முதல்வருடன் 4 மூத்த அமைச்சர்கள்: தமிழக அரசை வழிநடத்தும் 5 பேர் குழு
தமிழக அரசின் அனைத்து முடிவுகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், செங்கோட்டை யன் உள்ளிட்ட 4 அமைச்சர் களும் இணைந்து எடுத்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கிய தைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். கடந்த 18-ம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் அவர் தனது அரசின் பெரும் பான்மையை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி தலைமைச் செயலகம் வந்த அவர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய அறையில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது 500 மதுக்கடைகள் மூடல், இரு சக்கர வாகனம் வாங்க பெண்களுக்கு ரூ….
Read More









