இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்

இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்

இலங்கையில் கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பை ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மூலம் நடத்தியதாக தகவல்  வெளியானது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள்  ஐ.எஸ். அமைப்பால் தயாரிக்கப்பட்ட “சாத்தானின் தாய்” எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர். இதனால் இந்த…

Read More

கர்நாடகா அரசுக்கு ஆபத்து !!

கர்நாடகா அரசுக்கு ஆபத்து !!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது. கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த. – காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரசுக்கு 78 எம்.எல்.ஏ.க்களும் மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். எதிர்க்கட்சியான பா.ஜ.வுக்கு 104 எம்.எல்.ஏ.க் கள் உள்ளனர்.ஆளும் கூட்டணியில் உள்ள இரு கட்சியினருக்கும் இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் சிலரும் கட்சி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளனர். ‘சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ. அதிக இடங்களில் வெற்றி பெறும்’ என…

Read More

சிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை

சிவன் கோயில் சொத்து: கூவி கூவி விற்பனை

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள, திரிசூலம் மலையில், சிவன் கோவிலுக்கு சொந்தமான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பட்டா நிலங்கள், தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு, துறை அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மலையில் அமைந்துள்ள கிராமம் திரிசூலம். மலை மீது குடி கொண்டிருக்கும், திரிச்சுரமுடையார் எனும் திரிசூலநாதர் கோவிலால், இந்த ஊருக்கு, திரிசூலம் என, பெயர் கிடைத்தது.இக்கோவிலில், மூலவராக திரிசூலநாதரும், உற்சவராக சந்திரசேகரரும், அம்பாளாக திரிபுரசுந்தரியும் அருள் பாலிக்கின்றனர். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடக்க, லிங்க பிரதிஷ்டை செய்து, நான்கு வேதங்களை சுற்றிலும் வைத்து பூஜித்ததாகவும், லிங்கத்தை…

Read More

இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது உறுதி

இலங்கை குண்டுவெடிப்பு: தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் பலியானது உறுதி

ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் டிஎன்ஏயுடன், ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் கண்டெடுக்கப்பட்ட தலை பகுதியுடன் ஒப்பிட்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனைகளிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மூன்று கிறிஸ்தவ தேவாலங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் கொழும்பிலுள்ள ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் இருவர் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டனர். அவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களில்…

Read More

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

குஜராத் கடற்கரையில் 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு எல்லை வழியாக போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வருவதை கட்டுப்படுத்த எல்லைப் பாதுகாப்பு படை தீவிரமான நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதனால் கோடிக்கணக்கான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்படும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதேபோன்று கடல் வழியாகவும் இந்தியாவிற்கு போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் கடத்தப்படுகிறது. இப்போது இந்திய கடலோர காவல்படையின் ரோந்து பணியின்போது 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து பெருமளவு போதைப்பொருட்கள் குஜராத்திற்கு வருகிறது என எல்லைப் பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவலை உளவுத்துறை கொடுத்துள்ளது. பாகிஸ்தான் படகிலிருந்து இந்திய படகிற்கு மாற்றி கடத்தலை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது….

Read More

இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு: 14 தொகுதிகளில் திமுகவுக்கு வாய்ப்பு

இடைத்தேர்தல் கருத்துக் கணிப்பு: 14 தொகுதிகளில் திமுகவுக்கு வாய்ப்பு

22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., 14 தொகுதிகளிலும், அதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்ற தொகுதிகளில் இழுபறி இருக்கும் என்றும் இந்தியா டுடே கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏப்., 18 அன்றும், 4 தொகுதிகளுக்கு மே19 அன்றும் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், திமுக 14 தொகுதிகளிலும் அதிமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும், 5 தொகுதிகளில் இழுபறி நிலவும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

Read More

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலை பிரகடனம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனம் ஹூவாய். இந்நிறுவனம், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக ஹூவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன. அத்துடன் ஹூவாய் நிறுவனத்தின் 5-ம் தலைமுறை செல்போன் ‘நெட்வொர்க்’ (5ஜி) சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட…

Read More

ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு

ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபானுடன் பாதுகாப்பு படையினர் போரிட்டுவரும் பகுதியில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்தனர். ஹெல்மண்ட் மாகாணத்தில் வெளிநாட்டு படைகள் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் போலீசார் 17 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து விசாரணை  நடத்தப்படும் என்று ஆப்கான் தெரிவித்துள்ளது. ஆப்கானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளும் அமெரிக்க படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்கா தரப்பில் இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் படைகள் எப்போது எல்லாம் உதவியை கோருகிறதோ அப்போது எல்லாம் அமெரிக்க படைகள் உதவிகளை…

Read More

மன்னிக்க முடியாது: பிரக்யா மீது பிரதமர் கோபம்

மன்னிக்க முடியாது: பிரக்யா மீது பிரதமர் கோபம்

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து; அவரது பெயர் கோட்சே’ என, மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான, கமல்கூறியிருந்தார். இது குறித்து, ம.பி., மாநிலம் போபாலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்யா சிங் கூறியதாவது: நாதுராம் கோட்சே, ஒரு தேசபக்தராக இருந்தார்; எப்போதும் அவர், தேசபக்தர்தான். அவரை பயங்கரவாதி என்பவர்கள், கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்க்கட்டும். அவர்களுக்கு, தேர்தலில், மக்கள் பதிலடி கொடுப்பர்.இவ்வாறு, அவர்கூறினார். இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: மஹாத்மா காந்தி, கோட்சே குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தவறானவை. மோசமானவை. தனது பேச்சிற்காக பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டிருக்கலாம்….

Read More

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு கலவரத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு கலவரத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

இலங்கையில் முஸ்லிம்களின் கடை, வீடுகளை அடித்து நொறுக்கிய, 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான, இலங்கையில், சமீபத்தில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில், தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 258 பேர் பலியாகினர். 500 பேர் காயம் அடைந்தனர்.இந்த சம்பவத்துக்கு பின், இலங்கையில் இயல்பு நிலை திரும்பியது.இந்நிலையில், சமூக வலைத்தளங்களில், வதந்திகள் பரவத் துவங்கின. இதையடுத்து, இலங்கையின் வடமேற்கு பகுதியில், இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப் பட்டன. பதற்றமான சூழல் ஏற்பட்டதால், சில நகரங்களில், நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு…

Read More
1 191 192 193 194 195 425