புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு – இரா.சம்பந்தன்

புலிகளின் போராட்டத்தையும், தற்போதைய குண்டுவெடிப்பையும் ஒப்பிடுவது தவறான நிலைப்பாடு – இரா.சம்பந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வடிவத்திற்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போராட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோள்களுடன் போராட்டங்களை நடத்தியதாக சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் குறிக்கோள்கள் இன்றி போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் தொடர்புப்படுத்துவதை, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். கேள்வி :- இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு…

Read More

இலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்

இலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மகாவேலா கார்டன்ஸ் பகுதியில் 3 அடுக்கு மாடி வீடு ஒன்றில் வசித்து வந்த இவர்களில் இன்ஷாப் இப்ராஹிம் (33) என்பவர் காப்பர் ஆலை உரிமையாளராக உள்ளார். மசாலா பொருட்கள் உற்பத்தி ஆலையின் உரிமையாளரான இவரது சகோதரர் இப்ராஹிம், தாக்குதல் நடத்தப்பட்ட சொகுசு ஓட்டல் ஒன்றில் வெடிகுண்டுகளை வைத்து சென்றது தெரிய வந்தது. இதனை அறிந்து போலீசார் அவரை தேடிச் சென்ற போது, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர், இப்பகுதியில் இவர்களின் குடும்பம் செல்வாக்கு…

Read More

வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு

வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று ( 25 ம் தேதி ) மெகா பேரணி நடந்தது. நாளை (26 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார். 5 லட்ச தீபம் 2வது முறை போட்டியிடும் பிரதமர் வருகையை முன்னிட்டு இங்குள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது.பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது. பேரணியில் பா.ஜ.,…

Read More

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – ”ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்” – ருவன் விஜயவர்த்தனே

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – ”ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்” – ருவன் விஜயவர்த்தனே

”இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். ”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார். ”தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்” என்றும் ருவன் தெரிவித்துள்ளார். ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான…

Read More

தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்

தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்

பிரதமர் மோடி, தான் தனது தாயுடன் வசிக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகர் அக்சய் குமாருக்கு கலந்துரையாடல் வடிவில் அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்றுபட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, தனது தாய் குறித்தும், தான் தனது தாயுடன் வசிக்காததற்கான காரணம் குறித்தும் தெரிவித்துள்ளார். அதில் அவர், மிக இளம் வயதிலேயே நான் என் தாயை பிரிந்து வந்து விட்டேன். சிறு வயதிலேயே அனைத்து பற்றுகளில் இருந்தும் விடுபட்டேன். அனைத்து பந்தங்களும் மாயை என்பது தான் நான் எனது பயிற்சியில் கற்றுக் கொண்டது. அதனை அனைத்து பந்தங்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன். அந்த வயதில் நான் வீட்டை விட்டு வெளியேறிய போது துன்பமாக…

Read More

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்; ராணுவ செயலர், காவல் துறை தலைவர் பதவி விலக இலங்கை அதிபர் வலியுறுத்தல்

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்; ராணுவ செயலர், காவல் துறை தலைவர் பதவி விலக இலங்கை அதிபர் வலியுறுத்தல்

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமை தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது அன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தியதில் ஒரு பெண் உள்பட 9 தற்கொலை படையினர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது….

Read More

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்; வங்காளதேச பிரதமரின் உறவினரான 8 வயது சிறுவன் உயிரிழப்பு

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்; வங்காளதேச பிரதமரின் உறவினரான 8 வயது சிறுவன் உயிரிழப்பு

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது அன்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இந்த தாக்குதல்களில் இதுவரை 321 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதில், வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் பஸ்லுல் கரீம் செலிம் என்பவரின் பேரன் ஜயான் சவுத்ரி (வயது 8) கொல்லப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. …

Read More

சவுதியில் 37 பேருக்கு மரண தண்டனை

சவுதியில் 37 பேருக்கு மரண தண்டனை

ரியாத் சவுதி அரேபியாவில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்நாட்டை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடந்த விசாரணையில், அவர்கள் நாட்டின் பாதுகாப்பினை சீர் குலைக்க மற்றும் குழப்பங்களை விளைவிக்க, ‘ஸ்லீப்பர் செல்’லாக செயல்படும் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி வந்தது தெரிய வந்தது. அதனால், அந்நாட்டு சட்டப்படி அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவானது.இதைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

Read More

வெடி குண்டு நிரப்பிய லாரி ஊடுருவல்; இலங்கையில் மீண்டும் பரபரப்பு

வெடி குண்டு நிரப்பிய லாரி ஊடுருவல்; இலங்கையில் மீண்டும் பரபரப்பு

கொழும்பு:வெடி குண்டு நிரப்பப்பட்ட லாரியும், வேனும், இலங்கை தலைநகர் கொழும்புக்குள் ஊடுருவியதாக, பாதுகாப்புஅதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து,நாடு முழுவதும், மீண்டும் பதற்றமும், பீதியும் நிலவியது. அனைத்து வாகனங்களிலும், போலீசார், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்டை நாடான, இலங்கையில், சமீபத்தில், ஈஸ்டர் பண்டிகை அன்று, தேவாலயங்கள், நட்சத்திரஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில், அடுத்தடுத்து, சக்தி வாய்ந்தகுண்டுகள் வெடித்தன.இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 38 பேர் உட்பட, 321 பேர், உடல் சிதறி பலியாகினர். மேலும், 500க்கும் மேற்பட்டோர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சோதனை இந்த கொடூர தாக்குதலுக்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம்…

Read More

கொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி

கொழும்பு ஓட்டலில் தாக்குதல் நடத்திய நபரின் மனைவி, சகோதரி வேறொரு தாக்குதலில் பலி

இலங்கையின் கொழும்பு நகரில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்நிலையில், கொழும்பு நகரின் மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நேற்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இதேபோன்று ஷாங்க்ரிலா, சின்னமன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய மூன்று 5 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு…

Read More
1 196 197 198 199 200 425