போயஸ் தோட்ட இல்லத்தில் தீபா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டதாகத் தகவல்

போயஸ் தோட்ட இல்லத்தில் தீபா பாதுகாவலர்களால் தடுக்கப்பட்டதாகத் தகவல்

ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்குள் நுழைய தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. போயஸ் தோட்ட இல்லத்தின் வாயிலருகே தீபா தடுத்து நிறுத்தப்பட்டார். போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீபாவும் அவரது ஆதரவாளர்களும் பாதுகாவலர்களுடன் வாக்குவாதம் புரிந்ததாகவும் தெரிகிறது. தீபா கணவர் மாதவனும் போயஸ் தோட்டத்துக்கு வந்தார். இது குறித்து தீபா கூறும்போது, “என் சகோதரர் தீபக் அழைத்ததால் போயஸ் கார்டன் வந்தேன். ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்ய தீபக்தான் அழைத்தார். என்னையும் என் கணவரையும் பாதுகாவலர்கள் தாக்கினர், செய்தியாளர்களையும் தாக்கினர். நாங்கள் தப்பித்து வெளிவர காரணமே செய்தியாளர்கள்தான். ஆனால் தீபக், ‘தீபாவை யாரும் தடுக்கவில்லை’ என்று கூறியதாக தொலைக்காட்சி செய்திகள்…

Read More

மலேசியாவில் நுழைய அனுமதி மறுப்பு: எல்லாவற்றுக்கும் இலங்கை அரசே காரணம் – வைகோ குற்றச்சாட்டு

மலேசியாவில் நுழைய அனுமதி மறுப்பு: எல்லாவற்றுக்கும் இலங்கை அரசே காரணம் – வைகோ குற்றச்சாட்டு

மலேசியாவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பில் பங்கேற் பதற்காக கோலாலம்பூர் சென்றேன். எனது பெயர் கருப்புப் பட்டியலில் இருப்பதாகக் கூறி இந்தியாவுக்கு திரும்பி விடுமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறினர். இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் என்று கூறியும் என்னை அனு மதிக்கவில்லை. விமான நிலையத் தின் ஒரு அறையில் 24 மணி நேரம் தங்க வைத்தனர். அப்போது நான் தண்ணீர்கூட அருந்தவில்லை. சென்னையில் உள்ள இலங் கைத் தூதரகத்தில் அதிகாரியாக இருந்த அம்சா என்பவர், தற் போது இங்கிலாந்தில் இருக் கிறார்….

Read More

‘‘நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் தலையிடக்கூடாது’’; சுருதிஹாசன் சொல்கிறார்

‘‘நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் தலையிடக்கூடாது’’; சுருதிஹாசன் சொல்கிறார்

சென்னை, சுருதிஹாசன் ‘பெஹென் ஹோகி தேரி’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ படத்திலும் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. ‘சங்கமித்ரா’ சரித்திர படத்தில் இருந்து படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலால் விலகிவிட்டார். சுருதிஹாசனை பற்றி அடிக்கடி கிசுகிசுக்களும் வருகின்றன. லண்டன் நடிகருடன் நெருங்கி பழகுவதாகவும், அவரை காதலிப்பதாகவும் தகவல்கள் பரவின. தற்போது அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்தி இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் வந்துள்ளன. இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் கூறியதாவது:– சொந்த வாழ்க்கை ‘‘நடிகைகளும் சாதாரண பெண்கள்தான். அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. சிலர்…

Read More

‘2 மாதத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்’; நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

‘2 மாதத்தில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்’; நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

ஆலந்தூர், கபாலி திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் காலா. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 28-ந் தேதி மும்பை சென்றார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ரஜினிகாந்த் நேற்று மதியம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மீண்டும் சந்திப்பேன் காலா படத்தின் படப்பிடிப்பு திருப்திகரமாக இருந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வருகிற 24-ந் தேதி மும்பை செல்ல இருக்கிறேன். இன்னும் 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ளேன். இவ்வாறு…

Read More

எப்படி பந்து வீசினாலும் வெளுத்து வாங்கிய ஷேவாக்’ அஸ்வின் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

எப்படி பந்து வீசினாலும் வெளுத்து வாங்கிய ஷேவாக்’ அஸ்வின் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் டெலிவி‌ஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ஷேவாக்கின் அதிரடி குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:– ஷேவாக் ஒருபோதும் சிக்கலானவர் அல்ல. ஆனால் அவர் எனது நம்பிக்கையை குலைத்து இருக்கிறார். இலங்கையில் டம்புல்லா மைதானத்தில் வலைப்பயிற்சியில் அவருக்கு பந்து வீசினேன். ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய முதல் பந்தை அவர் கட் ஷாட் அடித்தார். அடுத்து ஆப் ஸ்டம்ப் மீது வீசிய பந்தையும் கட் ஷாட் அடித்தார். மிடில் ஸ்டம்ப் மீது வீசிய பந்தையும் கட் ஷாட் ஆடினார். அடுத்து லெக் ஸ்டம்பில் வீசிய பந்தையும் மீண்டும் கட் ஷாட் செய்தார்….

Read More

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தியது இலங்கை தவானின் சதத்திற்கு பலன் இல்லை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தியது இலங்கை தவானின் சதத்திற்கு பலன் இல்லை

லண்டன், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 322 ரன்களை ‘சேசிங்’ செய்து வெற்றி பெற்றது. தவானின் சதம் வீண் ஆனது. சாம்பியன்ஸ் கோப்பை 8 அணிகள் இடையிலான 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கி லாந்தில் நடந்து வருகிறது. இதில் லண்டன் ஓவலில் நேற்று அரங்கேறிய 8-வது லீக்கில் இந்தியாவும், இலங்கையும் (பி பிரிவு) பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் மூன்று மாற்றமாக காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் மேத்யூஸ் அணிக்கு திரும்பினார். இதே போல் குணதிலகா, திசரா பெரேராவும் இடம் பிடித்தனர். தரங்கா, கபுகேதரா, பிரசன்னா நீக்கப்பட்டனர். சிறப்பான தொடக்கம்…

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகெங்கும் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றி வருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும் என இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் வி. துரைராஜா மற்றும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளவென ஐரோப்பிய நாடுகள் வட அமெரிக்க நாடுகள் அவுஸ்த்திரேலியா, ஸ்கென்நேவியன் நாடுகள், தென்னாபிரிக்கா பர்மா, மொறிசியஸ் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் அந்தமான், போன்ற நாடுகளிலிருந்து அறிஞர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் கலை இலக்கியவாதிகளும் பத்திரிகையாளர்களும்…

Read More

விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தேசிய அளவில் கொள்கை முடிவு தேவை: அன்புமணி

விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தேசிய அளவில் கொள்கை முடிவு தேவை: அன்புமணி

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்தியப் பிரதேசத்தில் வேளாண் விளைப்பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்கக்கோரியும், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உணவு படைக்கும் கடவுள்கள் விஷயத்தில் மென்மையையும், பொறுமையையும் கடைபிடிக்காதது கண்டிக்கத்தக்கதாகும். இந்தியாவில் வேளாண்துறை வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும். ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட…

Read More

கட்சி ஒற்றுமையை சசிகலா விரும்புவதாக தகவல்: அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பு முயற்சியில் சசிகலா தம்பி திவாகரன்

கட்சி ஒற்றுமையை சசிகலா விரும்புவதாக தகவல்: அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பு முயற்சியில் சசிகலா தம்பி திவாகரன்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் புயல் வீசி வருகிறது. அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்று இரண்டாக பிரிந்த அ.தி.மு.க. தற்போது 3 ஆக உடைந்துள்ளது. அ.தி.மு.க. (அம்மா) அணியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரை ஆதரித்து வந்த 122 எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்க போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா மனமாற்றம் அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் பெற்று திரும்பியதும், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர்…

Read More
1 338 339 340 341 342 425