இந்திராணிக்கு அனுமதி: சிதம்பரம், கார்த்திக்கு நெருக்கடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி முகர்ஜிக்கு டில்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ.305 கோடி மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தருவதற்காக ரூ.4 கோடி லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது. வெளிநாடு முதலீடுகளை பெற்ற அப்போதைய மத்திய அமைச்சராக இருந்த தனது தந்தை ப.சிதம்பரத்தின் அதிகாரத்தை கார்த்தி தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது…

Read More

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா

காங்.,கின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ராகுல் இன்று முறைப்படி ஒப்படைத்தார். விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் ராகுல் தனது அறிவிப்பில் கூறி இருந்தார். ராகுல் ராஜினாமாவை அடுத்து கட்சியின் இடைக்கால தலைவராக மூத்த தலைவரான மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன் 2 முறை ம.பி., முதல்வராக இருந்துள்ளார். உ.பி., கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். இவர் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்து வருகிறார்.

Read More

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி கமிஷனருக்கு அமித்ஷா நோட்டீஸ்

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம்: டில்லி கமிஷனருக்கு அமித்ஷா நோட்டீஸ்

டில்லியில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டில்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஜூன் 30 ம் தேதியன்று இரவு டில்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள இந்து கோயில் மர்மநபர்களால் இடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்து கோயில் இடிப்பு, அதன் தொடர்ச்சியாக நடந்த மோதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லி போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து அமித்ஷா நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் டில்லி கமிஷனர். அவரிடம் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார் அமித்ஷா. அத்துடன் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்…

Read More
1 183 184 185 186 187 425