திரிபுராவில் உபரி மின்சாரம்:நேபாளத்திற்கு விற்பனை

திரிபுராவில் உபரி மின்சாரம்:நேபாளத்திற்கு விற்பனை

திரிபுரா மாநிலத்தில் உள்ள உபரி மின்சாரம் அண்டை நாடான நேபாளத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. என மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாநில துணை முதல்வர் ஜிஸ்னு தேவ்வர்மா கூறி இருப்பதாவது: மாநிலத்தில் தற்போது நுகர்வோருக்கு தினமும் 300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர் சவுபாக்யா திட்டத்தின் மூலம் 1.36 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கி உள்ளது. சூரிய மின்சாரம் தயாரிப்பதில் மாநில அரசு இப்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாநில செயலகம், சட்டமன்றம்,ஐகோர்ட் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களை முழுமையாக சூரிய சக்தியாக மாற்றும் திட்டங்கள் தொடங்கி வருகிறது. மேலும் அசாம்…

Read More

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடி எந்த தகவலும் வெளியாகிவில்லை.

Read More

தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’

தாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’

சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டுவிட்ட நிலையில், புதிய நீர் ஆதாரங்களைத் தேடுகிறது சென்னைக் குடிநீர் வாரியம். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, புதிதாக ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பதும் ஏற்கனவே இருக்கும் கிணறுகளை ஆழப்படுத்துவதும் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. பொதுவாக ஒரு மாதத்தில் 20-30 வரை ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கும் ஒரு நிறுவனம், கடந்த இரு மாதங்களாக 40 ஆழ்துளை கிணறுகள் வரை அமைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை நகரைப் பொறுத்தவரை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளுமே முற்றிலுமாக வறண்டுவிட்டன. மே மாதத் துவக்கத்தில் சோழவரம் ஏரியிலிருந்தும் செங்குன்றம் ஏரியிலிருந்தும்,…

Read More

ஹேமமாலினி பதவிப்பிரமாணம்: ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு”

ஹேமமாலினி பதவிப்பிரமாணம்: ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு”

உத்தரபிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பியும் நடிகையுமான ஹேமமாலினி பதவிப்பிரமாணம் செய்து கொண்டபோது ராதே ராதே! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு” என பதவி ஏற்பின்போது முழக்கமிட்டபடி பதவி ஏற்றுக்கொண்டார். நாடாளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் இன்று பதவியேற்ற போது விதவிதமாய் முழங்கிய நிலையில் பாலிவுட் நடிகை ஹேமமாலினி தனி வழியில் முழங்கியது மற்ற எம்.பிக்களை விட வித்தியாசப்பட வைத்தது.

Read More

நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர்

நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழந்த முன்னாள் எகிப்து அதிபர்

ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதிவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் மூர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67. நாட்டில் ஜனநாயக முறையில் முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூர்சி, பதவியிலிருந்து இறக்கப்பட்ட ஒரு வருடக் காலத்திற்கு போராட்டங்கள் நடைபெற்றன. அதிலிருந்து அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

Read More

பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்

பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்

மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான பெண் குழந்தைகள் விகிதம் சராசரியாக குறைந்து கொண்டே வருகிறது. இப்போது சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காத நிலையும் காணப்படுகிறது. இதனால் மணமகன்கள் பாகிஸ்தானை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பாகிஸ்தானின் கிறிஸ்தவ குடும்பங்களைக் குறிவைக்கும் அவர்கள் பெரும் தொகையை கொடுத்து ஏஜெண்ட்கள் மூலம் பெண்களை திருமணம் செய்கின்றனர். இப்படி பல பாகிஸ்தானிய கிறிஸ்தவ பெண்கள் சீன ஆண்களுக்கு மணமுடிக்கப்பட்டு சீனாவுக்கு கடத்தப்பட்டுள்ளனர். சீனாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என கூறப்படும் பொய்யான கூற்றை கேட்டு பெற்றோர்களும் சம்மதிக்கிறார்கள். அங்கு சென்றதும்தான் சோகம் தொடர்கிறது….

Read More

பீகார் மூளைக் காய்ச்சல் : பலி 104 ஆனது

பீகார் மூளைக் காய்ச்சல் : பலி 104 ஆனது

பீகாரில் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளன. முஷாபர்நகர் மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழை இல்லாத நிலையில் இந்த நோய் குழந்தைகள் இடையே பரவியதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்நகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக அளவில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு தேவையான அனைத்து சிகிச்சைகளும் துரித கதியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். முதல்வர் நிதிஷ்குமார், தொடர்…

Read More

இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியது ஏன் என்பது குறித்து இலங்கை பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கம் கூறினர். இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்குமிடையிலான சந்திப்புகள் நேற்று புதன்கிழமை கண்டியில் இடம்பெற்ற போதே இதனை அவர்கள் கூறியுள்ளனர். அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை பிற்பகல் 2.00 மணியளவிலும், ராமான்ய பீடத்தின் மகாநாயக்க தேரரை இரவு 7.00 மணியளவிலும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இந்த நிலையில் மேற்படி சந்திப்புகளில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, முன்னாள் ராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, பிபிசிக்கு தகவலளித்தார். அஸ்கிரிய மற்றும்…

Read More

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை செயலர் கையெழுத்து

அமெரிக்க ராணுவ ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ இணைய தளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (47) வெளியிட்டார். இதனால் விதிக்கப்படும் மரணதண்டனை மற்றும் துன்புறுத்தலுக்கு பயந்து அவர் அமெரிக்காவில் இருந்து வெளியேறினார். ஆஸ்திரேலியரான இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார். அமெரிக்காவில் இருந்து வெளியேறிய அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நைட்ஸ்பிரிட்ஷ் பகுதியில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டில் அடைக்கலம் புகுந்தார். அவருக்கு ஈகுவேடார் அரசாங்கம் அரசியல் தஞ்சம் அளித்தது. எனவே அங்கு அச்சமின்றி நிம்மதியாக தங்கி இருந்தார். அவர் தஞ்சம் அடைந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஈகுவேடார் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கான உத்தரவை அந்நாட்டின் அதிபர் லெனின் மொரெனோ பிறப்பித்தார்….

Read More

இந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து

இந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்த உலக கோப்பை லீக் போட்டி, மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன. இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. ‘ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று நாட்டிங்காமில் நடக்க இருந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்தன. நேற்றிரவு பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. ‘சூப்பர்சானிக்’ உதவியால் மைதானத்தை…

Read More
1 186 187 188 189 190 425