என் பணியின் நினைவுகளை விட்டுச் செல்லும் காலம் வந்து விட்டது: கிரண்பேடி
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, விரைவில் மாற்றப்படுவார் எனவும், புதிய கவர்னர் நியமன பணிகள் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், 2016 மே 29ல், கிரண்பேடி, கவர்னராக பொறுப்பேற்றார். முதல்வர் நாராயணசாமிக்கு, ஜூன் மாதம் பதவி பிரமாணம் செய்து வைத்ததுடன், அவரது பொறுப்பு நின்றுவிடவில்லை. மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில், மிகவும் ஆர்வம் செலுத்தினார்.பொது மக்களிடம் நேரடியாக குறை கேட்பது, அதிகாரிகளை அழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்துவது, வார இறுதி நாட்களில் நீர்நிலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது, உள்ளிட்ட பல பணிகளை கையில் எடுத்தார். இதனால், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது அதே நேரம், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு,…
Read More









