காலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை

காலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை

வெயில் காரணமாக லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை உள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், ரம்ஜான் மாதம் துவங்குவதால் ஓட்டுப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே. வெயில் காரணமாக பிற்பகலுக்கு பிறகு ஓட்டளிக்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ரம்ஜான் மாதமும் துவங்கி உள்ளதால் காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவை துவங்கலாமே என தெரிவித்துள்ளது….

Read More

இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் கைது – அமைச்சர் தகவல்

இலங்கை குண்டுவெடிப்பு: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் கைது – அமைச்சர் தகவல்

இலங்கை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் நிலைகொண்ட பயங்கரவாதத்தை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சஹரான் இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் என கூறிய போதிலும், அவர் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இல்லை எனவும் அவர் கூறினார். அமைப்பொன்றின் தலைவர் ஒருபோதும் தற்கொலை குண்டுத் தாக்குலை நடத்தி உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் கிடையாது என்றும், தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்…

Read More

வாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு

வாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற மே 19ந்தேதி நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்பவரை சமாஜ்வாடி கட்சி களமிறக்கி உள்ளது. இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர். வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அவர் புகார் எழுப்பினார். தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

Read More

மாவோயிஸ்ட் தாக்குதல்: 16 வீரர்கள் வீரமரணம்

மாவோயிஸ்ட் தாக்குதல்: 16 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்து தாக்குதல் நடத்தியதை போன்று மகாராஷ்டிராவில் கமாண்டோக்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில், 16 கமாண்டோ படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு வீசி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வாகன டிரைவரும் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. முன்னதாக நேற்று பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீவைத்து மாவோயிஸ்டுகள்…

Read More

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில் 40 வெளிநாட்டினர் உள்பட 253 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இலங்கையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், அதனால் கடற்கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என…

Read More

நீங்கள் பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே…!!

நீங்கள் பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே…!!

‘நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போகிறீர்களா’ என, நிருபர்கள் கேட்டதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார். மதுரையில் அவர் கூறியதாவது:நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள, மூன்று, எம்.எல்.ஏ.,க்களும், அ.ம.மு.க.,வில் இருப்பதற்கான ஆவணங்கள், சபாநாயகரிடம் உள்ளன. தற்போது, அ.தி.மு.க.,வில், ‘சீட்’ கேட்டு, கிடைக்காதவர்களுக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலும், விரைவில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம், ‘நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே’ என, நிருபர்கள் கேட்டதற்கு, ‘இந்த கேள்வி அடிமுட்டாள்தனமானது. ஸ்டாலினிடம், காங்கிரசில் சேரப் போகிறீர்களா என கேட்க முடியுமா?’ என, கோபமாக கேட்டார். முன்னதாக ”துணை முதல்வர் பன்னீர்செல்வம் மே., 23க்கு பின் பா.ஜ.,வில் இணைவது உறுதி” என அ.ம.மு.க., கொள்ளை பரப்பு செயலர் தங்க…

Read More

பொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்

பொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்

பொய் சொன்ன ராகுலை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ராகுல் சொன்ன தவறான பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., எம்.பி., மீனாட்சி லெக்வி அவதூறு வழக்கு தொடர்ந்தார். ரபேல் வழக்கில் கூடுதல் ஆவணங்களை ஏற்று விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து ராகுல் சுப்ரீம்கோர்ட்டே, காவலாளி மோடி திருடன் என்று சொல்லி விட்டது என கருத்து தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜ., தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்; உணர்ச்சிப்பூர்வமாக தவறுதலாக கூறி விட்டதாகவும், இதற்கு வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த…

Read More

மம்தாவின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேருவர் : மோடி

மம்தாவின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேருவர் : மோடி

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பா.ஜ.,வில் இணையப்போகின்றனர் என பிரதமர் மோடி அதிரடியாக பேசினார். மே.வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள, ஸ்ரீராம்பூர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ” மேற்கு வங்கத்தில் மம்தாவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய விரும்புகின்றனர். நாடுமுழுவதும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும், இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்….

Read More

இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்

இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்

பயங்கரவாதிகளை எதிர்கொள்வது குண்டுவெடிப்பு நேரங்களில் கையாள்வதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களும் என்.எஸ்.ஜி., , எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் ( கறுப்பு பூனை படை ) சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 253 பேர் கொல்லப்பட்டனர். இன்னும் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இலங்கையில் கடந்த 21 ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 253 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து இலங்கை படையினர் பயங்கரவாதிகளை கைது செய்வதில் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கிழக்கு இலங்கையின் கல்முனை பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது…

Read More

இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை

இலங்கையில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை அடுத்து, முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்படுவுதாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முகத்தை மறைக்கும் ஆடைகள் அல்லது அடையாளங்களை மக்கள் அணிய தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இந்த தடை ஏப்.,29 முதல் அமலுக்கு வருகிறது. அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் இந்த தடை கொண்டு வரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்னும் பதற்றம் அடங்காத நிலையே காணப்படுகிறது. மக்கள் வெடிகுண்டு அச்சத்தில் உறைந்துள்ளனர். ராணுவம் தொடர்ந்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக வயல்வெளி பகுதிகளில் இருந்து வெடி பொருட்களும், மறைவான இடங்களில்…

Read More
1 195 196 197 198 199 425