இலங்கை ஜனாதிபதி சிறிசேன கேள்வி: ஐ.எஸ். அமைப்புக்கு சக்தி வாய்ந்த நாடுகளை தாக்கும் திறன் இருக்கிறதா?

இலங்கை ஜனாதிபதி சிறிசேன கேள்வி: ஐ.எஸ். அமைப்புக்கு சக்தி வாய்ந்த நாடுகளை தாக்கும் திறன் இருக்கிறதா?

இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பிபிசியுடனான பிரத்யேக பேட்டியின்போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன பதிலளித்தார். கேள்வி: இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழு உங்கள் நாட்டை இலக்கு வைக்கும் என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இருந்ததா? அப்படியொரு கற்பனையை கூட செய்திருப்பீர்களா? பதில்: உண்மையை சொல்வதென்றால், அப்படி நான் நினைத்ததே இல்லை. நான் அதிர்ச்சி அடைந்தேன். இலங்கையை ஏன் அவர்கள் தேர்வு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கேள்வி: பிறகு தாக்குதல் நடத்த இலங்கையை அவர்கள் ஏன் தேர்வு செய்திருப்பார்கள் என கருதினீர்கள்? பதில்: உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக…

Read More

மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார்

மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார்

துரியோதனின் அழிவுக்கு அவனது ஆணவமே காரணம் என முன்னாள் பிரதமர் ராஜீவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு, பிரியங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பா.ஜ., தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், பிரசாரம் ஒன்றில், பிரதமர் மோடி பேசுகையில், மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் கருதப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் இறுதியில் ஊழல்வாதி எனப் பெயரெடுத்தார் என பேசியிருந்தார். இதற்கு காங்., மற்றும் பிற கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் நடந்த பிரசாரத்தில் பிரியங்கா பேசியதாவது: பிரதமர் மோடிக்கு வேறு…

Read More

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பயன்பட்ட பயிற்சி மையம் கண்டுபிடிப்பு

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் பயன்பட்ட பயிற்சி மையம் கண்டுபிடிப்பு

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று காலை 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே நாளில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே.) மற்றும் ஜமாதி மிலாது இப்ராகீம் என்ற பிரிவினைவாத குழு மீது அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது. தொடர்ந்து, அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த வாரம் இந்த இரு அமைப்புகளையும் தடை…

Read More

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கலின் திருமணம் கடந்த ஆண்டு மே 19-ம் தேதி லண்டனுக்கு அருகே உள்ள வின்ஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உள்ளூர் நேரப்படி காலை 5.26 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.2 கிலோ எடை இருந்தது. இதுகுறித்து இளவரசர் ஹாரி கூறும்போது, ‘‘மேகனும், குழந்தையும் நலமாக உள்ளனர். நான் இதுவரை கனவிலும் காணாத மிகவும் அற்புதமான அனுபவம் இது. ஒவ்வொரு தந்தையையும் போல நானும் எனது மனைவியை நினைத்து பெருமைப்படுகிறேன்’’ என்றார். குழந்தைக்கான பெயரை தேர்வு…

Read More

பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வம்

பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வம்

வரும், 19ல் தேர்தலை சந்திக்கும், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதியின், பா.ஜ., வேட்பாளர், பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவரால் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. காரணம், வட மாநிலங்கள் பலவற்றிற்கும், பா.ஜ.,வின் நட்சத்திர பேச்சாளராக அவர், சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதனால், தொகுதிக்கு, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தான் அவரால் வர முடிகிறது. இந்த லோக்சபா தொகுதியின், ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்குள் அடங்கியுள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல், மேலோட்டமாக, நகர்புறங்களில் மட்டும் பிரசாரம் செய்கிறார்.ஆனால், காங்கிரஸ் வேட்பாளர், சுனில் ஜாக்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கி, இரண்டு முறை, அனைத்து இடங்களுக்கும் சுற்றி வந்து…

Read More

எங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்ற காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி

எங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்ற காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி

இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது எல்லாம் என்னுடைய அரசு எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறது என பிரதமர் மோடி கூறி வருகிறார். காங்கிரஸ்  ஆட்சியின்போது ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூக நடவடிக்கையாக இருந்தது. இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு எதிராகவே மேற்கொண்டோம், ஆனால் அதனை வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தவில்லை எனக் கூறினார். இந்நிலையில் எங்கள் ஆட்சியின்போது 6 சர்ஜிக்கல்…

Read More

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன் பிட்காயின் அடிப்படையில் நிதி திரட்டிய ஐ.எஸ். அமைப்பு

இலங்கை தாக்குதலுக்கு முன்னர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பானது தங்களிடம் உள்ள க்ரிப்டோ கரன்சிகளை டாலர்களாக மாற்றியதாக கண்டறிந்துள்ளது. இஸ்ரேல் நிறுவனமான ஒஉஇட்ஸ்டீர்ம் இதுகுறித்து தெரிவிக்கையில், பிட்காயின் முறையில் இருக்கும் நம்பகத்தன்மை மற்றும் மேற்பார்வை செய்யப்படாத சர்வதேச பண மாற்றங்கள் அனைத்தும் தீவிரவாதத்திற்கு பயனளிப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. இலங்கையில் நூற்றுக்கணக்கானவர்களின் உயிரைப் பறித்த அந்த தொடர் தாக்குதல்களுக்கு முன்னர் ஐ.எஸ். அமைப்பு பிட்காயின் பரிமாற்றங்கள் செய்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி காயின் பேமெண்ட்ஸ் (CoinPayments) என்ற தளத்தின் நிலுவையில் உள்ள தொகை £383,000 இருந்து £3.45 மில்லியன் என அதிகரித்ததாக அந்த இஸ்ரேல் நிறுவனம் கண்டறிந்துள்ளது. ஆனால் ஈஸ்டர் ஞாயிறன்று அந்த மொத்த பணமும் மாயமாகி,…

Read More

பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம் அதிரடியில் இறங்கியது இலங்கை அரசு

பயங்கரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம் அதிரடியில் இறங்கியது இலங்கை அரசு

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துவர்களின் பண்டிகையான, ‘ஈஸ்டர்’ அன்று, இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில், தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது.இதில், 253 பேர் கொல்லப்பட்டனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உள்ளூர் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒன்பது பேர், இந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.பயங்கரவாதிகள் ஒன்பது பேர் மற்றும் அவரது உறவினர்களின் விபரங்களை, போலீசார் சமீபத்தில் வெளியிட்டனர். பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களின் பட்டியலை, விசாரணை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர்.அந்த சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில், அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும்வரை,…

Read More

இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள்

இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகள்

இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி பி.பி.சி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார். இலங்கை பாதுகாப்பு பிரிவினர், உள்நாட்டு யுத்தத்தை தடுத்து நிறுத்துவதற்கான கட்டமைப்புடன் செயற்பட்டு வருகின்றமையே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச ரீதியில் செயற்படுகின்ற பயங்கரவாத அமைப்புக்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான திட்டமொன்று இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது…

Read More

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பாதி பேர் இந்தியர்கள் -சீனர்கள்

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பாதி பேர் இந்தியர்கள் -சீனர்கள்

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் 11.7 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் பாதி பேர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் அந்தநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் 11.7  லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5.8 லட்சம் மாணவர்கள், அதாவது 49.5 சதவீதம் மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 75 சதவீதம் மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புகள் பயின்று வருகிறார்கள் என்றும், 11 சதவீதம் மாணவர்கள் இளநிலை படிப்புகளும் 10 சதவீதம் மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கும் பயின்று வருவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள்…

Read More
1 194 195 196 197 198 425