சர்கார் – சினிமா விமர்சனம்

சர்கார் – சினிமா விமர்சனம்

துப்பாக்கி, கத்தி வரிசையில் ஏ. ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் சர்கார். படம் வெளியாகும் முன்பு படத்தின் கதை தொடர்பாக நடந்த சர்ச்சை மற்றும் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு என அனைத்தும் சர்கார் திரைப்படம் குறித்து ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது. தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய அமெரிக்காவிலிருந்து வரும் விஜய், தனது வாக்கை வேறு யாரோ போட்டு விட்டார் என்று அறிந்தவுடன் தனது வாக்குரிமையை பெற நடத்தும் போராட்டமும், பின்னர், இதனை போல தங்களின் உரிமைகளை பெற மக்களை போராட தூண்டுவதும்தான் கதை. அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின்…

Read More

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் கோலாகலமாக தீபாவளி திருநாள்

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் கோலாகலமாக தீபாவளி திருநாள்

ராமர் பிறந்த இடமான அயோத்தியில் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தென்கொரிய அதிபர் மனைவி கிம்ஜங் ஷூக் பங்கேற்கிறார். மேலும் சரயூ நதிக்கரையில் 3 லட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. நாடு முழுவதும் மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணிந்தும் ,பட்டாசு வெடித்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் வருகின்றனர். அயோத்தில் மாநில அரசு சார்பில் பெரும் தீபாவளி கொண்டாடட்டதிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உபி., முதல்வர் யோகி மற்றும் கவர்னர் ராம்நாயக், அண்டைய மாநில கவர்னர்கள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். சிறப்பு விருந்தினராக தென்கொரிய அதிபர் மனைவி கிம்ஜங் ஷூக் பங்கேற்கிறார். இந்த விழாவில் உபி., முதல்வர் யோகி ஆதித்யாநாத் ராமர் கோயில் தொடர்பாக முக்கிய…

Read More

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது – இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது – இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூர்யா திட்டவட்டமாக தெரிவித்தார். இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அதிபரின் இந்த நடவடிக்கையை ஏற்காத விக்ரமசிங்கே, தானே பிரதமராக தொடர்வதாகவும், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் அதிபரை கேட்டுக்கொண்டார். இந்த பலப்பரீட்சையை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை அதிபர் முடக்கிவைத்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகளால் இலங்கை அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது….

Read More

நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகர் பதவியேற்பு: ரணில் கட்சி எம்பிக்கள் இருவர் கைது- தமிழ் எம்பிக்களை இழுக்க ராஜபக்ச தீவிரம்

நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகர் பதவியேற்பு: ரணில் கட்சி எம்பிக்கள் இருவர் கைது- தமிழ் எம்பிக்களை இழுக்க ராஜபக்ச தீவிரம்

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்றுள்ளார்.இதனிடையே ரணில் விக்ரம சிங்க கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க் கள் நேற்று கைது செய்யப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க கடந்த 26-ம் தேதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதேநாளில் நாட்டின் புதிய பிரதம ராக மஹிந்த ராஜபக்சவுக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி நீக்கத்தை ஏற்க மறுத் துள்ள ரணில், “நானே பிரதமராக நீடிக்கிறேன்” என்று அறிவித்துள் ளார். ஜனநாயக மரபின்படி ரணில் தான் பிரதமர் என்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்ய அங்கீகரித்துள்ளார். பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு வரும் 14-ம் தேதி நாடாளு மன்றம்…

Read More

இரான் மீது இதுவரை இல்லாத அளவு தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

இரான் மீது இதுவரை இல்லாத அளவு தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை இரான் மீது இன்று விதிக்கவுள்ளது. இரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது. இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும். ஞாயிறன்று ஆயிரக்கணக்கான இரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர். தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இரான் இடையே முரண்களை ஏற்படுத்திய டெஹ்ரானில் ஆக்கிரமிப்பு செய்த அமெரிக்க தூதரகத்தின் 39ஆவது ஆண்டு தினத்தில்…

Read More

இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்

இலங்கை சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசும் ராஜபக்சே மகன்

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய ராஜபக்சே மகன் நமல், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேரத்தில் ஈடுபட்டு உள்ளார். 2009–ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான உச்சக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களை ராணுவம் கைது செய்தது. அதன்பிறகும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் ஏராளமான தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இவர்கள் அனைவரும் தற்போது இலங்கையில் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழர் கட்சிகள் கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. தற்போது, இலங்கையில்…

Read More

கங்கை நதியில் சரக்கு படகு இயக்கும் திட்டம்

கங்கை நதியில் சரக்கு படகு இயக்கும் திட்டம்

நாட்டில் முதல் முறையாக, உள்நாட்டு நீர் வழி போக்குவரத்து திட்டம் மூலம், சரக்கு படகு இயக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கங்கை நதியில் இயக்கப்பட்ட சரக்கு படகை, பிரதமர் நரேந்திர மோடி, 12ல் வாரணாசியில் வரவேற்க உள்ளார். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் இருந்து, கங்கை நதியில், பெப்சிகோ நிறுவனத்தின், 16 கன்டெய்னர்கள் ஏற்றப்பட்ட சரக்கு படகு, எம்.வி., – ஆர்.என்.தாகூர், இன்று புறப்பட்டது. இந்த கன்டெய்னர்களில், பெப்சி நிறுவனத்தின் உணவு மற்றும் குளிர்பான தயாரிப்புகள் உள்ளன. சரக்கு படகு பயணத்தை, கப்பல் துறை செயலர் கோபால் கிருஷ்ணா மற்றும் பெப்சிகோ நிறுவன உயரதிகாரிகள், கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த படகு, 12ல், உ.பி., மாநிலம், வாரணாசியை…

Read More

தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் 24 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.44.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.டி.ஓ., பொதுப்பணித்துறை, டாஸ்மாக், அறநிலையத்துறை, மாநகராட்சி மற்றும் ஆவின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோனை நடத்தினர். சென்னை, வேலூர், தேனி, நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 24 அரசு அலுவலகங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் ரூ.44.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக வேலூர் ஆவின் தலைமை அலுவலகத்தில் மட்டும் ரூ.14.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் வடக்கு, தெற்கு டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில் ரூ.1.32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் கணக்கில் வராத பணம்…

Read More

தலைமைத் தேர்தல் ஆணையாளர்: திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ)

தலைமைத் தேர்தல் ஆணையாளர்:   திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ)

திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ). இவர் அத்தாட்சிப் படுத்தப்பட்ட கணினி கட்டமைப்புத் துறை நிபுணர். ஒன்ராறியோ மாகாண அரச நிறுவனமொன்றில் கணினி கட்டமைப்புத் துறை நிபுணத்துவ ஆலோசகராக பணிபுரிந்து வருபவர். தொலைக்காட்சி – வானொலி விமர்சகர். மற்றும் கலை நாடகத் துறை ஆர்வலர். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னை நாள் அவைத் தலைவரும் ஆவார். தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள்: செல்வி லக்சுமி லோகதாசன் (அவுஸ்திரேலியா, சிட்னி). இவர் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தில் சட்டவியல் மற்றும் சர்வதேச கற்கையியல் துறைகளில் இறுதி ஆண்டு மாணவர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இளைய தலைமுறை பெண் எனும்…

Read More

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய தேர்தல் ஆணையாளராக ரொரென்ரோ வாழ் பொன் பாலராஜன் நியமனம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய  தேர்தல் ஆணையாளராக ரொரென்ரோ வாழ் பொன் பாலராஜன் நியமனம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் பொறுப்பில் மேற்கொள்ளப்படும். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுத்த…

Read More
1 226 227 228 229 230 425