இலங்கையில் இருந்து வெளியேற 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா

இலங்கையில் இருந்து வெளியேற 7 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா

இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, இன்று வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையில் இந்தத் தகவல்களை வெளியிட்டார். “முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மையினர். ஆனால் உலகில் நாங்கள் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக சொல்லிக்…

Read More

தோனிக்கு பிசிசிஐ ஆதரவு : கிளவுஸ் சர்ச்சை

தோனிக்கு பிசிசிஐ ஆதரவு : கிளவுஸ் சர்ச்சை

தோனி அணிந்த ‘கிளவுசில்’ இடம்பெற்றிருந்த முத்திரை துணை ராணுவத்தினுடையது அல்ல எனக்கூறியுள்ள பிசிசிஐ நிர்வாக குழு தலைமை அதிகாரி வினோத் ராய், இதற்காக அனுமதி கேட்டு ஐசிசியிடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்தது. இதில், தோனி விக்கெட் கீப்பிங் செய்த போது, ‘கிளவுசில்’ இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் ‘பாலிதான்’ லோகோ பொறிக்கப்பட்டு இருந்தது. தோனி ஏற்கனவே இந்திய ராணுவ கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இதனால், தோனியின் தேசப்பற்றை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டினர். ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) விதிப்படி ”வீரர்கள் அணியும் ஆடை, பயன்படுத்தும்…

Read More

‘காவு’ வாங்கியது ‘பிரெக்சிட்’; தெரசா மே பதவி விலகினார்

‘காவு’ வாங்கியது ‘பிரெக்சிட்’; தெரசா மே பதவி விலகினார்

பிரிட்டனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில், தெரசா மே, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை இன்று(ஜூன் 7) ராஜினாமா செய்தார். இரண்டாம் உலகப் போருக்கு பின், அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், க்ரீஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் உட்பட 28 நாடுகள் ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கின. குடியேற்ற விஷயத்தில் தாராள போக்கை கடைப்பிடித்தன. ஆனால், குடியேறும் பிற நாட்டினரால் தங்களின் கலாசாரம், பொருளாதாரம் மோசமடைவதாக பிரிட்டனில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரியலாமா என பொதுமக்களின் கருத்தைக்கேட்டு 2016 ஜூனில் வாக்கெடுப்பு நடந்தது. இது பிரெக்சிட் எனப்பட்டது. பிரெக்சிட்டுக்கு மக்கள் ஆதரவளித்ததால்…

Read More

சவுதி மன்னரை அவமதித்த இம்ரான் – கண்டனம்

சவுதி மன்னரை அவமதித்த இம்ரான் –  கண்டனம்

சவுதி சென்றுள்ள பாகிஸ்தான் இம்ரான் கான், அந்நாட்டு மன்னரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். மெக்காவில், அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்தார். இம்ரானை, மன்னர், தனது மொழி பெயர்ப்பாளருடன் வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது, இம்ரான் கான், மொழிபெயர்ப்பாளரிடம், மன்னரிடம் ஏதோஒன்றை கூற சொல்லிவிட்டு, பதிலுக்கு காத்திருக்காமல், உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவின. பலர், சவுதி மன்னரை, இம்ரான் கான் அவமதித்து விட்டதாக கண்டனம் தெரிவித்தனர்.

Read More

தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை : இலங்கை அரசு முடிவு

தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை : இலங்கை அரசு முடிவு

சமூக வலைதளங்களில் அவதூறு பேச்சுக்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர். 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இலங்கையில் டுவிட்டர், பேஸ்புக், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த 9 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி, சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை…

Read More

திமுகவினர் பள்ளிகளில் இந்தி: எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி

திமுகவினர் பள்ளிகளில் இந்தி: எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி

இந்தியை கற்க சொல்லும் மத்திய அரசின் மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் அரசியல்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக திமுக இந்தியை எதிர்ப்பது ஏன் என்பது தொடர்பாக பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆதாரங்களுடன் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுகவினர் நடத்தும் 45 பள்ளிகள் பெயர் விவரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா அவரது டுவிட்டரில் ; திமுகவினர் இந்தி திணிப்பு என வெளியில் காட்டி கொண்டு அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் இந்தி கற்றுக்கொள்ள வசதி ஏற்பட்டால் இவர்கள் பிழைப்பில் மண் விழுந்திரும். இப்போ புரியுதா இவர்கள் எதிப்பு ஏன் என்று ?அவரது டுவிட் வருமாறு ; @HRajaBJP அரசு பள்ளிகளில்…

Read More

ஹூவாவே விவகாரம்: டொனால்ட் டிரம்புடன் தெரீசா மே ஆலோசனை

ஹூவாவே விவகாரம்: டொனால்ட் டிரம்புடன் தெரீசா மே ஆலோசனை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின் அமெரிக்காவுடன் ஒரு நீடித்த வணிக ஒப்பந்தத்தை பிரிட்டன் பெறும் என தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் மூன்று நாட்கள் அரச பயணமாக பிரிட்டன் சென்றுள்ளனர். பிரிட்டன் அரசி எலிசபெத்தை நேற்று சந்தித்த டிரம்ப், இன்று தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். டிரம்பின் பயணத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் தெரீசா மேயால் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஹூவாவே என்கிற சீன நிறுவனத்தோடு வணிகம் நடத்துவதை முதன்மையாக கொண்டு, இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வணிக நிறுவனங்களின் தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கூட்டம். டவுனிங்ஸ்டீரீட் அலுவலகத்தில் அதிபர்…

Read More

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது

ரோகித் சதம், சகால் 4 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்ட கேதர் ஜாதவ் இடம் பிடித்தார். ‘வேகத்தில்’ பும்ரா, புவனேஷ்வர், ‘சுழலில்’ சகால், குல்தீப் இடம்பிடித்துள்ளனர். தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு இடம் கிடைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா மீண்டும் அணிக்கு திரும்பினார். தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன்…

Read More

திரிணாமுல் காங்., உடன் மோதுபவர்கள் அழிக்கப்படுவார்கள் – மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்., உடன் மோதுபவர்கள் அழிக்கப்படுவார்கள் – மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் ரம்ஜானை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மம்தா, எங்களுடன் மோதுபவர்கள் யாராக இருந்தாலும் அழிக்கப்படுவார்கள். சூரியன் உதிக்கும் போதும் மிக பிரகாசமாக தான் இருக்கும். பா.ஜ.,வும் அது போல தான் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி பிரகாசமாக உதித்துள்ளது. ஆனால் வந்தபடியே அவர்கள் வீழ்ந்து விடுவார்கள். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி அதன் மூலம் வெற்றி பெற்றவர்கள், விரைவில் காணாமல் போய் விடுவார்கள். ஹிந்துக்கள் நம்பிக்கையின் பக்கம் நிற்கிறார்கள். இஸ்லாமியர்கள் நேர்மையின் பக்கம் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அன்பின் பக்கமும், சீக்கியர்கள் தியாகத்தின் பக்கமும் உள்ளனர். இது தான் எங்களின் அன்பிற்குரிய ஹிந்துஸ்தான். நாங்கள் அதனை பாதுகாப்போம் என்றார். மம்தாவின் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கும்…

Read More

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை

உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த அதிரடியை அவர் மேற்கொண்டார். அதன்படி சீன இறக்குமதி பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) அளவுக்கு கடந்த ஆண்டு வரி விதித்தார். டிரம்பின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனாவும் வரியை…

Read More
1 188 189 190 191 192 425