யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தின் அபிவிருத்திக்காக கனடாவில் இயங்கிவரும் சுருதி லய இசைக் கல்லூரி வழங்கும்

யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மன்றத்தின் அபிவிருத்திக்காக கனடாவில் இயங்கிவரும்  சுருதி லய இசைக் கல்லூரி வழங்கும்

“ பன்னிரண்டு நரம்புகள்” (Twelve Strings) என்னும் இசை நிகழ்ச்சி நவம்பர் மாதம் 9ம் திகதி ஸ்காபுறோவில் அமைந்துள்ள தமிழிசைக் கலாமன்ற கலையரங்கில் நடைபெறவுள்ளது

Read More

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரிக்கின்றார் ஜனாதிபதி

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரிக்கின்றார்  ஜனாதிபதி

கைவசம் இன்னும் துரும்புகளை தேவைப்படும் போது யுஎன்பி க்கு எதிராகப் பயன்படுத்துவேன் என எச்சரித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, நான் ஒரு துரும்பை மாத்திரமே பயன்படுத்தியுள்ளேன். இன்னும் துரும்புகள் என்னிடம் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதனை பயன்படுத்தலாம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எங்களிடம் தேவையான பெரும்பான்மை இருக்கின்றது. இதனால் எனது தீர்மானங்களை நான் எக்காரணத்திற்காகவும் இடையில் நிறுத்தப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 14ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சியினரை கேட்டுக்கொள்வதாகவும் இல்லையென்றால் அரசியலமைப்பிற்கு ஏற்றவாறு செய்யக்…

Read More

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க திட்டங்கள் தயார் என்கிறார் ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார்

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க திட்டங்கள் தயார் என்கிறார் ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க கருத்து வெளியிடுகையில்,“பதவிகள், சலுகைகள், மற்றும் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மைத்திரி- மகிந்தவினால் முன்னெடுக்கப்படும் இந்த சதித் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். முதலில் இந்த அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே ஜேவிபி செயற்பட வேண்டியுள்ளது. இந்த சதித் திட்டம் நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேறும் தோற்கடிக்கப்பட வேண்டும். எனவே, நாளை ஜேவிபி நான்கு முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தவுள்ளது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை…

Read More

விகாரைகளுக்கு சென்று வழிபட்டாலும் ஜனாதிபதி மைத்திரி பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என்கிறார் உயன்கொட

விகாரைகளுக்கு சென்று வழிபட்டாலும் ஜனாதிபதி மைத்திரி பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார் என்கிறார் உயன்கொட

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்த அதிகாரத்தையே முறையற்ற விதத்தில் செயற்படுத்துகின்றார்.அத்துடன் அவர் விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும்; பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையும் புறந்தள்ளி செயற்படுகின்றார். என அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். மனிதனுக்கு காணப்பட வேண்டிய சாதாரண குணங்கள் அனைத்தையும் புறந்தள்ளி செயற்படுகின்றார். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும்…

Read More

மாவீரர் புகழ் பாடும் மகத்தான மாதமாம் கார்த்திகையை நாம் பக்தியோடு பூசிப்போம்!!

மாவீரர் புகழ் பாடும் மகத்தான மாதமாம் கார்த்திகையை நாம் பக்தியோடு பூசிப்போம்!!

நிறைவேற்று எமது தமிழினத்தில் பிறந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி, சேவைகளையும் சாதனைகளையும் அரிய கண்டுபிடிப்புக்களையும் எமக்காய் அளித்து விட்டு இவ்வுலக வாழ்வை நீத்த இலட்சக் கணக்கானவர்கள் எமது நினைவு வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.அவர்களில் பலர் நேர்மையான அரசியல்வாதிகளாய், அறிவு பசிக்கு தீனி இட்ட ஆசிரியப் பெருந்தகைகளாய், உயிர்களைக் காப்பாற்றிய வைத்தியப் புண்ணியர்களாய், பக்தியை பரப்பி நின்று எமக்கு நல்லுபதேசங்களை வழங்கிய ஆன்மிகப் பெரியோர்களாய் திகழ்ந்தவர்கள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வாறாக நாம் நன்றியுடன் கொண்டாடி மகிழ்ந்தவர்களின் நினைவலைகள் ஒரு புறம் காற்றில் பறந்த வண்ணம் இருக்க எம் இதயங்களில் என்றும் கடவுளர்களாய் வீற்றிருக்கும் மாவீரர்கள் என்னும் தியாகிகளை நாம் என்றும் மறக்கவே இயலாது….

Read More

இலங்கை பார்லி.யை கலைக்க முடிவா?

இலங்கை பார்லி.யை கலைக்க முடிவா?

இலங்கை பார்லிமென்ட்டை கலைக்க திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது. இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதிபர் வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், ஆதரவு அளித்ததையடுத்து சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர். கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா திடீரென யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்து பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து அவரையே பிரதமராகவும் நியமித்தார்.இது, இலங்கையில், பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. ரணிலும், ராஜபக்சேயும்…

Read More

கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழப்பு

கலிபோர்னியா இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தெளசன்ட் ஒக்ஸ் என்ற பகுதியில் உள்ள நடன விடுதியில் ஆட்டம், பாட்டம் நடந்து கொண்டிருந்த போது ஒருவர் துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு தள்ளினார். இதில் பாதுகாப்பிற்கு இருந்த ஒரு போலீஸ்காரர் உள்பட 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. காயமுற்ற 10க்கும் மேற்பட்டார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டவர் நடன விடுதியில் இறந்து கிடந்தார். அவர் யார் என்ன காரணத்திற்காக சுட்டார் என விசாரிக்கப்பட்டு வருகிறது.

Read More

ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னையில் இன்று( நவ.,8) அவர் அளித்த பேட்டி:உதவியாளர் மறைவு தாங்க முடியாத துயரம். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். தமிழுக்கு வீரம் முக்கியம் என எடுத்துரைத்த வீரமாமுனிவர் பிறந்தநாளை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது. கோழைகள் போல இப்போது செயல்படுகின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா? சட்ட அமைச்சர் சண்முகம் சொன்னது போல, சர்க்கார் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர்., படங்கள் பிரச்னைகளை ஏற்படுத்தியது. இல்லை. நடிகர் விஜய் தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆராக…

Read More

இந்திய அணி கேப்டன் ரோகித் சதம் அடித்தார்: இந்தியா வெற்றி; தொடரை கைப்பற்றி அசத்தல்

இந்திய அணி கேப்டன் ரோகித் சதம் அடித்தார்: இந்தியா வெற்றி; தொடரை கைப்பற்றி அசத்தல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி-20’ போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சதம் அடித்தார். இவரது விளாசல் கைகொடுக்க இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது ‘டுவென்டி-20’ லக்னோவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக புவனேஷ்வர் இடம் பிடித்தார். இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், ஷிகர் தவான் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. தாமஸ் பந்துவீச்சில் தவான்…

Read More

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது – இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது – இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் திட்டவட்டம்

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூர்யா திட்டவட்டமாக தெரிவித்தார். இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அதிபரின் இந்த நடவடிக்கையை ஏற்காத விக்ரமசிங்கே, தானே பிரதமராக தொடர்வதாகவும், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் அதிபரை கேட்டுக்கொண்டார். இந்த பலப்பரீட்சையை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை அதிபர் முடக்கிவைத்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகளால் இலங்கை அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது….

Read More
1 225 226 227 228 229 425