“செவன்” – விமர்சனம்

“செவன்” – விமர்சனம்

நடிகர்: ஹவிஷ் நடிகை: ரெஜினா டைரக்ஷன்: நிசார் சபி இசை : நிசார் சபி ஒளிப்பதிவு : சைத்தன் பரத்வாஜ் நந்திதா தனது கணவர் ஹவிஷை காணவில்லை என்று உதவி கமிஷனர் ரகுமானிடம் புகார் கொடுக்கிறார். இருவரும் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார் நந்திதாவின் கணவர் புகைப்படத்தை பார்த்த ரகுமானுக்கு அதிர்ச்சி. ஏற்கனவே அனிஷா அம்புரோஜும் ஹவிஷ் தனது கணவர் என்றும், காணாமல் போய்விட்டார் என்றும் புகார் அளித்து இருக்கிறார். இதுபோல் வாய்பேச முடியாத இன்னொரு பெண்ணும் ஹவிஷ் தனது கணவர் என்கிறார். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று உறுத்த ஹவிஷ் மீது பெண்களை ஏமாற்றி மோசடி…

Read More

இலங்கை குண்டு வெடிப்பு; பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது

இலங்கை குண்டு வெடிப்பு; பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அந்நாட்டின் காவல்துறை தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்த நிலையில், இதுகுறித்து இலங்கை அரசு தீவிர விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சி.ஐ.டி அதிகாரிகள், பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்ட இலங்கை போலீஸ்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் இன்றைய விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் மருத்துவ சிகிச்சையை காரணம்…

Read More

ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் – இந்திய அணி 314 ரன் குவிப்பு

ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் – இந்திய அணி 314 ரன் குவிப்பு

உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் ரோகித் சர்மா. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. பர்மிங்காமில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே மைதானம், சிறிய பவுண்டரி எல்லை என்ற காரணத்தால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார். கேதர் ஜாதவுக்குப் பதில் தமிழக அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ்…

Read More

IND Vs WI: மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கில் தடுமாற்றம்

IND Vs WI: மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கில் தடுமாற்றம்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 269 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம் !! மான்செஸ்டரில் இந்திய அணியின் 269 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு திணறடித்து வருகிறது. 15 ஓவர்களின் முடிவில் மேற்கிந்தியதீவுகள் 50 / 2 !! இரண்டு விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்தியத்தீவுகள் ரன்குவிப்பில் பெரிதும் தடுமாறி வருகிறது. 15 ஓவர்களின் முடிவில் அந்த அணி 50 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ஷமியின் புயல்வேக பந்துவீச்சில் மேலும் ஒரு விக்கெட் மேற்கிந்தியதீவுகள் அணியின் விக்கெட்கீப்பர் ஹோப் முகமது ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்….

Read More

அதிவேக 20,000: விராட் கோலி அசத்தல்

அதிவேக 20,000: விராட் கோலி அசத்தல்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை எட்டினார். மான்செஸ்டரில் நடக்கும் விண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, தனது 37 வது ரன்னை எட்டிய போது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இவர், 417 இன்னிங்சில் (டெஸ்ட்: 131 இன்னிங்ஸ், 6613 ரன்கள், ஒருநாள்: 224 இன்னிங்ஸ், 11124* ரன்கள், சர்வதேச ‘டுவென்டி-20’: 62 இன்னிங்ஸ், 2263 ரன்கள்) இந்த இலக்கை அடைந்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின்,…

Read More

ஏர்இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?

ஏர்இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?

அமெரிக்கா சென்ற ஏர்இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அது அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஏர்இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், மும்பையில் இருந்து நெவார்க் நோக்கி புறப்பட்ட ஏஐ 191 விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டனில் உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது. லண்டன் விமான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில், விமான ஓடு பாதை மீண்டும் திறக்கப்பட்டது. ஏர்இந்தியா போயிங் 777 விமானம் 10.15 மணிக்கு திருப்பி விடப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்பட்டது. போலீசார் சோதனை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…

Read More

பாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி !!

பாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி !!

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. மழையால் போட்டி, ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (5) ஏமாற்றினார். ஷஹீன் அப்ரிதி ‘வேகத்தில்’ கோலின் முன்ரோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லதாம் (1) வெளியேறினர். நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுக்கு 46 ரன் எடுத்து திணறியது. ஷதாப் கான் ‘சுழலில்’ வில்லியம்சன் (41) சிக்கினார். பின் இணைந்த பின் இணைந்த ஜேம்ஸ் நீஷம்,…

Read More

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: சஹ்ரான் ஹாஷிம் மனைவியிடம் மூடிய அறைக்குள் விசாரணை

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கூறப்படும் சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியா, வழக்கு விசாரைணையின் நிதித்தம் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று, புதன்கிழமை, முதல் தடவையாக முன்னிலைப் படுத்தப்பட்டார். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியன்று, சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பில் சஹ்ரான் குழுவினர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்த சம்பவத்தில், சஹ்ரானின் 28 வயதுடைய மனைவி ஹாதியாவும் அவரின் மூன்று வயது மகளும் உயிர் தப்பியிருந்தனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கொழும்பிலிருந்து வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஹாதியா, நீதிமன்றின் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மூடிய அறையில் விசாரணைகள் இடம்பெற்றன. இந்த வழக்கில்…

Read More

இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன?

இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா – அடுத்து என்ன?

இரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார். போர் தாகம் இரான் நாட்டின் உயர் தலைவர் என்பதால் இரானின் எதிர்ப்பு செயல்களுக்கு அயத்துல்லா கமேனியே காரணம் என்று அமெரிக்கா அவரை கண்காணிப்பில் வைத்திருந்தது. அமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் கூறியுள்ளார். இந்த தடை அறிவிப்புக்குப் பின்னர் சாரிஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் நிர்வாகம்…

Read More

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: புலனாய்வு விஷயங்களில் இந்தியாவின் உதவி தேவை

இந்தியாவுடன் புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராணுவ தளபதி இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச பயங்கரவாத குழு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், அருகில் உள்ள பிரதான நாடான இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் பாரிய தொடர்பு காணப்பட வேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னணியில், நாட்டின் பாதுகாப்பு தற்போது முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். ஒரு நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு அசம்பாவித…

Read More
1 184 185 186 187 188 425