இலவசம் என்று அறிவித்துவிட்டு கட்டணம் வாங்கியதால் மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
முதல்வர் தொடங்கி வைத்த மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தப்பட்டது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை கடந்த 28-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். சில வாரங்களில் அணை முழுவதும் தூர்வாரி முடிக்கப்படும். அதனால் அணையின் கொள்ளளவு 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். ஆடம்பரமாக தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் 8 மணி நேரத்தில் முடங்கியிருக்கிறது. அணையில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் தேவையான அளவுக்கு இலவசமாக அள்ளிச் செல்லலாம் என்று முதல்வர் அறிவித்திருந்ததால், வண்டல்…
Read More









