காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுமாறு அறிவுறுத்தினார்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அவரின் 60 ஆண்டு கால சட்டமன்ற பணிகள் பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த ராகுல்காந்தி நேற்று காலை தமிழக, புதுச்சேரி கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதுச்சேரி மாநில மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண் டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து பகல் 12 மணிக்கு தி.மு.க. தலைவர்…
Read More









