இலங்கை பாதுகாப்புதுறைக்கு சீனா 260 கோடி ரூபாய் நிதி உதவி

இலங்கை பாதுகாப்புதுறைக்கு சீனா 260 கோடி ரூபாய் நிதி உதவி

இலங்கை பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென இலங்கை ஜனாதிபதியிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல், சீன ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதேவேளை, இலங்கை போலீஸ் திணைக்களத்திற்கு 150 கோடிரூபாய் பெறுமதி வாய்ந்த 100 ஜீப் வண்டிகள் உள்ளிட்ட வசதிகளை…

Read More

கவலைப்படாதே மகனே: சோனியா அட்வைஸ்

கவலைப்படாதே மகனே: சோனியா அட்வைஸ்

ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க நேர்ந்து, பிரதமர் பதவி காங்கிரசிற்கு கிடைக்காவிட்டால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று மகன் ராகுலிடம் சோனியா கூறி உள்ளதாக தெரிகிறது. பா.ஜ.,வுக்கு 200 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று சோனியா நினைக்கிறார். அவருக்கு நெருக்கமான காங்., மூத்த தலைவர்களான அகமது படேல், சாம் பிட்ரோடா, ம.பி., முதல்வர் கமல்நாத் போன்றோர் கூறிய தகவல்களின் அடிப்படையிலேயே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.இந்த தலைவர்களிடம் பேசும்போது, பா.ஜ., அல்லாத அரசு அமைய நேரிடும் வாய்ப்பு உள்ளதால், திரிணாமுல் காங்., தலைவர் மம்தா, பகுஜன் தலைவர் மாயாவதி ஆகியோருடன் நட்புடன் இருக்குமாறும் சோனியா யோசனை தெரிவித்துள்ளார். பா.ஜ.,…

Read More

லசித் மலிங்கா: ஒரே பந்தில் ஐபிஎல் தொடரின் ஹீரோவான கதை

லசித் மலிங்கா: ஒரே பந்தில் ஐபிஎல் தொடரின் ஹீரோவான கதை

எதிர்பாராத திருப்பங்கள், இன்ப அதிர்ச்சிகள், கடும் அதிர்ச்சி தோல்விகள் என எல்லாம் கலந்த கலவையே விளையாட்டு. ஒரு சில வினாடிகளில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும் விளையாட்டுதான் கிரிக்கெட். அதனால்தான் கிரிக்கெட் விளையாட்டு புகழ்பெற்ற ‘நிச்சயமற்ற தன்மை’ கொண்ட விளையாட்டு என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு எதிர்பாராத திருப்பத்தை அல்லது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் ரசிகர்கள் காண நேர்ந்தது. சிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆறு விக்கெட்டுகள் கையிருப்பில் இருந்ததாலும், அப்போது 70 ரன்களை கடந்த ஷேன் வாட்சன்…

Read More

‘இலங்கை ராணுவத்தினர் கண் முன் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்’

‘இலங்கை ராணுவத்தினர் கண் முன் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்’

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிறகு இஸ்லாமியர் வாழும் சில பகுதிகளில் தொடர் தாக்குதல்கள் நடக்கின்றன. புத்தளம் மாவட்டத்திலுள்ள துன்மோதர பகுதியில் இஸ்லாமியர்கள் வீடுகள் மற்றும் பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்முறையாளர்கள் குரான் பிரதிகளை எரித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இலங்கையில் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவங்களினால் பல முஸ்லிம் கிராமங்கள் கடுமையான சேதம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இது புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசமாகும். இந்த பிரதேசத்தில் பெருமளவு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், இந்த கிராமத்தை சூழ்ந்துள்ள பகுதிகள்…

Read More

கமலை நடமாட விடமாட்டோம்: ஜீயர் ஆவேசம்

கமலை நடமாட விடமாட்டோம்: ஜீயர் ஆவேசம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செண்டலங்கார ஜீயர் கூறியதாவது: கலாசாரம் தெரியாதவர்களை கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமனம் செய்வதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவனந்தபுரம் பத்மநாப சாமி, திருப்பதி கோவில் நகைகள் குறித்த விபரம் வெளியிட்டது போல் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் நகைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட வேண்டும். ஹிந்துக்களுக்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ள கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம். கமலஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரோ என தோன்றுகிறது. அவர், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read More

இமயமலை பனிப்பொழிவில் சிக்கி பட்டினியால் மடிந்த மலை மாடுகள்

இமயமலை பனிப்பொழிவில் சிக்கி பட்டினியால் மடிந்த மலை மாடுகள்

கடுமையான பனிபொழிவில் சிக்கிக்கொண்டதால் சீனா உடனான இந்திய எல்லையில் அமைந்துள்ள இமையமலைப் பகுதியில் குறைந்தது 300 மலை மாடுகள் உணவின்றி, பட்டினியால் உயிரிழந்துள்ளன. வெள்ளியன்று, சிக்கிம் மாநிலத்தில் உள்ள முக்குதாங் பள்ளத்தாக்கில் அந்த மாடுகளின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்று ராஜ் யாதவ் எனும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு அதிகமுள்ள பகுதியில், சென்ற டிசம்பர் மாதம் முதலே அந்த மலை மாடுகள் சிக்கியிருந்தன. ஹெலிகாப்டர் மூலம் அவற்றுக்கு உணவைக் கொண்டு சேர்க்கும் அரசு அதிகாரிகளின் முயற்சி மோசமான வானிலை காரணமாக சாத்தியமில்லாமல் போனது. பல்லாயிரம் ஆண்டுகளாகவே இமயமலைப் பகுதிகளில் வாழும் இந்த மாடுகள் உணவு மற்றும் பால் தேவைகளுக்காக மட்டுமல்லாது பொதி சுமக்கவும்…

Read More

இலங்கையில் கலவரம்: ஒருவர் பலி

இலங்கையில் கலவரம்: ஒருவர் பலி

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று( மே 13)புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர், அவரது தொழிற்சாலையில் இருந்த போது, மர்ம கும்பல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டிவியில் ஆற்றிய உரையில் கூறியதாவது: அடையாளம் தெரியாத கும்பல் மதக்கலவரத்தில் ஈடுபட்டு நாட்டை அழித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட மேற்கு மாகாணத்தில் பல இடங்களில், அந்த கும்பல் கலவரத்தில் ஈடுபட்டு, பொது சொத்துகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு படையினரும் நிலைமையை…

Read More

பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த மணிசங்கர் அய்யர்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த மணிசங்கர் அய்யர்

காங்., கட்சியின் மூத்த தலைவரான, மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடி குறித்து, இழிவானவர் என்று பொருள்படும், ‘நீச்’ என்ற ஹிந்தி வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 2017 டிசம்பரில், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின், அமைதியாக இருந்த மணிசங்கர் அய்யர், ‘ரைசிங் காஷ்மீர்’ மற்றும் ‘த பிரின்ட்’ ஆகிய ஆங்கில நாளிதழ்களில், ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பிரதமர் மோடி குறித்து விமர்சித்து, அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மோசமான விமர்சனங்களை முன்வைத்து, தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவரது வாயில் இருந்து,…

Read More

இலங்கையில் தொடரும் மோதல்

இலங்கையில் தொடரும் மோதல்

குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளுக்கு உடன் அமலுக்குவரும் வகையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையினால் பல சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவும் தடை விதிக்க அரசாங்கம் தீர்மானித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்தும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவித்து, மீண்டும்…

Read More

இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை

இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை

இலங்கையில் பல பகுதிகளில் அமைதி குலைவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்படியாக உத்தரவு பிறப்பித்துள்ளது இலங்கை போலீஸ். நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்தே, இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. சிலாபம், குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் இன்றும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதை அடுத்து, இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. வடமேல் மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்கு…

Read More
1 192 193 194 195 196 425