இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்

இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே.) மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இலங்கை குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அல்லது கைது செய்யப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித் கூறியதாவது:- “இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இந்த குழந்தைகள் இயல்பு நிலையை எட்டுவதற்கான…

Read More

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்

இந்தியாவின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக காஷ்மீர் மாநிலம் செல்கிறார் அமித்ஷா. இந்த பயணத்தில் அவர் அமர்நாத் புனித யாத்திரையும் மேற்கொள்ள உள்ளார். பிரதமர் மேடி, உள்நாட்டு பாதுகாப்பு முழுமையும் கையாளும் வகையில் அமித்ஷாவிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இதனால் தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அனைவரையும் அமித்ஷாவிடமே அறிக்கை அளிக்க செய்துள்ளார். எனவே, 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ., அரசு, அமித்ஷா தலைமையில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான், வரும் ஜூன் 26 மற்றும் 27 காஷ்மீருக்கும், அதே பயணத்தில் அமர்நாத்திற்கும் செல்கிறார். இதன் ஒரு பகுதியாக ஸ்ரீநகரில் பாதுகாப்பு…

Read More

நிரந்தர அதிபராக தொடர சிறிசேன திட்டம்?

நிரந்தர அதிபராக தொடர சிறிசேன திட்டம்?

‘இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின், ௧௯-ஏ பிரிவை, ரத்து செய்ய வேண்டும்’ என, அதிபர், மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இதன்படி, அந்நாட்டின் நிரந்தர அதிபராக தொடர, அவர் விரும்புவது தெரிய வந்துள்ளது. இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே, 2010ல், அரசியல் சட்டத்தின், ௧௮-ஏ பிரிவை ஏற்படுத்தினார். அதன்படி, அதிபராக இருப்பவர்கள், எத்தனை முறை வேண்டுமானாலும், தேர்தலில் போட்டியிடலாம் என, சட்டத்தை ஏற்படுத்தினார். ஆனால், 2015ல், அதிபராக இருந்த சிறிசேன, 19-ஏ என்ற, அரசியல் சட்டப்பிரிவை ஏற்படுத்தி, முன்னாள் அதிபர், ராஜபக்சே கொண்டு வந்த, 18-ஏ பிரிவை நீக்கினார். அதன்படி, அதிபராக இருப்பவர்கள், இரண்டு முறை மட்டும் தான், தேர்தலில் போட்டியிட முடியும்; மூன்றாவது முறையாக போட்டியிட…

Read More

சென்னை தண்ணீர் பிரச்சனை

சென்னை தண்ணீர் பிரச்சனை

சென்னையின் மென்பொருள் பூங்கா வளாகங்கள் அமைந்துள்ள சாலையின் முடிவில் தெரிகிறது செம்மஞ்சேரி. கடந்த வாரம் ஐந்து நாட்களாக செம்மஞ்சேரியில் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். செம்மஞ்சேரியில் வசிக்கும் பலரும், கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை இந்த ஆண்டு சந்திப்பதாக தெரிவிக்கிறார்கள். இங்குள்ள மக்கள் தண்ணீர் சேகரிப்பதில் தங்களது நாளை தொடங்குகிறார்கள் என்பதை நம்மால் பார்க்கமுடிந்தது. இளம் வயது தாயான சங்கீதா (28) தனது இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்ட பல இடங்களுக்கும் சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டியிருந்தது. ”காலை ஒன்பது மணிவரை பல இடங்களுக்குச் சென்று இரண்டு குடம் நீரை எடுத்துவந்து இரண்டு குழந்தைகளை…

Read More

தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, விஜயகாந்த் மனைவி பிரேமலதா திட்டம்

தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, விஜயகாந்த் மனைவி பிரேமலதா திட்டம்

கடனுக்கு வட்டி கட்ட, தே.மு.தி.க., மாவட்ட செயலர்களிடம் நிதியுதவி கேட்க, விஜயகாந்த் மனைவி பிரேமலதா திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி யில் இடம் பெற்ற, தே.மு.தி.க., நான்கு தொகுதி களில் போட்டியிட்டது. கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் உட்பட 4 பேரும், படுதோல்வி அடைந்தனர். தேர்தல் நேரத்தில், செலவுக்கு பணம் இன்றி, தே.மு.தி.க., வேட்பாளர்கள் திணறினர். திருச்சியில் போட்டியிட்ட இளங்கோவன், வட சென்னையில் போட்டியிட்ட மோகன்ராஜ் இருவரும், விஜயகாந்த், பிரேமலதா விடம் நேரில் முறையிட்டனர்.ஆனாலும், நிதி வழங்க, அவர்கள் மறுத்து விட்டனர்.தேர்தலில் செலவு செய்யாத தால், கட்சி வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்து உள்ளதாமாவட்ட செயலர்கள் கூறி வருகின்றனர். கட்சியின்…

Read More

அமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’

அமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’

அமெரிக்காவில் பொது இடங்களில் குற்றச் செயல்கள் நடப்பதை கண்காணிக்கவும், தடுக்கவும் போலீசார் தொடர் ரோந்துப் பணியில் ஈடுவது வழக்கம். அண்மை காலமாக இந்த பணியில் போலீசாருக்கு பதில் புதிய, புதிய தொழில்நுட்பங்களை அமெரிக்கா பயன்படுத்த தொடங்கி உள்ளது. அந்தவகையில், கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹண்டிங்டன் பூங்காவில், பொதுமக்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை கண்காணிக்கவும், தரவுகளை சேகரித்து போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கவும், ‘ஹெச்பி ரோபோகாப்’ என்கிற ரோபோ பணியமர்த்தப்பட்டு உள்ளது. இது 4 புறமும் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டு சுமார் 5-6 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. பூங்காவின் நடைபாதையில் மக்களோடு மக்களாக சுற்றி ரோந்து பணியில் ஈடுபடும்…

Read More

கடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி நகை திருட்டு

கடை உரிமையாளரின் கவனத்தை திசைத்திருப்பி நகை திருட்டு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தருண் குமார், அதே பகுதியில் எஸ்எம் ஜூவல்லரி என்ற நகை கடையை வைத்துள்ளார். நேற்று அவரது கடைக்கு வந்த இரண்டு பெண்கள், நகை வாங்குவது போல நடித்து 150 கிராம் நகைகளை திருடி சென்றுள்ளார். அதில், ஒரு பெண் தருண்குமாரிடம் நகையை காட்ட சொல்கிறார். நகையை எடுக்க தருண்குமார் திரும்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு பெண் சிறு பெட்டியில் இருந்த நகைகளை எடுத்து தனது பைக்குள் வைத்து கொண்ட பின் இருவரும் கடையிலிருந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் தருண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இரண்டு…

Read More

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்தனர் & 35 பேர் காயம்

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து  25 பேர் உயிரிழந்தனர் & 35 பேர் காயம்

ஹிமாச்சல பிரதேச மாநிலம், குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் கிளம்பிய சிறிது நேரத்தில், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது . இதில் 25 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Read More

மார்கனின் சிக்ஸர் மழையால் இங்கிலாந்து பெரும் வெற்றி: இந்தியாவுக்கு சவாலா?

மார்கனின் சிக்ஸர் மழையால் இங்கிலாந்து பெரும் வெற்றி: இந்தியாவுக்கு சவாலா?

2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மான்செஸ்டர் நகரில் நடந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார். கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற ஜேசன் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதும் கைகொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்தார். ஆனால், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் சிகரமாக…

Read More

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்

அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வதுஅதிபராக பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் இன்று முறைப்படி துவங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை துவங்கினார். 2020- நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

Read More
1 185 186 187 188 189 425