பயங்கரவாதத்தை அழிப்பதும் துாய்மை பணி தான்: பிரதமர் மோடி
உ.பி., மாநிலம், குஷி நகர், தியோரியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் திறமையான, நேர்மையான அரசுக்கு ஓட்டளிக்க, மக்கள் முடிவு செய்து விட்டனர். அதனால், இப்போது எதிர்க்கட்சிகள் மல்லாக்க கவிழ்ந்து விட்டன.உ.பி.,யில், அகிலேஷ் மற்றும் மாயாவதி முதல்வராக பதவி வகுத்த காலத்தை விட, குஜராத்மாநிலத்தில், நான் அதிக காலம் முதல்வராக இருந்துள்ளேன்; மக்கள்,பிரதமர் பதவியையும் அளித்தனர்.ஆனால், அந்த பதவியையோ, அதிகாரத்தையோ, என் குடும்பத்துக்காக எப்போதுமே பயன்படுத்தியது இல்லை. ஏழ்மையில் இருந்த என் குடும்பம், பணக்காரர்களாக மாறவும் இல்லை. மக்கள் அளித்த அதிகாரத்தை, அவர்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மட்டுமே பயன்படுத்தினேன். இதுவரை நான், ஜாதி அரசியலில் ஈடுபட்டது கிடையாது; ஆனால்,…
Read More









