முஸ்லிம் கவர்னர்கள், மந்திரிகள் இலங்கையில் ராஜினாமா

முஸ்லிம் கவர்னர்கள், மந்திரிகள் இலங்கையில் ராஜினாமா

இலங்கையில் புத்த மதத்தினரும் கிறிஸ்தவர்களும் போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் இரண்டு முஸ்லிம் கவர்னர்கள் நேற்று பதவிகளை ராஜினாமா செய்தனர். பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடையதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டதால் அதிருப்தியடைந்த ஒன்பது அமைச்சர்களும் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏப்ரல் 21ல் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் முஸ்லிம் பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.இதில் 258 பேர் இறந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதையடுத்து முஸ்லிம்கள் மீதும் அந்த மதத்தினர் நடத்தும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீதும் பெரும்பான்மை சிங்களர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்கவர்னர்கள் இருவர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக புத்த…

Read More

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பிக்குகள் செல்வாக்கு – முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பிக்குகள் செல்வாக்கு – முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பல தசாப்தங்களாக பலிகொண்டுவரும் சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது முஸ்லிம் மக்களின் மீது திரும்பியிருக்கும் இந்த வேளையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைதாமே…

Read More

கண்டியில் வெடித்தது போராட்டம்: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை நீக்கக்கோரிக்கை

கண்டியில் வெடித்தது போராட்டம்: முஸ்லிம் அமைச்சர், ஆளுநர்களை நீக்கக்கோரிக்கை

முஸ்லிம் அமைச்சர் ஒருவர் மற்றும் இரண்டு முஸ்லிம் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கண்டி நகரில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரையே பதவி நீக்குமாறு வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரர் கடந்த 31ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். கண்டி தலதா மாளிகைக்கு முன்னபாக அத்துரெலிய ரத்தன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அத்துரெலிய ரத்தன தேரர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,…

Read More

பெண்ணை எட்டி உதைக்கும் வீடியோ வைரலான நிலையில், பாஜக எம்.எல்.ஏ அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்

பெண்ணை எட்டி உதைக்கும் வீடியோ வைரலான நிலையில், பாஜக எம்.எல்.ஏ அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், பாஜக எம்.எல்.ஏ. பல்ராம் தவாணி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நரோடா பகுதியின் வார்டு பொறுப்பாளர் நிது தேஜ்வானியை எட்டி உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. பல்ராம் தவாணியின் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதையடுத்து நிது தேஜ்வானி தலைமையில் பெண்கள் சிலர் பால்ராம் தவாணின் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நிது தேஜ்வானியிடம் பால்ராம் தவாணி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், நிது தேஜ்வானி தனது தங்கை போல என்றும் அவருக்கு எப்போது எந்த உதவி வேண்டும் என்றாலும் செய்ய தயார் என்றும் பால்ராம் தவாணி தெரிவித்துள்ளார்.

Read More

உ.பி.யில் மகா கூட்டணி உடைந்தது !! இடைத்தேர்தலில் மாயாவதி தனியாக போட்டி

உ.பி.யில் மகா கூட்டணி உடைந்தது !! இடைத்தேர்தலில் மாயாவதி தனியாக போட்டி

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு வெற்றிப்பெறும் கட்சி மத்தியில் எளிதாக ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை இருக்கிறது. இதனை 2014 தேர்தலில் செய்தது. அங்கு 73 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. பா.ஜனதா மட்டும் 71 தொகுதிகளில் வென்றது. இம்முறை பா.ஜனதாவை தோற்கடிக்க மாநிலத்தில் ஆட்சி செய்த இரு பெரிய மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி அமைத்தது. இதனால் பா.ஜனதாவிற்கு பின்னடைவாக இருக்கும் என பார்க்கப்பட்டது. இருப்பினும் பா.ஜனதா கட்சி மோடி அலையில் வெற்றியை தனதாக்கியுள்ளது. பா.ஜனதா கட்சி முன்பு போல் 71 தொகுதிகளில் வெற்றிப்பெறவில்லை என்றாலும் 7 தொகுதிகளை மட்டும் இழந்து 64 தொகுதிகளை தன்வசப்படுத்தியது….

Read More

பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம்

பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த நாடாளுமன்றம்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதை அடுத்து இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சாதகமாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் செப்டம்பர் 17 நடைபெறும். 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி 35 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. வலதுசாரி கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க பெஞ்சமின் முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை. நரேந்திர மோதி பதவியேற்பு விழா: ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாதது ஏன்? இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர…

Read More

மகனின் பதவி ஏற்பு விழாவை டிவியில் பார்த்து கைதட்டி ரசித்த மோடியின் தாயார்!

மகனின் பதவி ஏற்பு விழாவை டிவியில் பார்த்து கைதட்டி ரசித்த மோடியின் தாயார்!

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை,  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டிலிருந்து டி.வி.யில் மோடியின் தாயார் ஹீரா பென். பார்த்து கைதட்டி ரசித்தார். நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக  2-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டதையடுத்து, நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மக்களவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமராக, நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் பதவியேற்றார்.  அவருடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள்…

Read More

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று நீட்டித்தது

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று நீட்டித்தது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை டில்லி கோர்ட் இன்று (மே 30) காலை நீட்டித்தது. இவ்வழக்கில் கார்த்திக்கு எதிராக அப்ரூவராக மாற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இவர் எந்நேரமும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற நிலையில், ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. கார்த்தி தற்போது எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை, எம்பி, எம்எல்ஏ.,க்களுக்கான சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

Read More

‘மு.க. ஸ்டாலின் இலங்கைக்கு வருகை தர வேண்டும்’ – சி.வி.விக்னேஸ்வரன்

‘மு.க. ஸ்டாலின் இலங்கைக்கு வருகை தர வேண்டும்’ – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கை தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தொடர்புகளை வலுப்படுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை இலங்கைக்கு வருகை தர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து கடிதத்தில் மேற்படி அழைப்பினை விக்னேஸ்வரன் விடுத்துள்ளார். நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை அபார வெற்றிக்கு வழிநடத்திய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என விக்னேஸ்வரன் எழுதியுள்ளார். திராவிட முன்னேற்ற கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில்…

Read More

மோடி பதவியேற்பு விழாவில், ‘பிம்ஸ்டெக்’ தலைவர்கள் பங்கேற்பார்கள்

மோடி பதவியேற்பு விழாவில், ‘பிம்ஸ்டெக்’ தலைவர்கள் பங்கேற்பார்கள்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில், ‘பிம்ஸ்டெக்’ தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.  கடந்த 2014ம் ஆண்டில் வெற்றி பெற்று பிரதமராக மோடி பதவியேற்ற போது, பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றது. 2வது முறையாக , வரும் 30ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி ‘பிம்ஸ்டெக்’ (வங்காள விரிகுடா நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு) அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட…

Read More
1 189 190 191 192 193 425