இலங்கை பார்லிமென்ட்டை கலைக்க திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது. இலங்கையில், 2015ல் நடந்த அதிபர் தேர்தலின் போது, யு.பி.எப்.ஏ., எனப்படும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும், யு.என்.பி., எனப்படும், ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதிபர் வேட்பாளரான, மைத்ரிபால சிறிசேனவுக்கு, ரணில் விக்கிரம சிங்கேவின், ஆதரவு அளித்ததையடுத்து சிறிசேன, அதிபராகவும், ரணில், பிரதமராகவும் பதவியேற்றனர். கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா திடீரென யு.என்.பி., உடனான கூட்டணியை முறித்து பிரதமர் பதவியில் இருந்து ரணிலை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து அவரையே பிரதமராகவும் நியமித்தார்.இது, இலங்கையில், பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. ரணிலும், ராஜபக்சேயும்…
Read More